Saturday, June 15, 2013

இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு (2)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!
திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்!           - ஆர்


அறிவியல் கண்டுபிடிப்புகள், அத னால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏற்கெனவே இருந்த முறைகளை மாற்றுதலுக்கு உட்படுத்தின. இந்தியாவில் ஆலைகளின் வரவும், ரயில்களின் வரவும், அய்ரோப் பியக் கலாச்சார ஊடுருவல்களும் இங்கே இந்த ஜாதி அமைப்புகளை கூக்குரல் இடச் செய்தன. பழமை அவலக்குரல் எழுப்பிக் கொண்டே புதுமையை ஏற்றுக் கொண்டது. காரணம் ஒரு ஜான் வயிறு! அது பி அண்டு சி மில்லுக்கும் பொருந்து வதாக இருந்தது.
பி அண்டு சி ஆலை யில் எல்லா ஜாதியினரும் பணியாற் றினர். இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் சரி பகுதியினர். இவர்கள் சென்னை நகரின் சேரிகளில் வாழ்ந்தனர். பிறர் ஒட்டுக் குடித்தனத்தில் இருந்தனர். ஒரு வீட்டில் 32 குடித்தனங்கள் வரை இருந்தன. அந்தக்குடும்பங்களே ஒரு தொழிற் சாலையாக இயங்கின.
தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ஆலையில் ரூ.26/- பயிற்சியற்ற தொழிலாளிக்கு (Unskilled)
12½   அணா முதல் 14 அணா வரை தினக்கூலி. (78 பைசா முதல் 87 பைசா வரை) இது அக்கால புள்ளி விவரங்கள் தருகின்ற செய்திகளாகும். தொழிற்சங்கம் தொடங் கப்பட்ட காலத்தில் இங்கே நிலைமை என்ன? நீதிக்கட்சி, காங்கிரஸ், ஹோம் ரூல் இயக்கம், முஸ்லிம் லீக் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து வருகின்ற அமைப்புகள். நீதிக்கட்சியின் தொடக்கக் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் இரண்டொருவர் இருந்தனர். அதில் ஒருவர் சக்கரைச் செட்டியார். ஹோம்ரூல் இயக்கத்தினரும் இருந்தனர். காங் கிரஸ்காரர்கள் இருந்தனர்.
அப்படி இருந்தோரில் முக்கியமானவர்கள் திரு. வி.க., B.P. வாடியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணி பிள்ளை, வ.உ.சி., ம.சிங்காரவேலர், சுப்பிரமணிய சிவா, இ.எல்.அய்யர் (இலும்பை இலட்சுமண அய்யர்) போன்றோர் ஆவர்.
சென்னைத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரே தவிர இதன் உறுப் பினர்கள் பி அண்டு சி ஆலைத் தொழி லாளர்களே ஆவர். இச்சமயம் தொடங் கப்பட்டபோது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாக B.P.
வாடியா தலைவ ராகவும், திரு. வி.க. துணைத் தலைவராக வும், செல்வபதி செட்டியாரும் இரா மஞ்சலு நாயுடுவும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹோம் ரூல் இயக்கத்தினர் தொழிற்சங்க இயக்கத் தில் ஆர்வங்காட்டி இதே கால கட்டத்தில் மத்திய சங்கம் அமைத்தனர், இது வெற்றி பெற்றதாகச் சொல்லி விட முடியாது.
சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்பாகவே பி அண்டு சி யில் 1878-லும், 1889-லும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1902 பங்கிங்காம் ஆலையில் மட்டும் வேலை நிறுத்தம் நடந்தது. உலகப் போர் முடிந்தும், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தும் இருந்த வேளையில் பசிப்பிணியும், பஞ்சமும் சென்னையில் வாட்டியதால் 1920-21-இல் அப்போதைய நகரில் மட்டும் 30 வேலை நிறுத்தங்கள் நடைபெற்று இருக்கின்றன. சென்னை யில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருந்ததாகத் திரு. வி.க. குறிப்பிடுகிறார். இதனால் 90,000 தொழிலாளர்களை வேலை வாங்கும் 35 முதலாளிகள் 1920-ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஒன்று கூடிப்பேசினர். அத்தியாவசியமானதாக கருதப்படுகிற ரயில்வே, மின்சாரம், டிராம்வே, மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியன நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தடை செய்யப்பட வேண்டும் என இக் கூட்டம் தந்தி மூலம் அரசைக் கேட்டுக் கொண்டது. இப்படித்தந்தி கொடுத்தவர் யார்? அப்போதைய பின்னி நிறுவனத் தின் இயக்குனரான ஏ.பி.சிமன்ஸ் என்பவர் தான். இத்தந்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அரசினர்க்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினர். இவற்றைக் கிடைக்கப் பெற்றவுடன் அரசினர் ஓர் ஆணையை வெளியிட்டனர். அதில் தாடண்டர் என்பவர் குறிப்பு எழுதினார். இவர் ஓர் உயர்அரசு அலுவலர். இவர் பெயரில் சென்னை சைதாப்பேட்டையில் தாடண்டர் நகர் இருப்பதை இத்தருணத் தில் இங்கே பதிவு செய்கின்றோம்.
