Wednesday, February 4, 2015

பாண்டே ’பாட்டை’ நிறுத்து!

தினத்தந்தி தொலைக்காட்சியில் ஒருங் கிணைப்பாளராக இருக்கக்கூடிய ரங்கராஜ் பாண்டே தந்தை பெரியாரைச் சீண்டுவது என்றால், அவருக்கு ருசிக்கும் போல் தோன்று கிறது.

விவாதத்தில் பங்கேற்றவர்கள் பேசினால் கூட அதனைப் புரிந்து கொள்ளலாம்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தந்தை பெரியாரைக் குறைகூறும் அளவில் 
இவர் பேசுவது ஏன்? இதுதான் ஒருங்கிணைப் பாளரின் வேலையா?

இந்து ஆன்மிகக் கண்காட்சிபற்றிய விவாதம் - இவர் கேட்கிறார் - கடவுளே இல்லை என்று சொல்பவர்கள், பெரியார் உருவச் சிலையை வழிபடலாமா? என்று, தான் மூப்பாகக் கேள்வியை எழுப்புகிறார்.

சொல்லுவதில் கொஞ்சம் அறிவுப் பசை இருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
கூழ் முட்டை போல பேசக் கூடாதல்லவா! பெரியாருக்கு மக்கள் சிலை எழுப்புவது உண்மை!

ஆனால், அதனை வழிபடுவதற்காக அல்ல என்பது ஆரம்பப் பள்ளிக்கூட மாணவன்கூட சொல்லி விடுவானே!
அந்தச் சிலைக்குக் கீழ்தான் ’கடவுள் இல்லை இல்லவே இல்லை’ என்று கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதே!

பெரியார் கூற்றுப்படி அந்தச் சிலையின் உருவத்தைவிட அதன் பீடத்தில் பொறிக்கப் பட்டுள்ள அந்த வாசகங்கள்தான் மிகமிக முக்கியமானவை.
இந்த நிலையில் அபாண்டமாக மோசடி யாக உண்மையைத் திரித்துக் கூறக்கூடாது திரி நூல்கள்!

ஒருக்கால் உண்மையைத் திரிப்ப தால்தான் இவாளுக்குத் திரிநூல் என்று பெயர் வந்திருக்கலாமோ!

அதோடு விட்டுவிடவில்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொல்லவில்லையா? என்று அதே பாண்டே தான் சம்பந்தமில்லாமல் எடுத்துக் கொடுக் கிறார்.

அதையாவது ஒழுங்காகச் சொல்லத் தெரிகிறதா? இப்பொழுதாவது தெரிந்துகொள் ளட்டும்.
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்பதுதான் தந்தை பெரியார் சொன்ன வாசகம்.

இது யாரையோ தனிப்பட்ட முறையில் ஏசுவது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது ஒரு தத்துவம் - அறிவியல் ரீதியான கணிப்பு.

உயர்நீதிமன்றப் படிக்கட்டுகள்வரை இதனை எதிர்த்து ஏறிவிட்டார்கள். பொட்டில் அறைந்தது மாதிரி கடவுள் நம்பிக்கை யாளரான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாகயிருந்த மு.மு.இஸ்மாயில் தீர்ப்புரை வழங்கியதெல்லாம் இந்தப் பூணூல்களுக்குத் தெரியுமா?

யாருக்குச் சிலை வைக்கப்படுகிறதோ, அவரின் கருத்துகளைத்தான் அந்தப் பீடத்தில் பொறிக்க முடியும்! என்று காலாகாலத்திற்கும் அழியாத கல்வெட்டாக தீர்ப்பு வழங்கிய வரலாறெல்லாம் இந்தக் கத்துக்குட்டிகளுக் கெல்லாம் தெரியுமா?

தந்தை பெரியாரின் மனிதநேயமெல்லாம் தர்ப்பைப் புல்களுக்குத் தெரியும் - ஆனால், அவாளின் இனவெறி அவற்றை மறைத்து விடும்.

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே! என்று சொல்லுபவர்தானே அவாளின் லோகக் குரு (சந்திரசேகரேந்திர சரஸ்வதி - தெய்வத்தின் குரல் 3 ஆம் பாகம், பக்கம் 148).

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பெரியார்மீது பழியேற்றத் துடிக்கிறார்கள்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

என்று தேவாரம் புகழ் திருஞானசம்பந்த அய்யர் பாடியிருப்பதற்கு என்ன பொருள்?

பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண் களைக் கற்பழிக்க மதுரைவாழ் சிவனே! அருள் புரிவாயாக! என்புது போலவா தந்தை பெரியார் சொன்னார்?

நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் (பாடல் 878) என்ன கூறுகிறது?

வெறுப்போடு சமணர் முண்டர் வாதி இல்
சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரிய னகள் பேசில் போவதே
நோயதாகி,
குறிப்பெனக்கு அடையுமாகில், கூடுமேல்
தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா
நகருள்ளானே

என்ற தொண்டரடிப் பொடியாழ்வார்தம் பாடலின் திரண்ட பொருள் என்ன?
சமணர்களைக் கண்ட மாத்திரத்திலேயே தலையை அறுக்கவேண்டும் என்று சீரங்கத்து அரங்கநாதனை வேண்டுகிறானே - இதைப்பற்றி எல்லாம் என்றைக்காவது எடுத்தாண்டது உண்டா இந்தப் பீகாரி?

இந்தச் சில்லுண்டித்தனமெல்லாம் தந்தை பெரியாரிடம் வைத்துக் கொள்ளவேண்டாம்!


ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கவேண் டியிருக்கும்.
சங்கராச்சாரியார்களின் கதைகளையெல் லாம் வண்டி வண்டியாக ஏற்றவேண்டி வரும்!

யாரோ ஒருவரை அழைத்து அவர் திராவிடர் கழகம் என்று காட்டுவது கயவாளித் தனம் அல்லவா! அவரோ பெரியார் கருத்துகள் அத்தனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உளறுகிறார்.

தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் கொச்சைப்படுத்தும் வேலையை பாண்டே நிறுத்தவேண்டும் - வீண் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டாம்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...