Wednesday, February 4, 2015

மூளைப் பாதுகாப்பு அரண்கள் - எவை?


முதுமை அடைந்தவர்கள் நோய் களினால் தாக்குண்டு அவதியுறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று என்றாலும், நியாயப்படுத்தக் கூடியதுதான்.

ஆனால், இளைய தலைமுறையினர் பலரும் பல்வேறு நோய்களினால் பாதிக் கப்பட்டு, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளுவது அநியாயமான கொடுமை யாகும்!

எதுவும் நம் கையில் இல்லை என்று சாக்குருவி வேதாந்தம் பேசுவது, செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கத் தெரியாத, அல்லது பொறுப்பின்மை யின் அடையாளமேயாகும்.

வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, குறிக்கோள், உணவுப் பழக்கவழக் கங்கள் தொடங்கி, மது, சிகரெட் போன் றவைகளை நண்பர்களுடன் விளை யாட்டு, வேடிக்கையாகத் தொடங்கி, பிறகு அது விபரீதமாகிவிட்டதோடு, முதலில் வரவேற்றவர்களே, அவற்றை வழியனுப்பத் துடித்தாலும் விடமாட் டேன் உன்னை, விடமாட்டேன் என்று கெட்டியாய் முதலைப் பிடியுடன் பிடித்துக் கொள்வது இளைஞர் உலகின் இன்றைய வாழ்வின் அலங்கோல மாகும்!

எடுத்துக்காட்டாக சில ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் இதோ:

1. இயந்திர வாழ்க்கையாக சுழலும் நம் இளைஞர்கள் - மாணவர்கள் பலர் - வீடுகளிலிருந்து கல்விக் கூடம், தொழில் பணிமனைகளுக்குக் கிளம்பும் நேரத்தில், காலைச் சிற்றுண்டியைப் புறக்கணித்து, வெறும் வயிற்றுடன் ஓடுகிறார்கள்!
இதன் விளைவு...?

அவர்களது உடலில் சர்க்கரை அளவு (காலை நேரத்தில்) குறைகிறது; மூளைக்குத் தேவையான இரத்த ஓட்ட மும் குறைகிறது; மூளை பாதிப்படை கிறது; இதனால் வேலையில் சுணக்கம். உடலில் கலக்கம், மயக்கம்! சிற்சில நேரங்களில் சோர்வுடன் கூடிய தூக்கம்!

‘Break Fast’  என்பது ஆங்கிலச் சொல், காரணப் பெயர்தான் - பட்டினி யைத் தவிர்க்கும் உணவு முறை இது. இதைத் தவிர்த்தல் அறிவுடைமை ஆகாது - உடல்நலக் கேடு செய்யும். எனவே, இதனை மாற்றிக் கொள்ளுங் கள்.

2. அதிகமான உணவை உண்டு, வயிற்றில் திணிக்காதீர்; அதிகமாக பலூனை ஊதினால், அது வெடித்து விடு கிறது; உடலோ அதனைச் செரிமானம் செய்ய இயலாது தவிர்த்து, பல வகையில் உடலுக்கு எச்சரிக்கை மணி அடித்து, உடலின் செரிமான இயந்திரப் பகுதியை பழுதாக்குகிறது - வயிறு குப்பைத் தொட்டியல்ல, வடிகால் பெறவேண்டிய பயிர், வளரும் கழனி - மறவாதீர்!

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று எண்ணும்போதே, உடனடியாக இலையை விட்டு எழுந்துவிடுங்கள். அது உங்கள் ஆயுளைக் கூட்டும்.

3. புகைப் பிடித்தல் - இன்றைய இளைஞர்களிடம் மலிந்துள்ள ஒரு மகத்தான தீய பழக்கம்!

புற்று நோய் வந்து ஆயுளைப் பறிப்பதுபற்றிய தகவல்களை அறியாத வர்களா இவர்கள்? இருந்தும் - தெரிந்தே விளக்கை கையில் வைத்து, பாழுங்கிணற்றில் விழலாமா?