1920-ஆம் ஆண்டு பி அண்டு சி ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடந் தது. போலீஸ், பின்னி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது. அரசு வெள்ளையர் கையில் இருந்தது. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு பிரச்சினை போயிற்று. அதனால் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். 1920-ஆம் ஆண்டு அக்டோபரில் சங்க நடவடிக்கை களில் பெரிதும் பங்காற்றிய நடேச முதலியார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் அவர்க்குக் கீழே இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்களும் இப் பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுகின் றனர். இதனால் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு இயந் திரங்களுக்கு அருகே அமர்ந்து விடுகின்றனர். அதாவது உள்ளி ருப்பு வேலை நிறுத்தத்தைச் செய்தனர். பிறகு தொழிலா ளர்கள், ஆலை மேலாளரைக் காணச்சென்றனர். கூட்டத்தைக் கண்ட மேலாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியை எடுத்தான். தொழிலாளர்கள் அதனைக் கைப்பற்றினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நிர்வாகத்தினர் கதவடைப்பு என்று அறிவித்தனர். கதவடைப்புக்குப் பிறகு சென்னைத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த பி அண்டு சி ஆலை நிர்வாகம் சென்னைத் தொழிலாளர் சங்கத்தை ஒழிக்க முடிவு எடுத்து செயல்படத் தொடங்கிற்று. வேலை நிறுத்தத்தினால் நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்பட்டதென்றும் அதனால் இழப்பீடாகத் தொழிற்சங்கம் ரூ. 75,000/- வழங்க வேண்டும் என்றும் வாடியா, திரு. வி.க., ஜி.ராமஞ்சலு நாயுடு, வேதநாயகம், எஸ்.நடேச முதலியார், வரதராஜ நாயகர், கேசவலு நாயுடு, சையட் ஜலால், கோ.மா.நடேச நாயகர், நமசிவாயம் பிள்ளை ஆகிய 10 பேர் மீது பின்னி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்தப் பத்து பேரில் வாடியாவும், திரு. வி.க.வும் தவிர மீதமுள்ள 8 பேரும் ஆலைத் தொழிலாளர்கள். தொழிற்சங்க சட்டங்கள் இயற்றப்படாத காலமாதலால் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பத்துபேரும் வேலை நிறுத்தம் முடியும் வரை தொழிலாளர் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்தக் காலமாதலால் தொழிற்சங்க வங்கிக் கணக் கிலிருந்து பணம் எடுத்து தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தப் போராட்டத்தினால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர் என்பதை முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.
B.P. . வாடியாவுக்கு மேலே நாம் குறிப்பிட்டு இருக்கிற உயர்நீதிமன்ற வழக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் - தியோசிபிக்கல் சொசைட்டியச் சேர்ந்தவர். 1921-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் பெசண்ட் அம்மையாரோடு பின்னி கம்பெனியின் தலைமை நிர்வாகி களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் விளைவாக பத்துபேர் மீதான வழக்குத் திரும்பப் பெறப்படும் என்றும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவர் என்றும் வாடியா திரு. வி.க.விடம் கூறினார். அதோடு தொழிலாளர் கூட்டத்திலும் என்ன நிபந் தனைகள் என்பதை விளக்கி வாடியா பேசினார். ஆனால் வாடியா பேசிய பேச்சுக்கும் தியோசிபிக்கல் சொசைட்டியின் நாளேடான நியு இந்தியாவில் வெளியான ஒப்பந்த நிபந் தனைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. மூன்று மாதங்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் அடிப்படை சிக்கல் எதுவும் தீர்க்கப்படாமல் முடிவுற்றது. தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த ஏமாற்றமே 1921-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு அடிப் படையாக விளங்கியது.
