Wednesday, September 30, 2015

வெளிநாட்டுப் பயணத்திலும், தேர்தல் பிரச்சார மன நிலையிலேயே மோடி இருக்கிறார் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


மும்பை,  செப்.29_ வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் இந்தியப் பிரதமர் மோடி பேசும் பேச்சுகளைக் கவனித்தால் இன்னும் அவர் தேர்தல் பிரச்சார மன நிலையிலேயே இருக் கிறார் என்பதைத்தான் காட்டுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை அமெரிக்கா வில் பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்ததற்குப் பதிலடியாக, அவரது வெளிநாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் அந்நாட்டில் வாழும் இந்தியர் களிடையே பேசிய மோடி, ""நம் நாட்டில் சில அரசியல்வாதிகளும் அவர்களது மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கோடிக்கணக்கில் சொத்து குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் எனது அரசு மீது எந்த ஊழல் புகாரும் இல்லை'' என்று குறிப்பிட்டார். 
அவரது இந்தக் கருத்து காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பம் மற்றும் அவரது மருமகன் ராபர்ட் வதேரா மீதான பிரதமரின் மறைமுக விமர்சனமாக கருதப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா, டில்லியில் செய்தியாளர் களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும், அவற்றுக்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான டாலர் நிதி ஆதாரம் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 அமெரிக்காவில் மோடி பேசுகையில் தனது தாயாரைப் பற்றி குறிப்பிடும்போது உணர்ச்சிவசப் பட்டதைப் பொறுத்தவரை அவர் மீண்டும் ஒரு முறை ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அற்புதமாக நடித்துள்ளார் என்றே கூற வேண்டும். மோடி தன்னை மிக வலிமையான தலைவராக கருதிக் கொள்கிறார். ஆனால், தன்னுடன் தனது தாயாரை அவர் ஏன் தங்க வைத்துக் கொள்ள வில்லை? தாம் சிறுவனாக இருந்தபோது தேநீர் விற்றதாக மோடி கூறிக் கொள் கிறார். 
ஆனால் அது உண்மையல்ல. அவர் தனது குழந்தைப் பருவத்தில் தனது உறவினரின் உணவகத்தில் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற் றுக் கொள்ளும் பணியையே கவனித்து வந்தார். ஊழல் விவகாரத்தைப் பொறுத்த வரை மோடி இரட்டை வேடம் போடு கிறார். 
லலித் மோடி விவகாரத்தில் தொடர்புடைய தனது அமைச்சரவை சகாக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட் டுக்கு ஆளான தன் கட்சி முதல்வர்கள் மீதும் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் ஆனந்த் சர்மா. மராட்டிய மாநில காங்கிரஸ்... மோடியின் விமர்சனம் தொடர்பாக, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அனந்த் காட்கில், மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா சென்றுள்ள மோடி அங்கு காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். 
வெளியுறவுக் கொள்கை குறித்த நம் நாட்டின் கருத்துகளைப் பேசாமல் தனது நாட்டு எதிர்க்கட்சி (காங்கிரஸ்) குறித்து அங்கு குறைகூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் நாட்டின் நற்பெயருக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மக்கள வைத் தேர்தல் முடிந்து ஓராண்டு கடந்துவிட்டநிலையில், மோடி இன்ன மும் தேர்தல் பிரச்சார மனநிலை யிலேயே இருப்பதாகத் தோன்றுகிறது என்றார் அனந்த் காட்கில். இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம் இதனிடையே, மோடியின் கருத்து தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது: மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது பிரதமரைப் போல் நடந்து கொள்வதில்லை. 
அவர் இன்னமும் தேர்தல் பிரச்சார மனநிலை யிலேயே இருப்பது போல் தோன்று கிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் போலவோ பாஜக நிர்வாகி போலவோ நடந்து கொள்ளாமல் இந்தியப் பிரதம ராக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...