இப்பழக்கத்தால் மூளைச் சுருங்கிச் சுருங்கி, அல்சைமர்ஸ் Alzheimer என்ற மறதி நோய்க்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிலை அல்லவா ஏற்படுகிறது.

4. அதுபோலவே, அதிகமான சர்க் கரை - இனிப்பு பொருள்களை உண் ணுதல்மூலம், நாம் உண்ணும் மற்ற உணவில் உள்ள புரதச் சத்துகளும், ஊட்டச் சத்துக்களும் நம் உடலில் சேர்வதற்குப் பெரிதும் தடையாக இது அமைந்து விடுகிறது.

இதுவும் மூளையை வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

5. காற்றுத் தூய்மைக்கேடு. நமது உடலின் மூச்சுக் காற்றான உயிர்க் காற்று (பிராண வாயு) மூளைக்கு அதிகம் தேவை. கெட்ட காற்று - கரியமில வாயு மற்றும் மாசுபட்ட காற்றை நாம் அதிகம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் - மூளைக்குச் செல்லவேண்டிய பிராண வாயு குறைகிறது. இதனால் மூளையின் செயல் திறன் - ஆற்றல் குறைகிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள்!

6. தூக்கம் என்பதின் முக்கியத்துவம், தேவைபற்றி நம்மில்பலர் அறிந்தவர் கள் அல்லர்.

நல்ல தூக்கம் நம் மூளைக்கு நல்ல ஓய்வைத் தரும். நீண்ட நேரம் தூங் காமல் இருந்தால், அத்தூக்கக் குறைவும் நமது மூளையின் ஆற்றலை வெகு வாகப் பாதிக்கிறது.

உணவுக்கு என்ன விதியோ அதே விதிதான் தூக்கத்திற்கும் (The Same Formula)

(அ) அளவும் குறைதல் கூடாது

(ஆ) அளவும் கூடவும் கூடாது

(இ) குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக் கத்தை நமது உடற் கடிகாரத்திற்கு ஏற்படுத்தி விட்டால், அது நம் வாழ்வை நீட்டும்!

7. தூங்கும்போது சிலர் தலை யணையில் தலை வைத்து முகத்தையும் - போர்வை கொண்டு இழுத்து மூடிக் கொண்டு தூங்குகிறார்கள்.

இது மூளையைப் பாதிக்கும், நல்ல காற்றுத் தேவை குறைகிறது; தூய்மை யற்ற காற்று உள்ளே புகுந்து மூளையைக் கெடுக்கிறது!

அதுபோலவே, நம் உடல் நிலை சரியாக இல்லாதபோதும்கூட சிலர் - அவர்கள் பணிப் போதையாளர்கள் (Workaholic) ஆகி பழக்கப்பட்ட காரணத்தினால், கடுமையான பணி - படித்தல், எழுதுதல், சிந்தித்தல் - இவைகளைச் செய்தால், பாரம் இழுக்க முடியாத இயந்திரமாக மூளை பலவீன மடையும் வாய்ப்பு அதிகம்.

8. எதையும் பயன்படுத்தாமலேயே வைத்தால், அது துருப் பிடித்து விடும்; பயனற்றதாகி விடும். பயன்பாட்டுத் தகுதியை இழக்கும்.

அதுபோலத்தான் மூளையும்கூட! எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்து கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது விரியும் - தெளிவாக ஆணை பிறப் பிக்கும்.

பயன்படுத்தாவிட்டால், அது சுருக்க மடைந்து, செயல்திறனை இழக்கவே செய்யும். எப்பொருளையும் பயன் பாட்டில் வைத்திருக்கத் தவறாதீர்!

9. மிகவும் குறைவாகப் பேசுவது, மூளைக்குப் பாதுகாப்பு என்கின்றனர் அத்துறை மருத்துவர்கள்! அதற்காக அறிவுப்பூர்வமான உரையாடல்களைத் தவிர்த்து விடாதீர்கள்! பெரிதும் கேட் பாளராக இருங்கள்; பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்குங்கள்!

இவை நம் மூளைப் பாதுகாப்பு அரண்கள் ஆகும்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
 
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...