Saturday, November 21, 2015

நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிப்பு



எழுந்து நின்று கையொலி எழுப்பி தமிழர் தலைவருக்கு நன்றி
தெரிவித்து மகிழ்ந்தனர் பொதுமக்கள்
சென்னை, நவ.21_ சென்னை பெரியார் திடலில் நேற்று (20.11.2015) காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழை விடாமல் தொடர்ந்து பொழிந்தபோதிலும் ஏராளமானவர்கள் திராவிட உணர்வுடன் எழுச்சிபெற்று விழாவில் பங்கேற்றனர்.
காலையில் முதல் நிகழ்வாக திராவிட இயக்க வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் திரையிடல் நிகழ்ச்சி பவர்பாயிண்ட் மூலமாக திரையிடப்பட்டது.
தொடக்க நிகழ்வுக்கு வருகைதந்த அனைவரையும் கழகப்பொதச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார். இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தொடக்க உரையாக இனமானப்பேருரை  ஆற்றினார். அடுத்து உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி நீதியரசர் க.மோகன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன், பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் வாழ்த்துரை ஆற்றினார்கள். பிற்பகல் நிகழ்வாக பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பொருளாளர் கு.மனோகரன், துணை செயலாளர் மா.சேரன் முன்னிலையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன் வரவேற்றார்.
பட்டிமன்றம்
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமூக சீர்திருத்தமா? சமூக நீதியா? எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் அவர்களை நடுவராகக்கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.
சமூக சீர்திருத்தமே என்கிற அணியில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்குரைஞர் கழக சொற்பொழி வாளர் பூவை.புலிகேசி, மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் டெய்சி.மணியம்மை ஆகியோரும், சமூக நீதியே என்கிற அணியில் கழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பேராசிரியர் மணி மேகலை சித்தார்த்தன், கடலூர் மண்டலச் செயலாளர் பேரா சிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோரும் தங்களின் வாதங்களின்மூலமாக பல்வேறு வரலாற்று தகவல்களை அளித்தார்கள்.
பட்டிமன்ற முடிவில் நீதிக்கட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமூக நீதியே என்று நடுவர் பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் தீர்ப்பளித்தார்.
கருத்தரங்கம்
மாலையில் சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் என்கிற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப்பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்றார். திராவிட இயக்க ஆய்வாளர் க.திரு நாவுக்கரசு திராவிடத்தால் எழுந்தோம் என்கிற தலைப்பில்  அரிய வரலாற்றுத் தகவல்களை அளித்து தலைமை உரை யாற்றினார். அவர் உரையின் தொடக்கத்தில் நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாகுறித்து தினமணி, தி இந்து, நக்கீரன் உள்ளிட்ட இதழ்கள் மற்றும் பல்வேறு காட்சி ஊட கங்களிலும் இந்த காலகட்டத்தில் கட்டுரைகள், விவா தங்கள், செவ்விகள், கட்டுரைகள் என்று மக்களிடையே நீதிக்கட்சி நூற்றாண்டு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு காரணமானவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் என்று குறிப்பிட்டு அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலிகளின் மூலமாக நன்றியைத் தெரிவித்துக்கொள்ளச் செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவருக்கும் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சுயமரியாதை இயக்கத்ம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? எனும் தலைப்பில் திராவிட இயக்க வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ப.இரா.அரங்கசாமி, மகளிர் புரட்சி எனும் தலைப்பில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி  உரையாற்றினார்கள்.
ஒலி - ஒளி கலை நிகழ்ச்சி
திராவிடர் எழுச்சி_ஒரு வரலாற்றுப் புரட்சி எனும் தலைப்பில் திருச்சி ஜெபி ஸ்டுடியோ உதவியுடன் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் ஏற்பாட்டின்பேரில் திருச்சி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளாக நாடகம், பாடல்கள், நாட்டியங்கள்  ஆகியவற்றடன் இடையிடையே ஒலி,ஒளிக் காட்சிகள் மூலமாக நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க, திராவிட இயக்க சாதனைகள் விரிவாக, நேர்த்தியாக காட்சிப்படுத்தப் பட்டன.  ஒலி,ஒளி காட்சிகள் பல்வேறு வரலாற்று பூர்வமான தகவல்களை காட்சிப்படுத்தின.
மாணவர்களுக்கு பரிசளிப்பு
நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை 90ஆம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி திராவிட வர லாற்று ஆய்வு மய்யம் பகுத்தறிவாளர்கழகம் இணைந்து நடத்திய பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பரிசினையும், சான்றிதழையும் வழங்கினார்.
நிறைவு விழா
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் மேனாள்  தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். கருநாடக பகுத்தறிவு முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் உரையை கோ.ஒளிவண்ணன் தமிழில் மொழிபெயர்த்து வாங்கினார். முன்னதாக பேராசிரியர் கே.எஸ்பகவான்குறித்த தகவல்களை அளித்து பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அறிமுகப் படுத்தினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
நாள்முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், புதுமை இலக்கியத் தென்றல் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்கள்.
திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சைவசந்தன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தொழிலாளரணி பெ.செல்வராசு, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், செய லாளர் ஆ.வெங்கடேசன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் நன்றியுடன் இனிதே நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை திராவிடர் கழகம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டம்சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...