Saturday, November 7, 2015

சகிப்பின்மைக்கு காரணமான பா.ஜ.க. அரசை கண்டித்து அருந்ததிராய் தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவு

சகிப்பின்மைக்கு காரணமான பா.ஜ.க. அரசை கண்டித்து
பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் திரைக் கலைஞர்கள் 24 பேர் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவு
புதுடில்லி, நவ.6- நாட்டில் நிலவி வரும் சகிப் பின்மைக்கு காரணமான பாஜக அரசின் மவு னத்தைக் கண்டித்து, திரையுலகைச் சேர்ந்த 24 கலைஞர்கள் தங்கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள் ளனர்.இந்தப் புதிய பட்டியல் மூலம், வலுத்து வரும் விருது திருப்பி அளிப்புப் போராட்டத் தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந் துள்ளார். சயீத் மிர்சா, குந்தன் ஷா ஆகியமூத்த திரை இயக்குநர்கள், ஒளிப் பதிவாளர் விரேந்திர சைனி ஆகியோர் தங் களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவெடுத்துள் ளனர். 
சகிப்புத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து உட்பட மதவெறி தலை தூக்கியுள்ளதைக் கண்டித்து இவர்கள் விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். பெருகி வரும் சகிப்புத் தன்மை யற்ற போக்கு மற்றும் மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் புறக் கணிப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாக இவர்களால் முன்வைக்கப் பட்டுள்ளன. 1988-ம் ஆண்டு சிறந்த திரைக் கதைக்கான விருது பெற்ற அருந்ததிராய் தனது விருதை திருப்பியளிக் கிறார். 
மேலும் அஜய் ரெய்னா, ஒளிப்பதிவாளர் கள் ரஞ்சன் பாலித் மற்றும் மனோஜ் லொபோ, சமூக செயல்பாட்டாளரும் இயக்குநர்களுமான தபன் போஸ், சஞ்சய் காக், மதுசிறீ தத்தா, பிரதீப் கிரிஷன் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை திரும்பி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருது களை திருப்பி அளிக்கும் முடிவை டில்லி மற்றும் மும்பையில் வியாழனன்று மாலை நடைபெற்ற செய் தியாளர்கள் சந்திப்பில் இவர்கள் அறிவித்தனர். விருதை திருப்பி அளிக் கும் கலைஞர்கள் விவரம்: அருந்ததி ராய், சயீத் மிர்சா, குந்தன் ஷா, விரேந் திர சைனி, அஜய் ரெய்னா, ரஞ்சன் பாலித், மனோஜ் லொபோ, தபன் போஸ், 
சஞ்சய் காக், மதுசிறீ தத்தா, பிரதீப் கிரிஷென், சிறீபிரகாஷ், விவேக் சச்சிதானந்த், பி.எம்.சதீஷ், தருண் பாரிதியா, அமி தபா சக்ரவர்த்தி, ரபீக் இலியாஸ், சுதாகர் ரெட்டி யக்கான்ட்டி, அன்வர் ஜமால், சுதீர் பல்சானே, மனோஜ் நிதர் வால், ஐரீன் தார் மாலிக், சத்ய ராஜ் நாக்பால்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...