Monday, July 6, 2015

மும்பை திரைப்பட கதாபாத்திரங்களில் உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்

மும்பை திரைப்பட  கதாபாத்திரங்களில்  உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்

தமிழ்நாட்டிலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை!

இந்து ஆங்கில ஏடு ஒப்பீடு

சென்னை, ஜுன்29_ மும்பையில் வெளிவரும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக உயர் ஜாதியினரே சித்தரிக்கப் படுகின்றனர்; தமிழ்நாட் டில் அதற்கு மாறாக தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் கதாநாயகர் களாக சித்தரிக்கப்படுகின் றனர் என்று இந்து ஆங் கில ஏடு ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட் டுள்ளது.

(28.6.2015) அதன் விவரம் வருமாறு:

மும்பைத் திரை உலகு மற்றும் சென்னை திரை உலகு இரண்டையும் தி இந்து ஒப்பீடு செய்துள் ளது. இரண்டு திரையுலகி லும் திரைக் கதைகளில் இடம்பெறக்கூடிய கதா பாத்திரங்களில் ஜாதியின் நிலைகுறித்து அந்த ஒப்பீடு சுட்டிக்காட்டி உள்ளது.

மும்பைத் திரையுலகில் பெரிய அளவிலான மாற் றங்கள் ஏற்படாமல் ஜாதி யைப் பிடித்துக்கொண்டு பின்னடைவிலேயே இருப் பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. அதேநேரத்தில் சென்னைத் திரையுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட ஜாதியினர்,  பெயர்களில் கதாபாத்தி ரங்கள் சித்தரிக்கப்பட்டுள் ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களில்தான் பிற்படுத்தப்பட் டவர்கள் கதாபாத்திரங் களாக இடம் பெற்றுள்ள தாக புள்ளிவிவரத் தகவல் குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு களில் வெளியான பிரபல மான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களாக பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் சித்தரிக் கப்பட்டுள்ளனர்.

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மும்பை திரையுலகில் வெளியான படங்கள்குறித்து திரட் டப்பட்ட தகவலின் அடிப் படையில் திரைப்படங் களில் இடம்பெறும் கதா பாத்திரங்கள் மற்றும் கதாபாத்திரங்களின்  பெயர்கள், கதையோட் டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே முன் னணி கதாபாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்பினரை சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மஞ்சு நாத், ஹைவே படத்தில் குஜ்ஜார் குற்றவாளியாக முன்னணி கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு கதாபாத்திரங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இடம் பெறச் செய்துள்ளனர்.

சம்பட் பால் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் மாதுரி தீக்ஷித்  நடித்துள்ள குலாப் கேங் படம்,  அமோலே குப்தா வின் குழந்தைகளுக்கான படமான ஹவா ஹவாய் ஆகிய படங்களில் கதா பாத்திரங்களாக பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் சித் தரிக்கப்பட்டுள்ளனர்.

மேரி கோம் படம் பழங் குடியின குத்துச் சண்டை வீராங்கனை கதாநாயகி யாக சித்தரிக்கிறது. இரண்டு படங்களில் கிறித்தவர் களை முக்கியக் கதாபாத் திரங்களாகவும், மூன்று படங்களில் சீக்கியர்களை கதாநாயகர்களாகவும், ஒன்பது படங்களில் முசு லீம் கதாபாத்திரங்களா கவும் சித்தரிக்கப்பட்டுள்ள னர். மற்ற 66 படங்களில் இந்துக்களில் உயர்ஜாதி யினர் மட்டுமே கதாபாத் திரங்களாக சித்தரிக்கப்பட் டுள்ளனர். மற்ற படங்களில் ஜாதிகளைக் குறிப்பிடக் கூடிய வகைகளில் கதா பாத்திரங்கள் இல்லை.

2013ஆம் ஆண்டில் பந்தூக், ரிவால்வர் ராணி ஆகிய படங்களில் கங் கானா ராவுத் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த வராக நடித்துள்ளார். கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா படத்தில் ரன்வீர் சிங் பழங்குடியினத்தவராக நடித்துள்ளார்.

மும்பை திரையுலகிலி ருந்து வெளிவரக்கூடிய படங்களில் கதாபாத்தி ரங்களாக உயர்ஜாதியினர் மட்டுமே குறிப்பிடப் பட்டுவருகின்றனர்.

2013ஆம் ஆண்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 66 படங்களிலும் கதா பாத்திரங்களும் உயர்ஜாதி கதாபாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள் ளனர்.

கடந்த காலங்களில் மும்பையில்

கடந்த காலங்களில் மும்பை திரையுலகில் வெளியான படங்களில் முன்னணி பாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்தான் சித்தரிக்கப் பட்டு வந்தனர். 2010ஆம் ஆண்டில் வெளியான ஆக்ரோஷ், ராஜ்நீதி மற்றும் 2006ஆம் ஆண் டில் வெளியான ஓம்காரா ஆகிய படங்களில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராக கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், பல்வேறு ஜாதிகளிடையே ஏற்படுகின்ற பிரச்சி னைகளை உள்ளடக்கியதா கவே இருக்குமே தவிர வெறுமனே பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை மட டும் கொண்டுள்ள கதா பாத்திரங்களாக அவை இருக்காது.

மும்பை திரையுலகினரி டையே ஆண், பெண் இருபாலரிடத்திலும் பன்முகத்தன்மைகள் இல்லாமல் இருப்பதால், பெரும்பான்மையராக உள்ளவர்களில் 750  நடிகர் மற்றும் நடிகையரில் கடந்த பத்து ஆண்டுகளில் அய்ந்து படங்களுக்கும் மேலாக முசுலீம்களைத் தொடர்ந்து இந்துக்களில் உயர்ஜாதியினர் இருந்து வருகிறார்கள்.
ஆனால், தமிழ்த்திரை யுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னணிக் கதாபாத்திரங் களாக இருந்து வருகிறார் கள். தென்னிந்தியாவில் உள்ள அனைத்துப் படங் களும் கணக்கில் கொள் ளப்படா விட்டாலும், 2013ஆம் ஆண்டில் வெளி யான முக்கியத்துவம்பெற்ற 16 படங்கள் பழைய படங் களின் பெயரையேக் கொண்டுள்ளன.

ஏழு படங்கள் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னணிக் கதாபாத்திரங் களாகக் கொண்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் பிர பலமான 10 படங்களில் குறைந்த பட்சம் ஒரு படமாவது (சென்னை) தாழ்த்தப்பட்ட வகுப்பி னரைச் சித்தரிக்கும் கதா பாத்திரமாக அமைக்கப் பட்டிருக்கிறது.


இதுகுறித்து கருத்துகளைக் கேட்கும் போது, பிரச்சினை ஏற் படுத்தக்கூடியது என்று பெரும்பாலான இயக்கு நர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.




  • பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு
  • முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்
  • கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
  • இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?
  • அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
  • தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?
  • யோகா - மூச்சுப் பயிற்சி - கி. வீரமணி
  • சூத்திரர் வரிப் பணம் பிராமண மொழிக்கா?
  • விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா
  • No comments:

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...