Saturday, June 1, 2013

அம்மணக் கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!


- கி. தளபதிராஜ்
"தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்" என்பது போல் ஆனந்த விகடனுக்கு தலைக் கொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரணையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசை யால் அதை வாங்கி சூதாட நினைப் பதுமே ஆனந்த விகடனின் ஆண வத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.
(குடிஅரசு -10.10.1937) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத் துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனைக் கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்!    முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே கணித்த ஆனந்த விகடன் மீதான மதிப்பீடு!.    ஆச்சாரியார் காலத்தில் துவக்கிய ஆரியக் கூத்தை அம்மையார் ஆட்சிக்காலத்திலும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனந்த விகடன்!.
1937ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வெளிவந்த ஆனந்த விகடனில், ஒரு கட்டுரை!. தலைப்போ "வாழிய செந்தமிழ்!". கட்டுரையின் உள்ள டக்கம் என்ன தெரியுமோ? ஹிந்தியை மூன்றாம் பாரம்வரை கட்டாய பாடமாக வைக்க வேண்டும். அப்படி செய் தால் சமஸ்கிருதம் சுலப மாக வந்துவிடும்.  தமி ழைக் கற்றுக் கொடுக்கும் போது தமிழரின் நிலை, கொள்கை ஆகியவற்றை புகுத்தக் கூடாது. இது தான் விகடனின் கட் டுரை.   வாழிய செந்தமிழ் என தலைப்பிட்டு, ஹிந் திக்கு வாழைமரம் கட்டி வந்தனம் பாடியது!. சந்தடி சாக்கில் சமஸ் கிருதத்திற்கு சாமரம் வீசி வரவேற்பு பத்திரம் வாசித்தது!. தமிழினக் கலாச்சாரத்திற்கோ தடைபோட்டது!. ஆனந்த விகடனின் தமிழ்ப்பற்று இது தான்!.  அண்மையில் ஆனந்த விகடன் "பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்" எனும் சொல் அகரா தியை ஆயிரக்கணக்கான பக்கங் களை உள்ளடக்கிய மூன்று தொகு திகளாக வெளி யிட்டது. அதில் வெளிவந்த ஓரிரு வார்த்தைகளின் பொருளைப் பாருங்கள்!
அந்தணர்
இந்தியாவில் உள்ள நால்வர் ணங்களில் முதல் பிரிவைச்சேர்ந்தவர். வேதகாலத்தின் பிற்பகுதியிலிருந்தே புரோகிதர் சாதி இருந்து வந்துள்ளது. மற்ற பிரிவினர்களை விட இவர்கள் அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்கள் என நம்பப்பட்டது. எனவே இவர்கள் மட்டுமே மதச் சடங்குகள் செய்யத் தகுதியுடையவர் களாகவும் கருதப்பட்டனர். வேதகீதங்களின் தொகுப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்கள் வசமே விடப்பட்டது. உயர்ந்த அந்தஸ்தும் கல்விப்பாரம்பரியமும், இருந்த காரணத்தால் இந்திய அறிவாராய்ச்சியில் இவர்கள் பல நூற்றாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆன்மீகத்திலும், அறிவிலும் மேன்மையான இவர்கள் அரசியல் சக்திவாய்ந்த சத்திரிய குலத்தினர்க்கும் அறிவுரை வழங்கி வந்தனர். சட்டப் படியான அங்கீகாரம் இல்லை என்றாலும் இன்றும் இவர்களில் பலர் தங்களது மரபுச் சிறப் புரிமைகளைத் தக்க வைத்துக் கொண் டுள்ளனர். சிலவகையான தடை விலக்குகளைக் கடைபிடித்தல், சைவ உணவு உண்ணல், சில தொழில் களிலிருந்து விலகியிருத்தல் ஆகிய வற்றின் மூலம் ஆச்சாரத் தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனர்.
ஆரியர்(கள்):
ஈரானிலும் வடக்கு இந்தியா விலும், குடியேறிய வரலாற்றுக் காலத்திற்கும் முந்தைய மக்கள். இவர் களுடைய ஆரிய மொழியி லிருந்துதான் தெற்கு ஆசியாவின் இந்தோ அய்ரோப்பிய மொழிகள் உருவாகின. ஆரிய இனம் பிற மக்கள் இனங்களைவிட உயர்ந்தது எனக்கருதப்பட்டது. இந்தக்கருத்தால் அடால்ப் ஹிட்லர் பீடிக்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே யூதர்கள், நாடோடிகள்(ரோமா), ஆரியர் அல்லாதவர்கள் ஆகியோரை அழிக்க வகைசெய்த நாஸி கொள்கையை ஹிட்லர் உருவாக்கினார்.
