Saturday, July 4, 2015

68 ஆண்டுகால இந்தியாவின் நிலை இதுதான்

68 ஆண்டுகால இந்தியாவின் நிலை இதுதான்
சமூக - பொருளாதார கணக்கெடுப்பு வெளியீடு;
ஜாதி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை

புதுடில்லி,ஜூலை4_ கடந்த 1932_ஆம் ஆண்டு சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு வெளி யிடப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியம், இனம், ஜாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குடும்பங் களின் வளர்ச்சி குறித்து வெளியிடப்படும் இத்த கைய கணக்கெடுப்பு அதற் குப்பின் வெளியிடப்பட வில்லை.
2011_2012ஆம் ஆண் டில் எடுக்க தொடங்கிய மக்கள் தொகைக் கணக் கெடுப்பு 2013ஆம் ஆண் டில் நிறைவடைந்தது. தனி மனிதனின் சமூக, பொரு ளாதார நிலைகள் மற்றும் ஜாதி ஆகியவைகுறித்த தகவல்கள் இந்தக் கணக் கெடுப்பில் திரட்டப்பட் டன. இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங் களில் வசித்து வரும் குடும் பங்களில், கடந்த 2011_ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து சட்டவிரோதமாக பாகிஸ் தான் ஆக்கிரமித்து வைத் துள்ள பகுதியான 5180 சதுர கிலோமீட்டர் மற்றும் சட்டவிரோதமாக சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வாரத்துக் கொடுத்த இந்தியப் பகுதியான 37,555 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் தவிர்த்து மீதமுள்ள 78,11 சதுர கிலோமீட்டர் பரப்பள விலான இந்தியப் பகுதியில் சென்சஸ் எடுக்கப்பட் டுள்ளது.
தற்பொழுது வெளி யிடப்பட்டுள்ள கணக் கெடுப்பு புள்ளிவிவர அறிக்கைகளில் ஜாதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் புள்ளி விவரப்பட் டியலை நேற்று (3.7.2015) மத்திய நிதித்துறை அமைச் சர் அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.
மக்கள் தொகை
2011 சென்சஸ் கணக்குப் படி 121 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இந் தியாவின்  கிராமப்புற மக்கள் தொகை 83,34,63,448. நகர்ப்புற மக்கள் தொகை 37,71,06,125 ஆகும். அதில் பெண்களை விட ஆண் களே அதிகம் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை 62,31,21,843 ஆகும். பெண் களின் எண்ணிக்கை 58,74,47,730 ஆகும். நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில்தான் மக்கள் தொகை அதிகம் உள்ளது. நகர்ப்புறங்களில் பெண் களை விட ஆண்களே அதிகம் உள்ளனர். அதாவது ஆண்களின் எண்ணிக்கை 19,54,89,200. பெண்களின் எண்ணிக்கை 18,16,16,925. கிராமப்புறப் பகுதிகளிலும் ஆண்களே அதிகம். 42,76,32,643 ஆண்கள் கிராமப்புறங் களில் உள்ளனர். பெண் களின் எண்ணிக்கை 40,58,30,805 ஆகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 382 பேராக உள்ளது.
இந்தியாவில் நகர்ப் புறம் மற்றும் கிராமப்புறங் களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும் பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.5 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.
பாலின விகிதாச்சாரம் பாலின விகிதாச்சாரம் கிராமப்புறப் பகுதிகளில்  1000 ஆண்களுக்கு பெண் களின் எண்ணிக்கை 949 ஆக உள்ளது. நகரப் பகுதிகளில் 1000 ஆண் களுக்கு பெண்களின் எண் ணிக்கை 929 ஆக உள்ளது.
6 வயதுக்கு உட்பட் டோரின் எண்ணிக்கை 16,44,78,150 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 8,57,32,470. பெண்களின் எண்ணிக்கை 7,87,45,680.
கிராமப்புறப்பகுதிகளில் குழந்தைகளின் எண் ணிக்கை 12,12,85,762. நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை 4,31,92,388 ஆகும். 6 வயது வரையி லான கிராமப்புறப் பகுதிகளில் குழந்தைகள் மத்தியில் பாலின விகிதமா னது 923 விழுக்காடாக ஆக உள்ளது. அதுவே நகர்ப்புறத்தில் 905 விழுக் காடாக உள்ளது.
கல்வி
7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கல்வியறிவானது 57.93 சதவீதமாக உள்ளது. மொத்த கல்வியறிவு பெற்றோர்களின் எண் ணிக்கை, 76,34,98,517 ஆகும். இதில் ஆண்களின் எண் ணிக்கை 43,46,83,779 ஆகும். பெண்கள் எண் ணிக்கை 32,88,14,738 ஆகும். ஊரகப் பகுதிகளில் கல்வி யறிவு பெற்றோர் எண் ணிக்கை 48,26,53,540. நகர்ப் புற எண்ணிக்கை 28,08,44,977.
வருவாய்
கிராமப்புறங்களில் மாத ஊதியம் பெறும் குடும்பங்களின் எண் ணிக்கை சுமார் 10 சதவீத மாக உள்ளது. இவர்களில் 5 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாகவும், 3.57 சதவீதத்தினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிப வர்களாகவும், 1.11 சதவீ தத்தினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக வும் உள்ளனர்.
92 விழுக்காடு கிராமப் புற மக்கள் மாத வருவாய் 10ஆயிரத்துக்கும் கீழ் உள்ளனர். நான்கில் மூன்று பங்கினர் 5ஆயிரம் அல்லது அதற்கும் கீழ் வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்.
தினக்கூலிகள்
30.10 விழுக்காட்டளவி லான கிராமப்புற குடும் பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியா ளர்களாகவும் இருக்கின் றனர். சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் இருக்கின்றனர்.
கிராமப்புறங்களில் வாழ்வோரில் அதிகமான அளவில் குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறி யப்பட்டு உள்ளது.  இவர் களிடம் வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண் கடன் அட்டை போன்ற எதுவும் இல்லை.
56 விழுக்காட்டினருக்கு நிலமற்ற வறியவர்கள்
கிராமப்புறங்களில் வாழ்வோரில் 4.6 சதவீத குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். எனினும் கிராமப்புற தலித் இன மக்களில் வருமான வரி செலுத்துவோர் 3.49 சதவீதமாகவும், பழங்குடி யினரில் 3.34 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளது.
கிராமப்புற குடும்பத் தினரில் 94 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்துள் ளனர். ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வரு கின்றனர். தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடி யினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தியாவின் உண்மை நிலை
இந்த கணக்கெடுப்பை வெளியிட்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, இந் தியாவின் உண்மை நிலையை இந்த ஆவ ணங்கள் எதிரொலிக் கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த இலக்கை நோக்கிய கொள் கைகளை வகுப்பதற்கு அரசுக்கு இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...