Tuesday, August 6, 2013

திதி

இன்று ஆடி அமாவாசை யாம். இந்த நாளில் மறைந்த பெற்றோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமாம். இறந்தவர்களின் திதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் அந்நாளில் திதி கொடுக்க வேண்டும்; திதியை, தேதியை மறந்த வர்கள் ஆடி, தை அமா வாசையன்று நதிகள், கடற்க ரையோரங்களில் புரோகிதர் மூலம் திதி கொடுக்க வேண்டுமாம்.
அடுத்த ஜென்மத்தில் மோட்சம் பெற விரும்புவோர் முன்னோர்களுக்காக இந்நாளில் இந்தச் சடங்கை செய்ய வேண்டுமாம்! அப்படிச் செய்யத் தவறினால் அவனது மனைவியின் கருப்பையில் கர்ப்பம் தரிக்காது; அப்படியே தரித்தாலும், அது பத்து மாதம் நிறைவதற்கு முன்பே கலைந்துவிடும். எனவே ஆடி அமாவாசையன்று புரோகித ருக்குத் தேங்காய், பழம், அரிசி, காய்கறிகள் வேட்டி, துண்டு போன்றவற்றை வழங்க வேண்டுமாம்!
புரோகிதச் சுரண்டல் என்றால் என்ன வென்று இதுவரை அறிந்திராதவர்கள் இதன்மூலம் அதன் கனபரி மாணத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மக்களை அச்சுறுத்தி அவர்களின் பொருள்களைப் பறிக்கும் பகற்கொள்ளை தானே இது?
செத்தபின் புதைத்தோ எரித்தோ முடித்துவிட்ட பிறகு செத்தவர்கள் எங்கு  இருக்கிறார்கள்?
இந்தப் புரோகிதப் பார்ப் பானுக்கு நம் உழைப்பால் கிடைத்த பொருள்களை ஏன் தானம் கொடுக்க வேண் டும்? கடுகளவு சிந்தித்த துண்டா?
ரத்தக் கண்ணீர் நாடகத் தில் ஒரு காட்சி! நடிகவேள் எம்.ஆர். ராதாவின் அப்பாவுக்கு திவசம் செய்வதற்குப் புரோ கித பார்ப்பான் வருவான். அப்பொழுது நடிகவேள் கேட்பார். அய்யர்வாள் உங்களுக்குக் கொடுக்கும் இந்தப் பொருள்கள் எங்க அப்பாவுக்குப் போய்ச் சேருமா? என்று கேட்பார் - பேஷா சேரும் என்பான் அந்தப் புரோகிதன்;  ஓ புரோகிதன் வயிறு பரலோ கத்துக்குத் தபால் பெட் டியோ? என்று அவருக்கே உரித்தான அந்த நையாண்டி குரலில் ஏற்றி இறக்கிக் கேட்பார். கொட்டகையே அதிரும் அளவுக்குக் கரஒலி எழும்!.
உண்மையில் திதியின் போது புரோகிதன் என்ன மந்திரம் சொல்லுகிறான்?
மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, த்னமே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.
பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னியில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவி ஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதா வது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்.
ஆதாரம்: சுவாமி சிவா னந்த சரசுவதியின் ஞான சூரியன்
தன் தாயைச் சந்தே கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.
ஒழுக்கக் கேடும், விபச்சாரமும் தானே பார்ப் பனீயம்!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...