Saturday, June 25, 2016

அறிவியல் ஆராய்ச்சிக் குழு உறுதிமொழியில் ‘கடவுள்’ ஏன்? அகில இந்திய பகுத்தறிவாளர் கழக தலைவர் நரேந்திர நாயக் கேள்வி

மங்களூரு, ஜூன் 24 இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் விண்ணப்பத் தில் கடவுள் மற்றும் திருமணம் தொடர்பான பகுதிகள் இடம் பெற் றிருந்தன.
அந்தப்பக்கத்தை அறவே விண்ணப்பத்திலிருந்து நீக்கிட அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுவிடம் இந்திய பகுத்தறிவாளர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுவின் ஆய் வாளர்களாக, பணியாற்றுப வர்களாக சேருபவர்கள் தங் களின்  விண்ணப்பத்தில் கடவு ளின் கிருபையைக் கோருவது போலவும், தங்களின் ஆய் வினை கடவுள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவியல் ஆய்வாளர்களின் விண்ணப்பத் தில் வாசகங்கள் இடம் பெற்றி ருந்துள்ளன.
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குநர் கிரீஷ் சாஹ்னிக்கு கடிதத்தின்மூலமாக இந்திய பகுத்தறிவாளர்கழகம் இத்தகவலைசுட்டிக்காட்டி, அந்த பக்கத்தையே விண்ணப் பத்திலிருந்து நீக்கக்கோரியது.
நரேந்திர நாயக்
இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் நரேந்திர நாயக் அக்கடிதத்தில் குறிப் பிடும்போது,
“விண்ணப்பத்தில் கடவுள் குறித்த சொல் இடம் பெற்றிருப் பது ஏன் என்று பகுத்தறிவா ளர்களாகிய எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறி வியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் அடுத்த புத்தாயிரத்துக்கான ஆராய்ச்சி களில் கடவுள்குறித்த ஆராய்ச் சித் திட்டம் உள்ளதா? எந்த கடவுள்குறித்து அவர்கள் குறிப் பிடுகிறார்கள் என்று எங் களுக்குத் தெரியவில்லை.
பல இலட்சக்கணக்கிலான இந்து வழிபாட்டிடங்கள் அல் லது தாடியுடன் உள்ள ஆபிர காம் மலைமீது அமர்ந்திருக்கும் படம் அல்லது கடவுள்குறித்த சித்தரிப்புகளில் பழங்குடியினர் மத்தியில் வெவ்வேறு வகைகள் இருந்துள்ளன.
நாத்திகராக, கடவுள் நம் பிக்கை இல்லாதவராக இருக் கும் ஒருவர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவில் ஆராய்ச்சி பணிகளை செய்ய வேண்டுமானால், அதற் கான விண்ணப்பத்தில் ஏற்கப் படுகின்ற உறுதிமொழியில் நம் பிக்கை கொண்டிராத கடவுள் என்று கூறப்படுவதன்பெயரால் உறுதி ஏற்பதிலிருந்து விதி விலக்கு அளித்திட வேண்டும். நாத்திகர்கள் மட்டுமல்லாமல் பவுத்தர்கள், சமணர்கள் ஆகி யோரும் அதுபோன்ற கடவுள் மீதான நம்பிக்கை இல்லாதவர் களாக இருப்பதால், அவர்களுக் கும் இதுபோன்ற உறுதிமொழி ஏற்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.
அரசமைப்பு பிரிவு 51-கி(பி)
மதசார்பற்ற ஜனநாயக நாட் டில் நம்பிக்கை கொள்வதா இல்லையா என்பதிலும் சுதந் திரம் இருக்கவேண்டும். கட வுள் என்கிற ஒன்று இருக்கிறதா  என்று இதுவரையிலும் நிரூபிக் கப்படாத நிலையில், இல்லாத ஒன்றின்மீது உறுதி ஏற்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியா ளர்களை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு  கட்டாயமாக்குவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இதை வன்மையாகக் கண்டிப்ப துடன் உடனடியாக விண்ணப் பத்தின் உறுதி மொழிப்படிவத்திலிருந்து அந்த சொற்களை நீக்கிட வேண்டும். இது அரச மைப்புச் சட்டத்தின் 51-கி(பி) பிரிவுக்கு எதிரானதாகும். ஒவ் வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு மற்றும் மனிதநேயம் ஆகிய வற்றை வளர்க்க வேண்டும் என்று அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...