Thursday, August 11, 2016

விளையாட்டிலும் ஜாதியா?


சோபாடே என்று சுருக்கமாக அறிவிக்கப்படும் சோபா ராஜடேங்கா என்பவர் ஊடக உலகிற்கு அறிமுக மானவர் தான். மகாராட்டிர பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர். விளம்பர அழகியாக தொழில் தொடங்கி, தொலைக்காட்சிகளில் தம் முகத்தை அடிக்கடி காட்டிக் கொள்வார்.

ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தீபா கரம்சார் என்பவர் இந்தியா  சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை எட்டிய சாதனையாளர். அவரைப் பற்றி சோபாடே என்ன எழுதுகிறார்?

"ஏ, கருப்பி, எங்கள் பணத்தை வீணாக்காதே. செல்பி எடுத்துவிட்டு, ஒழுங்காக இந்தியா திரும்பு" என்கிறார்.

என்னதான் ஊடகத்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், உரிமையை  ஒரு கட்டுக்குள்  வைத்துக் கொள்ளக் கடமைப்பட்டவரில்லையா?
விமர்சனம் செய்யட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. அது என்ன 'கருப்பி?'
சிவப்பிகள் எல்லாம் வெற்றி பெற்று விட்டார்களா? 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் கதி ஒலிம்பிக்கில் சிரிப்பாய் சிரிக்கிறதே!

பெரும்பாலும் பஜனை பாடிவிட்டு, பகவானை பூஜையறையில் வழிபட்டும், சகுனம் பார்த்தும்  ஒலிம்பிக்கில் போட்டி யிடும் இந்தியர்கள் சாதித்துக் கிழித்தது என்ன?' இவற்றை எல்லாம் செய்யாத சீனாக்காரன் வெளுத்து வாங்குகிறானே!

இந்திய வீரர்களுக்குப் பாதிப்பு என்பது 'உளவியல்' ரீதியானது என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு தெரியுமா?

விளையாட்டிலும்கூட ஜாதி பார்க்கும் பார்ப்பனரைத் தெரிந்து கொள்க!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...