Saturday, November 7, 2015

தொழில் நிறுவனங்களின் நலன்கள்- மதவாதக் கொள்கைகள் இரண்டும் சேர்ந்ததுதான் புதிய கல்விக் கொள்கை

தொழில் நிறுவனங்களின் நலன்கள்- மதவாதக் கொள்கைகள்
இரண்டும் சேர்ந்ததுதான் புதிய கல்விக் கொள்கை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; பொதுக் கல்விக்கான மாநில மேடை எச்சரிக்கை
சென்னை, நவ.6_ மத்திய பிஜேபி அரசு அறிமுகப்படுத்தும் புதிய கல்விக் கொள்கை என் பது தொழிலதிபர்களுக் கும், மதவாதத்துக்கும் துணை போகும் கல்வி முறைதான்  இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் எதிர்க்க வேண்டும் என்று சென் னையில் நடைபெற்ற கருத்தரங்கில் எச்சரிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக் கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர் கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென் னையில் தேசிய கருத்தரங் கம் வியாழக்கிழமை நடை பெற்றது. இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவ னத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமா னுஜம் பேசியது:
புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலி ருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள லாம். இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச் னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்சினையாகவே பார்க் கிறது. கல்வியின் ஆன் மாவை இது தொட வில்லை. இந்த விவாதப் பொருள் களில் ஆசிரியர்கள் மிக வும் தரக்குறைவானவர் களாகப் பார்க்கப்படுவதை அறிந்துகொள்ளலாம். 
அதிக எண்ணிக்கையி லான மக்கள் உயர் கல்வி பெறுவதில்லை, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பது தான் நமது மிகப்பெரிய பிரச்சினை. ஆனால், இந் தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உரு வாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கை யின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சமூகத்தில் உள்ள பிரிவுகளையும், வேறுபாடுகளையும் நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. சமூக அவலங்களைப் போக்கும் கருவியாக கல்வியை இந்தப் புதிய கொள்கை பார்க்கவே யில்லை.  மிக முக்கியமாக கலாசார ஒருமுகத்தன்மை யையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் நிறுவனங்களின் நலன்கள், 
மதவாதக் கொள் கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது. எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படை யான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங் கள் தேவையில்லை என் றார் அவர். சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது
அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப் பின் தலைமைக்குழு உறுப் பினர் பேராசிரியர் அனில் சத்கோபால்: உலக வர்த் தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதன் மூலம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந் தியா திறந்துவிட உள்ளது. நைரோபியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லை என்றால், அதை எப்போ தும் திரும்பப் பெற முடியாது.  கல்வி என்ற நிலையில் இருந்து சந்தை யில் விற்கப்படும் பொரு ளாக அது மாற்றப்பட உள்ளது. மாணவர்கள் நுகர்வோர்களாகவே பார்க்கப்படுவர். உயர் கல்வியை பணம் கொடுத்து மட்டுமே கற்க முடியும் என்ற நிலை உருவாகும். 
எனவே, இதை அனை வரும் எதிர்க்க வேண்டும்.  இப்போதைய உயர் கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அதை சந் தைக்குத் திறந்துவிடுவது தீர்வாகாது என்றார் அவர். மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி: மத்திய அரசு புதிய கல்விக் கொள் கையை உருவாக்குவதற் காக குழு அமைத்துள் ளது. இந்தக் குழுவில் ஒரே யொரு கல்வியாளரைத் தவிர  மீதமுள்ள அனை வரும் அதிகாரிகள்தான். உலக வர்த்தக அமைப் பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடு வதன் மூலம் உயர்கல்வி முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக மாறும். இந்த ஒப்பந்தம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங் களுக்கு திறந்துவிடுகிறது.
 இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெற வில்லையென்றால் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது. இப்போது நமது கல்விக்கும், ஜனநா யகத்துக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள் ளது. மக்களுடன் இணைந்து மிகப்பெரிய போர்க்குரல் எழுப்பினால் மட்டுமே மீட்சி உண்டு என்றார் அவர். புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை கல்வி யாளர்  எஸ்.எஸ்.ராஜகோ பாலன் வெளியிட, தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தின் செயலாளர் ஜி.முனு சாமி பெற்றுக் கொண் டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டோமினிக் ராய்ஸ், தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தின் பொருளாளர் கே.செந்தமிழ்ச்செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்னசபாபதி, பேராசிரியர் மணி, பேரா சிரியர் எஸ்.மோகனா உள் ளிட்டோர் இந்தக் கருத் தரங்கில் பங்கேற்றனர்.



இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...