மனு:
இந்தியப்புராணங்களின்படி உலகின் முதல் மனிதர். மனுஸ் மிருதியை ஆக்கியவர். முதல் யாகத்தை நடத்தியவர் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் அரசராகவும் அறியப்படுகிறார். இடைக்கால இந்தியாவை ஆட்சி செய்தவர்களில் பலரும் இவரைத்தான் முன்னோர் என உரிமை கொண்டாடுகிறார்கள்.பிரளயவெள்ளம் குறித்த கதையில் நோவா மற்றும் ஆதாம் ஆகிய இருவரின் இயல்பு களையும் ஒருசேரக்கொண்டவர். மீன் ஒன்றினால் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டதால் ஒரு படகை உருவாக்கினார். இவரது படகு மலையின் உச்சியை அடைந்து நின்றது. வெள்ளம் வடிந்த பிறகு பாலும் வெண்ணெயும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினார். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றி னாள். இவர்கள் இருவரும் இணைந்து பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமா னார்கள். ஆனந்த விகடன் தகவல் களஞ்சியத்தின் யோக்கியதை இதுதான்!. பார்ப்பனப்பண்ணையம் கேட்பாரில்லை என்கிற போக்கில் தவறான தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறது.
அந்தணர்  மற்ற பிரிவினர்களை விட அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்களாம். சில தொழில்களிலிருந்து விலகியி ருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனராம். மலம் அள்ளுவதும், நாற்று நடுவதும், கல்லுடைப்பதும் எமது இனத்திற்கே உரிய தொழிலா? இந்தத் தொழில்களிலிருந்து விலகியிருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மைகளைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதாக கொழுப்பெடுத்து எழுதியிருக்கிறது. ஆரிய இனம் பிற மக்கள் இனங் களைவிட உயர்ந்தது எனக் கருதப்பட்டதாக தற்பெருமை பேசுகிறது விகடன்.
மனுவின் கதையோ ஆபாசத்தின் உச்சம்!. பாலும் வெண்ணெயும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினானாம். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றினாளாம். இவர்கள் இருவரும் (அப்பனும் மகளும்) இணைந்து  பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமானார்களாம். அட ஆபாசத்தின் அடித்தளமே உன் பெயர்தான் ஆரியமா? இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தகவல் களஞ்சியம் என்ற பெயரில் இப்படி அருவறுப்பான புனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விட வெட்கமாக இல்லையா உங்களுக்கு?
இப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தான்  ஈழத்தமிழர் மீது இப்போது திடீர் அக்கறை முளைத்திருக்கிறது!. விகடனில் வாரந்தோறும் எது வந்தாலும் வராவிட்டாலும் ஈழம் தொடர்பான கட்டுரை வராம லிருப்பதில்லை. கலைஞரை வசை பாடவே துவக்கப்பட்ட கட்டுரைக் களம் அது. டெசோ உட்பட கலைஞர் எதைச்செய்தாலும் அதை விமர்சிக்கவேண்டும் என்ற நோக் கிலேயே விஷம் கக்குகிறது. மீண்டும் கலைஞர் ஆட்சிபீடத்தில் அமர்ந்து விடக்கூடாது என்கிற ஆற்றா மைதான் ஆனந்த விகடன்களை இப்படி அம்மணக்கூத்தாட வைக் கிறது. சில எடுபிடிகளும் இனத் துரோகிகளும் வேண்டுமானால் அவர்களுக்கு வாளாகியிருக்கலாம். எந்த ஒரு மானமுள்ள தமிழனாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1937இல் குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகளை மீண்டும் நினைவுகொள்வோம்! ஆனந்த விகடன் வகையறாக்களை புறக்கணிப்போம்!.

1 comment:

Anonymous said...

pongadaa dubukkungalaa. ippadiyae polambittu ukkarunga. oru masirum pudunga mudiyadhu

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...