Monday, July 6, 2015

கோடைக்கானலைக் கண்ட மிஷனரிகளும் குறிஞ்சி ஆண்டவர் வரலாறும்


-மு.வி.சோமசுந்தரம்
தமிழைக் காதலித்த மிஷனரி
பேராயர் ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், ஜோசப் பெஸ்கி இந்தப் பெயர்களெல்லாம், நெடுஞ்செழியன், அன்பழகன், இளம்வழுதி போன்ற தமிழ்ப் பெயர்களாக இல்லை. என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தமிழ் மொழியின்மேல் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கியங்கள் அவர்களை ஈர்த்தன.
ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டனர். தமிழ் மொழியின் செழு மையை, செம்மொழியின் சீர்மையை, உயர்வை உலகறிய எடுத்துக் கூறினர். கடல் கடந்து வந்து கைம்மாறு கருதாது கன்னித் தமிழின் மேன்மையைக் காசினி எங்கும் கொண்டு சென்றனர்.
இவர்களின் தொண்டினைப் போற்றும் நேரத்தில், உண்டு கெடுக்கும் ஓரினம், தமிழ்ப் பயிர்க் கொல்லியாக இருந்து தமிழ் நீச்சமொழி, தரம் தாழ்ந்த மொழி என கொச்சைப்படுத்தும் குடிலன்களாக வலம் வந்து கொண்டிருப்பது வேத னையை ஏற்படுத்துகிறது.
சமயமா? தொண்டா?
மேலே குறிப்பிட்ட மேலை நாட் டவர்கள், தமிழ் கற்கத் தமிழகம் வந்த வரல்லர். அவர்கள் சமயத்தைப் பரப்பு வதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் மிஷனரி அமைப்பைச் சேர்ந் தவர்கள். சமயப் பணியை நெஞ்சில் ஏந்தி, பொதுத் தொண்டை களப் பணியாக மேற்கொண்டு செயல்பட்ட வர்கள்.
மிஷினரி மக்கள். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம், இங்கு மலை சூழ்ந்த பகுதியில் வாழும் பூர்வீகக் குடி மக்களின் முன்னேற்றம், நலம் கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களின் தேவைபற்றி கருத்தரங்கு களில் பேசப்பட்டாலும், மிசோரம் மக்களின் தேவைகள் கவனிக்கபடா மலும். அவர்களின் குரல் எவர் காதிலும் விழாமலும் இருந்தது.
இந்த நிலைமையில் மிஷனரி தொண்டர்கள் மேற்கொண்ட அணுகுமுறையால், பழங் குடி மக்களின் உடை அணியும் முறை யில், பழக்கங்கள்முறையில்  கல்வியில், சுகாதாரத்தில் பெரும் மாற்றங்களைக் காண முடிந்தது. இன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெற்ற பெருமையுடன் விளங்குகிறது.
அயிஸ் வால் மாவட்டம் இந்திய நாட்டிலேயே எழுத்தறிவு பெற்ற முதன்மை மாவட்ட மாகத் திகழ்கின்றது. மிஷனரி தொண்டின் சிறப்பை அறிய ஓர் எடுத்துக்காட்டு மிசோரத்தின் வளர்ச்சி இத்தகைய முனைப்பு, ஈடுபாட்டை Missionary Zeal என்று சுட்டுவர்.
வேலூரும், மதுரையும்
இனி ஒரு மிஷனரி அமைப்பின் செயல்பாட்டைக் கூறுவோம். முதல் அமெரிக்க மிஷனரி சங்கம், தென் ஆசியப் பகுதிக்கு 1820ஆம் ஆண்டு வருகை தந்து சிலோனில் (இலங்கை) தன் சங்கத்தை  நிறுவியது. 1830இல் அந்த சங்கம் மதராஸ் (சென்னை) வந்தது. பிறகு ஆர்க்காட்டுக்கும், மதுரைக்கும் சென்றது.
உலகப் புகழ் பெற்ற மருத்துவமனையை வேலூரிலும் புகழ்மிக்க அமெரிக்கன் கல்லூரியை மதுரையிலும்  அமைத்தது. ஜாஃப்னா (யாழ்ப்பாணம்), மதுரை, வேலூர் போன்ற இடங்களின் கோடை வெப்பத்தை மிஷனரி சங்க உறுப்பினர்கள் தாங்க முடியாமல் தவித்தனர். ஆறு வாரங் களுக்கு குளிர்ந்த மலைப் பகுதியில் தங்கும் வசதி கொண்ட இடத்தைக் கண்டறிய தலைப்பட்டனர்.
