Saturday, June 27, 2015

எளிமை + பண்பு + பல்திறன் = அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை தமது வாழ்நாள் தலைவராகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து காட்டியவர்.
அய்யா பெரியார் அவர்களிடத்தில் இருந்த - தொண்டு புரிந்த காலத் தையே தமது வாழ்வின் வசந்தம் என்று முதல் அமைச்சர் ஆன பிறகும் நிலை நாட்டி உறுதிபடக் கூறியவர் அறிஞர் அண்ணா.
தந்தை பெரியார் அவர்களுடன் இருந்து ஈரோட்டுக் குருகுல வாச முன்னோடியான அவர், எப்போதும் எளிமையான பழக்க வழக்கங்களைக் கொண்ட மாமேதை.
பதவி அவரை அதிகார போதை யில் தள்ளாடச் செய்யவில்லை; மாறாக; இவ்வளவு பெரிய பொறுப்பை மக்கள் நம்மீது - இத்தேர்தல் முடிவு மூலம், சுமத்தி விட்டார்களே என்ற கவலை அவரை ஆட் கொண்டது. மேலும் தன்னடக்கத்தின் தாயகமாகத் தன்னை ஆக்கிக் கொண்டார்!
அருமை நண்பர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ் என்ற தலைப்பில் பல கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலைத் தொகுத்து, மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
அந்நூலை எனக்கு அனுப்பி அதுபற்றி கருத்து எழுதும்படிக் கேட் டுக் கொண்டார்.
மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் எழுதுகிறேன்.
நூலைப் படித்தேன் - நவில் தோறும் நயம் அதில் மலரின் தேன் போல் இருந்தது! படித்தேன் - சுவைத்தேன்.
அறிஞர் அண்ணாவின் சிந்தனைச் செழுமை என்ற தலைப்பில், ஒரு அரிய கட்டுரை. (பக்கம் 112 - 118 வரை) பல்வேறு செய்திகளை மருந்துக் குப்பி (சிணீஜீறீமீ) போன்று அடக்கி எழுதப் பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையும் தலை வர்களும் தங்களுக்கு அதனை வழி காட்டியாக, கலங்கரை வெளிச்சமாக கொண்டால் அவர்களுக்கு நல்லது.
அந்த பக்கங்களில் உள்ள செய்திகள்:
அண்ணா தம் வாழ்க்கையின் தொடக்க முதலே, பொது வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பவராக எளிமை யோடும், பொருளாசை இன்றியும் வாழ்ந்து காட்டினார்.
நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாவை அணுகி, உங்களுக்குக் கை நிறைய ஊதியமும், தனி வீடும், தனிக் கார் வசதியும் தருகிறேன்; என்னிடம் பணிக்கு வந்து விடுங்கள் என்று கூறியபோதும், பெரியாரின் குருகுல வாழ்க்கையை விட்டு வர மாட்டேன் என்று, சொற்பச் சம்பளத்தில் தந்தை பெரியாரின் விடுதலை இதழில் தொண்டாற்றினார் அண்ணா. தாம் எம்.ஏ. படித்திருந்தாலும், அய்யாவின் அறிவியக்கத்தின் தன்மானக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா இறுதிவரை, நான் கண்டதும், கொண் டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தாம் என்றார்.
1949இல் இராபின்சன் பூங்காவில் பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனி இயக்கம் கண்ட போதும், மேடையின் மத்தியில் ஒரு காலி நாற்காலியிட்டு, இது தந்தை பெரியாருக்கே உரிய தலைவர் நாற்காலி; தி.மு.கழகத்திற்குத் தனித் தலைவர் கிடையாது. என்றைக்கு இருந்தாலும்  தந்தை பெரியார்தாம் தலைவர் என்று, தந்தைபெரியாரிடம் பக்தியும் பாசமும் காட்டியவர் அண்ணா.
1967இல் மக்கள் அண்ணாவை முதல் அமைச்சர் ஆக்கியவுடன், முதல் வேலையாகத் திருச்சிக்கே சென்று, அங்கே தங்கியிருந்த தந்தை பெரியா ருக்கு மாலை அணிவித்து, அமைந்தி ருக்கும் மந்திரி சபையே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று கூறி, அய் யாவை நெகிழ வைத்தார். தாம் கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், தனயன் அண்ணா காட்டிய உயரிய பண் புணர்வு, தந்தை பெரியாரைச் சிலிர்க்க வைத்தது.