1921-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.  மே மாதம் 20ஆம் தேதி சம்பளம் போதாது என்று கர் நாடிக் ஆலையின் பஞ்சை தூய்மைப்படுத்தும் (Carding) பிரிவுத் தொழிலாளர்கள் 600 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். இப்பிரிவு இயங்காத நிலையில் இதரப்பிரிவுகளுக்கும் வேலை இருக்காது என்பதால் நிர்வாகத்தினர் வேலை இல்லை என்று தொழிலாளர் களுக்கு மே 21-ஆம் தேதி அறிவித்தனர். திரு. வி.க., ஞானியார் அடிகள் கடலூரில் கூட்டிய மாநாடு ஒன்றிற்குச் சென்று இருந் தார். அவருடனோ, பிற சங்க நிர்வாகி களுடனோ கலந்து கொள்ளாமல் தொழி லாளர் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். சங்கத்தின் கட்டளை இன்றி வேலை நிறுத்தம் செய்தது தவறு என்று இதனைத் திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே தொழிலாளர் பிரதிநிதிகள் கர்நாடிக் ஆலையின் மேலாளர் ஆஷ் வந்த்தை அணுகினர். வேலைக்குத் திரும்பு கிறோம் என்று கோரினர். அதற்கு மேலாளர் தாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றும் மேலாண்மை இயக்குனரைச் சந்திக்குமாறு கூறினார். தொழிலாளர்கள் மறுநாள் மே 26-ஆம் தேதி மேலாண்மை இயக்குநரை 30 பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர் சில நிபந் தனைகளை விதித்தார்.
1) இவ்வாண்டுக்குரிய போனஸ் யாருக்கும் கிடையாது.
2) வேலை நிறுத்த நாளுக்குரிய கூலி கிடையாது.
3) விடுமுறை விதிகள் மாற்றியமைக்கப்படும்.
இவையே அந்த நிபந்தனைகள். பிரதி நிதிகள் அனைவருக்கும் இத்தண் டனையை விதித்தல் உரியதாகாது. 600 கார்டிங் தொழிலாளர்களும் பாதிக்கப் படுகிறார்கள். இது முறையற்றது என்று எடுத்துரைத்தார்கள். இதைத் திரு. வி.க.விடமும் கூறினர்.
அவரோ, 600 பேருக்காக 5000 பேரைத் தண்டிப்பது நியாயமல்ல என்று கூறியதோடு இதற்கு ஓர் ஆலையின் வேலை நிறுத்தம் பயன்படாது. இரண்டு ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்தால் தான் பயன் விளையும் என்று திரு. வி.க. விளக்கினார்.
திரு. வி.க.வின் யோசனைப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1921 ஜூன் 3ஆம் தேதி பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்தப்பட் டது. கூட்ட முடிவுப்படி பின்னி மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அறிக்கை மட்டுமின்றி இது குறித்து திரு. வி.க.,
..... எங்களுக்கு இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தக்க பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும். இரண்டு ஆலைகளும் வெவ் வேறானவை, கர்னாடிக் ஆலைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக் கிறது என்று வினவியவரிடம் இரு மில்களும் ஒரே நிர்வாகத்திற்கு உட்பட்டு உள்ளமை யால் ஒரு மில்லுக்கு ஏற்பட்டது இன் னொரு மில்லுக்கும் ஏற்பட்டதாகும். அதைபற்றி கர்நாடிக் மில் தொழிலாளர்கள் அநியாயமாய் நடத்தப்பட்டபோது எப்படி பங்கிங்காம் தொழிலாளர்கள் சும்மா இருக்க முடியும்?
- நவசக்தி (10.6.1921) என்று எழுதினார். இதற்கு எந்த பதிலையும் பின்னி நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு அனுப்பவில்லை, ஆகவே மீண்டும் தொழிலாளர்கள் ஜூன் 14-ஆம் தேதி கூட்டத்தைக் கூட்டி வேலை நிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திற்கு அனுப்பினர், இது குறித்து திரு. வி.க.
... நீங்கள் கர்நாடிக் மில் தொழி லாளர்களுக்கு நியாயம் செய்யாததற்காக வும் நாங்கள் 4-ஆம் தேதியில் எழுதிய கடிதத் திற்குப் பதில் விடுக்காமல் இருப்பதற் காகவும் வருந்துகிறோம்.
கர்நாடிக் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனுதாபத்தைக் காட்டுவதற்காக வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 14-ஆம் தேதி மாலையில் சங்கக்கூட்டத் தில் கூட்டம் கூட்டி எல்லோரும் 20-ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுடைய குறை நிவர்த்திக்கப்படும் வரை வேலை நிறுத்தம் நீடிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நவசக்தி (17.6.1921) என்று எழுதி னார் இதற்கு நிர்வாகத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் ஆலை முதலாளியும், அரசும் கைகோர்த்து கொண்டனர். ஒற்று மையாய் இருந்த தொழிலாளர் களிடையே பிளவுகளை உண்டாக்கினர். ஒரு காலத்தில் இராயப்பேட்டை வெஸ்லியன் கல்லூரியில் திரு.வி.க. வேலை பார்த்த போது அவரோடு ஆசிரியராக வேலை பார்த்த எம்.சி. ராஜா இக்கட்டத்தில் திரு.வி.க. தொழிலாளர் தலைவர் ஆனது போல் அவர் ஆதிதிராவிட வகுப்பாருக்குத் தலைவராகி இருந்தார்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...