Tuesday, February 4, 2014

ரசல்


உலக நாத்திகச் செம்மல் பெட்ரண்ட் ரசல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1970) 98 ஆண்டுகள் 8 மாதம் 15 நாள்கள் வாழ்ந்து இன்ஃ புளூயன்சா காய்ச்சலால் மரணம் அடைந்தார். Why I am not a Christian என்ற அவரின் புகழ் பெற்ற ஆங்கில நூலை நான் ஏன் கிருத்துவன் அல்ல என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.

குத்தூசி குரு சாமி அவர்கள் அதனை மொழி பெயர்த்தார். 1927ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இலண்டன் லோகாயத சங்கத்தின் (National Secular Society) சார்பில் பாட்டார்சி நகர மன்றம் ஒன்றில் இந்தத் தலைப்பில் ரசல் உரையாற் றினார். நான்கு ஆண்டு களுக்குள் 7 பதிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் 24  ஆயிரம் நூல்கள் விற்பனையாயின என்பது சாதாரணமானதல்ல.

தனது மூன்றாவது வயதிலேயே ரசல் பெற் றோர்களை இழந்தார்.

ஆனாலும் அவர்தம் பெற்றோர்கள் தம் பிள்ளை மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தனர். அதற்காக இருவரை, குழந்தை ரசலுக்குப் பாதுகாவலர் களாக நியமித்தனர் என் பது அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியமான தகவல்தான்.

11 வயது முதல் 38 வயது வரை கணிதம்தான் அவ ருக்கு எல்லாமுமாக இருந் தது. அதன் பிறகு சமு தாயச் சிந்தனைகள் அவரி டம் வேர்விட ஆரம்பித்தன. முதல் உலகப் போர் நடந்த போது அதன் தீய அம்சம் குறித்து எதிர்த்து எழுதி னார். அதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வேலை பறிபோயிற்று - சிறையும் அவரை வா என்று வரவேற்றது.

1910ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கட்சியின் கூட் டத்தில் ரசல் பேசியபோது சில வினாக்கள் அவரிடம் தொடுக்கப்பட்டன.

கேள்வி: கடவுளைப் பற்றி நீங்கள் கவலைப் படாதவரா? 
ரசல்:ஆம்!

கேள்வி: சர்ச்சுக்குப் போவதுண்டா? 
ரசல்: நிச்சயமாகப் போக மாட்டேன். கேள்வி: இந்தக் கருத்தை இரகசியமாக வைத்துக் கொள்வீர்களா? ரசல்: இல்லை. வெளிப் படையாகவே கூறுவேன் என்றார் ரசல். விளைவு - அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.

தந்தை பெரியார் போல பெண்ணுரிமைக் கருத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்; அவர் எழுதிய திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Moral) எனும் நூல் தடை செய்யப் பட்டது.

குறிப்பு: மேலும் விவரங் களுக்கு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உண்மை இதழில் மார்ச்சு, ஏப்ரல் 1970, விடுதலை 15.2.1970 கட்டுரைகளைக் காண்க)

 - மயிலாடன்


Read more: http://www.viduthalai.in/e-paper/74602.html#ixzz2sKaa5b4q

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...