தமிழக மக்கள் படிப்பாற்றல் பெற்றவர் களாகவும், நூலறிவு மிக்கவர்களாகவும் திகழ வேண்டுமென்று, அண்ணா கனவு கண்டார். ஏனெனில், அவரே எளிய ஓட்டு வீட்டில் பிறந்தாலும் ஏராளமான நூல்களை இராப் பகலாகப் படித்து, மாமேதையாக விளங்கியதால், புத்த கங்களே மக்களுக்குப் புத்தறிவு ஊட்டக் கூடியவை என்று, திடமாக நம்பினார்.
ஓர் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அறிஞர் அண்ணா, இப்படி முழங்கினார்: பாருங்கள்! நம் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றால், அவர் பெருமிதத்துடன் தாம் புதிதாகக் கட்டிய வீட்டின் திண்ணைகளைக் காட்டுவார்; கூடத்தைக் காட்டுவார்; வர வேற்பு அறையைக் காட்டுவார்; சமையல் அறையைக் காட்டுவார்; சாப்பிடும் அறையைக் காட்டுவார்; படுக்கை அறை யைக் காட்டுவார்; கடவுள் அறையை காட்டுவார். ஆனால் இதுதான் நான் படிக்கும் படிப்பறை என்று, ஒன்றைக் காட்டுகிறாரா? அப்படி வீட்டுக்கு வீடு நூலக அறை திகழும் நாள்தான், அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும் திருநாள்!
எத்தனை சிந்தனை ஆழத்துடன் அண்ணா அவர்கள் உதிர்த்த சொற்கள் இவை!
அதேபோல் தமிழ் மாந்தர், அறி யாமைச் சேற்றிலிருந்தும் வைதிகச் சகதியிலிருந்தும் வெளியே வந்தால் தான் அறிவார்ந்த விஞ்ஞான முன் னேற்றம் காண முடியும் என்று, திட்ட வட்டமாக எண்ணினார் அண்ணா.
அவர் ஒருமுறை அழுத்தத்து டனும், சிந்தனைச் செழுமையுடனும் கூறினார்; கடிகாரத்தின் நொடி முள்ளும், மணிமுள்ளும் நகர்வதைக் கவனித்து, வாழ்க்கையை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கும் மேனாட் டார், எங்கோ உயரத்திற்கு முன் னேறிப் போய்க் கொண்டிருக்கி றார்கள். ஆனால் இன்னமும் பஞ்சாங் கத்தைப் பார்த்து, நவக்கிரகங்கள் நகர்வதைப் மட்டுமே சார்ந்து செயல் படும் நாம், பின்னேறிக் கொண்டே இருக்கிறோம்
அறிவுப் பாதைக்கு நம்மை ஆற்றுப் படுத்திட அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் செயல்பட்டது.
அறிஞர் அண்ணா முதல் அமைச் சரான பிறகுகூட ஒரு விருந்து ஏற்பாடு நாகரசம்பட்டியில் திரு என்.எஸ். சம்பந்தம் வீட்டில். அப்போது முதல் வரை தனக்கு அருகில் அமர்த்திட வேண்டுமென அய்யா  - விரும்பி ஜாடை காட்டினார் எங்களிடம்.
அண்ணாவோ மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் தயங்கி சில இலைகள் தள்ளி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதற் கிடையில் அய்யாவுக்குப் பக்கத்தில் ஒரு அதிகம் பேசும் தொணதொணா ஒருவர் அந்த இலையை ஆக்கிர மித்துக் கொண்டார்! அய்யாவுக்கு வந்த கோபத்தை எங்கள்மீது பார் வையில் காட்டி பிறகே உணவு உண்டார்!
ஈரோட்டில் விடுதலை ஆசிரிய ராக இருந்தபோது எப்படி அய்யா விடம் இருந்தாரோ - நடந்தாரோ - அதே பயபக்தி யுடன் முதல் அமைச் சரான அண்ணாவும் இருந்தார்.
அத்தகையவர்களை இனி எளி தில் எங்கே சந்திக்கப் போகிறோம்?
கவவேந்தர் கா. வேழவேந்தனின் மற்ற கட்டுரைகளும் நல்ல தகவல் களஞ்சியங்கள் ஆகும்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...