கோடைக்கானலைக் கண்டனர்
உதகையைப்பற்றி சிந்தித்தனர். அங்கு முன்னதாகவே இங்கிலாந்து நாட்டு மிஷனரி மக்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அமெரிக்கர்கள். ஆங்கிலே யர்கள் கர்வம் கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் உதகையைத் தவிர்த்தனர். மதுரைப் பக்கம் இருந்த சிறுமலையை ஆய்வு செய்ததில், போது மான குளிர்ச்சி கிடைக்காது என்று உணர்ந்தனர்.
அத்துடன் பல நோய்கள் உண்டாகலாம் என்று கருதினர். இறுதியாக கோடைக்கானல் மலையைத் தேர்வு செய்தனர். இதன்மூலம் தென் னிந்தியாவின் இரண்டாவது கோடை வாழிடம் தோன்றியது. 1845இல் அமெ ரிக்க மிஷனரி சங்கத்தினர், சன்னிசைட், ஷெல்டான் என்ற இரண்டு வீடுகளைக் கட் டினர். நாளடைவில் அமெரிக்க பன்னாட் டுப் பள்ளியும் செயல்படத் தொடங்கியது.
குறிஞ்சி ஆண்டவர்
அடுத்து கோடைக்கானல் என்றதும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அத் துடன் இணைத்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலைப்பற்றி கூறாமல் இருக்க மாட்டார்கள்.
ஆனால், அந்தக் கோயில் தோன்றிய வரலாற்று செய்தியைப்பற்றி பலருக்கும் தெரியாது. சில முறை அங்கு சென்றிருந்தும் தற்போதுதான் அறிய வந்தேன். அதன் வரலாறு சுவையானது. அது என்ன? இதோ:
ஆஸ்திரேலியா அம்மையார்
ஆர்.எல். ஹாரிசன் என்ற அம்மை யார் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங் கிலேய அம்மையார். அவருடைய தந்தையார், ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கப் பணியில் இருந்தார். ஆஸ் திரேலியாவில் இருந்த பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிகல் கழகத் துடன் இளம் வயதில் ஹாரிசனுக்கு தொடர்பிருந்தது.
அதன் விளைவாக, மேலும் ஆன்மிகத் தெளிவு பெற வேண் டும் என்ற உந்துதலால் சிலோனுக்குச் சென்றார். அங்கு சர். பொன்னம்பல இராமநாதன் என்பவரைச் சந்தித்து அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
பொன்னம்பல இராமநாதன்
இராமநாதன் தென்னாசியாவின் வரலாற்றில் பலராலும் அறியப்பட்ட இலங்கை வாழ் குடிமகன். அந்நாட்டின் முன்னணி வழக்குரைஞர் இங்கிலாந்தில் உள்ள சட்டக் கல்வி அளிக்கும் இன்ஸ் கோர்ட்டில் பயின்று தேர்வு எழுதி பட்டம் பெறாவிட்டாலும் சட்டக் கல்வி நிறுவனம் அவருக்கு மதிப்புறு பாரிஸ்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
அடுத்து சிலோன் சட்ட மன்றத்திற்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக 1879ஆம் ஆண்டில் அவரின் 28ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். சட்டசபை யில் குறைந்த வயதுடைய உறுப்பினர் என்ற சிறப்பையும் பெற்றார்.
சிலோனுக்கு உரிமைகள்
பத்து ஆண்டுகள் கழித்து சிலோன் தேசியக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் இராமநாதன். இந்த அமைப்பின் மூலம், சிலோன் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான முயற் சிக்கு வித்திட்டார். 1890ஆம் ஆண்டில், சிலோன் தீவு மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்க வேண்டும் என்ற மனுவை இங்கிலாந்து நாடாளுமன்றத் திற்கு அனுப்பினார்.
அதன் விளைவாக சிலோனில் வயது வந்தோர் அனைவருக் கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சிலோன் மக்களின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், பல முறை அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.
சட்டப்பணியும் சைவ சித்தாந்தமும்
நாட்டின் சட்ட வல்லுநராக விளங் கியவர் அரசியல், சட்டத்துறையை விட்டு ஆன்மிகத்தில் எண்ணம் அலை பாய்ந்தது. ஆனால், மக்கள் மன்றம் அணை போட்டு, ஆன்மிகப் பாதையி லிருந்து அரசியல் கூடாரத்துக்குக் கொண்டு வந்தது. அனைவருக்கும் வாக்குரிமை பெற்று, டிசம்பர் 13, 1911இல் நடைபெற்ற தென் ஆசியத் தேர்தலில் முதன் முறையாக சிலோன் பங்கேற்றது.
