Saturday, June 27, 2015

ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?

ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டி
ஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன்  என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.
அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.
அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.
கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.
சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.
புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...