Tuesday, October 27, 2015

நறுக்குகள்!


அர்ஹர் மோடி!
ஹரஹர மோடி என்று சொன்னவர்கள் இப்பொழுது என்ன அடைமொழி கொடுத் துள்ளனர் தெரியுமா?
அர்ஹர் மோடி என்று புதுப்பட்டம் சூட்டியுள்ள னர். இதன் பொருள் என்ன தெரியுமா? அர்ஹர் என்றால் பருப்பு என்று பொருள். ஆக, மோடி பருப்பு சரியாக வேக வில்லை என்று மக்கள் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.
மம்தா
பிகார் தேர்தலில் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக்கு வர அவ ருக்கு ஆத ரவு அளி யுங்கள்; அவர் ஆட்சியில் பிகார் நன்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா!
மோடி சகாக்கள் தேர்த லில் மோடி மஸ்தான் பணி யில் பிரச்சாரம் செய்து கொண் டிருக்கும்போது, இன்னொரு மாநில முதலமைச்சர் இப் படிக் கூறி இருக்கும் கருத்து - அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள் மத்தியில் புதிய சிந்தனைக் கீற்றைக் கிளப்பி யுள்ளது.
பேச நா இரண்டு!
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்தால் அவர்களைக் கைது செய்வதோடு, ரூ.15 கோடி அபராதம் விதிக்கப் படும் என்று இலங்கை அதி காரி பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண் டாம். இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற் படாமல் இலங்கை பார்த்துக் கொள்ளும் என்று இலங்கை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் ஒரு பேட்டி யில் கூறியுள்ளார்.
இது யாரை ஏமாற்றிட? அதிகாரி ஒன்று சொல்லு வார்; அமைச்சர் வேறொன்று சொல்லுவாரா? அந்த அதி காரி எந்த அடிப்படையில் பேசினார்? அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார்? கேட்பவன் கேணய னாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டு கிறது என்பான் என்ற பழ மொழிதான் நினைவிற்கு வருகிறது.
மற்றொரு கொலை
காஷ்தா கிராமத்தில் பறையா குடியிருப்பில் வசித்துவருபவர் மிதிலேஷ் பாண்டே(வயது 40). இவர் தைனிக் ஜாக்ரான் எனும் இந்தி பத்திரிகையில் செய்தி யாளராக பணியாற்றி வருப வராவார். 24.10.2015 அன்று மாலை அடையாளம் தெரி யாதவர்களால் சுட்டுக்கொல் லப்பட்டார். கயா காவல் துறை கண்காணிப்பாளர் மனு மகராஜ் கூறுகையில், தைனிக் ஜாக்ரான் செய்தி யாளர் மித்திலேஷ் பாண்டே அடையாளம் தெரியாதவர் களால் சுடப்பட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொள்ளப்பட் டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்றார்.
எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், தங்களுக்கு எதிரான வர லாற்றுச் சின்னங்களையும் கொல்லுபவர்கள் - இடித்துத் தரைமட்டமாக்குபவர்களுக்குப் பெயர்தான் பாசிஸ்டுகள் - அந்த ஆட்சிதான் இப் பொழுது நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...