அந்த தேர்தலில், இராமநாதனைப் போட்டியிடச் செய்து, திருத்தி அமைக் கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படும் வாய்ப்பை வழங்கினர். சிலோன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்படுவதற்குத் தகுதியானவர் இவர் என்ற கருத்து நிலவியது.
சிலோனின் சுவாமி விவேகானந்தர்
சட்டமன்றத்தினுள் அற்புதமாக செயல்பட்டு வந்த இராமநாதனுக்கு, வெளியில் ஆன்மிகத்தில் தடுமாற்றமில் லாத பற்று இருந்தது. இதற்குக் காரணம் இவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்பரமானந்த சுவாமிகளு டன் ஏற்பட்ட தொடர்பு என்பதாக அறிய முடிகிறது. இந்தத் தொடர்புக்குப் பிறகு, இராமநாதன் தஞ்சைக்கு வழக்கமாக வந்து போவதுமாக இருந்தார்.
விரைவில், இராமநாதன் சைவ சித்தாந்த தத்துவ முன்னோடிப் பரப்புரையாளராக மாறி விட்டார். சைவ சித்தாந்த தத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழமான அறிவும், புலமையும், ஈடுபாடும் அவரை 1906 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஓராண்டு சுற்றுப் பயணம் செய்து சொற்பொழிவு நிகழ்த் தச் செய்தது.
இந்தப் பணியில் அவர் திளைத்து விட்ட  காரணத்தால், சட்ட மன்ற உறுப்பினராக 13 ஆண்டுகள் போற்றத்தக்க வகையில் பணியாற்றிய பதவியை விட்டு விலகி விட்டார். சிலோ னில் அவரை, சிலோனின் சுவாமி விவே கானந்தர் என்று அன்புடன் அழைத்தனர்.
ஹாரிசன், லீலாவதியானார்
இராமநாதன், ஓராண்டு அமெரிக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மாணாக்கரும் செயலாளருமாக இருந்த ஆர்.எல். ஹாரிசன் அம்மை யாரும் உடன் சென்றார். சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு பல ஆண்டுகள் இணையரை இழந்தவராக வாழ்ந்து வந்தவர், ஹாரிசன் அம்மை யாரை மணந்தார் அம்மையார் இந்து மதத்திற்கு மாறி லீலாவதி என்ற பெயரையும் வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு அவர்கள் பெரும் பகுதியை கோடைக்கானலில் கழித்து வந்தனர். அங்கு அவர்கள் அம்மனடி சிவனடி; முருகனடி; என்ற பெயரில் மூன்று வீடுகளைக் கட்டினார்கள்.
நினைவுச் சின்னம்
இராமநாதன் 1924இல் இயற்கை எய்தினார். இந்து விதவைகள் அணிய வேண்டிய உடை, வெள்ளைப் புடவை என்ற எண்ணத்தில் வெள்ளை உடையை லீலாவதி அம்மையார் அணிந்து வந்தார். பழனிமலை முருகன் கோயிலைப் பார்த்த திசையில் கண வரின் நினைவாக ஒரு கோயிலைக் கட்டி, தினமும் மதிய நேரத்தில் வழி பாடு செய்து வந்தார். கோயிலை ஒட்டிய மலைச்சரிவில் குறிஞ்சி மலர்ச் செடி களை நட்டு வைத்தார்.
மகளின் ஏற்பாடு
இராமநாதன், லீலாவதிக்கு ஒரு மகள் இருந்தார். அந்தப் பெண், இராமநாதனின் தஞ்சாவூர் குருவின் பெயரன் எஸ். நடேச பிள்ளையை மணந்தார். அவர்கள் சிலோனில் வாழ்ந்து வருகிறார்கள்.
லீலாவதி அம்மையார் மறைவுக்குப்பின் அவரின் மகள், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்து சைவ சித்தாந்த தத்துவத்தைக் கடைப்பிடித்த தன் தந்தைக்கு, இந்து மதத்தைத் தழுவிய ஆங்கிலேய துணைவியார் நினைவு சின்னமாக கட்டிய குறிஞ்சி ஆண்டவர் கோயிலை பழனி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்து விட்டார்.
இன்று கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்பி கோடைக்கானலுக்குச் செல்வோர் குறிஞ்சி ஆண்டவர் கோயிலைத் தேடிச் செல்ல தவற மாட்டார்கள். ஆனால் அதன் வரலாற்றைத் தெரிந்திருப் பார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.
(செய்தியின் மூலம்: திரு எஸ். முத்தையா, தி இந்து 4.5.2015இல் வழங்கியது.)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...