Tuesday, February 12, 2013

இந்து - ஆன்மீகக் கண்காட்சியா?


5ஆவது இந்து - ஆன்மீக சேவைக் கண்காட்சி ஒன்றை சென்னையில் பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமருமான லால்கிஷன் அத்வானி தொடங்கி வைக்கிறாராம்.
கடந்த ஆண்டுகூட சென்னை வைஷ்ணவா கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வு மய்யத்தின் தலைவராக இருந்த நட்ராஜ் என்பவர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து அந்தக் காரியத்தைச் செய்தார் (இது அரசின் மதச் சார்பின்மை தன்மைக்கு விரோதமானதே!)
இந்தக் கண்காட்சியில் ரவி சங்கரின் வாழும் கலை, ஆரிய சமாஜம், இஸ்கான், ஈஷா யோகா பீடம், காஞ்சி காம கோடி பீடம், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடம், பிரம்ம குமரிகள் இயக்கம், மாதா அமிர்தானந்தமயி மடம், வேலூர் நாராயண பீடம், வனவாசி சேவா, கேந்திரம், உளுந் தூர்பேட்டை சாரதா ஆசிரமம், விவேகானந்த கேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்கு ஏற்கின்றனவாம்.
சரி, இந்த அமைப்புகள் எத்தகைய சேவைகளை செய்யத் துடிக்கின்றனவாம்?
(1) மக்கள் மத்தியில் பேதங்கள் கூடவே கூடாது; அதுவும் பிறப்பின் அடிப்படையிலான உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி- இவை கூடாது என்று கூறப் போகிறார்களா? பிரச்சாரம் செய்யப் போகி றார்களா?
2) தீண்டாமை க்ஷேமகரமானது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்துள்ளாரே - அது தவறு; தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை என்று அறிவிப்பார்களா?
3) இந்துமதம் ஜாதியின் காரணமாக பிளவு பட்டுக் கிடக்கிறது - எனவே ஜாதி முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்று அதிகார பூர்வமாக அறிவிப்பார்களா?
4) இஸ்லாம் மதத்தில் இருப்பதுபோல, கிறித்துவ மதத்தில் இருப்பதுபோலவே இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவு, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயில் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியைப் பெற்றால் இந்துக் கோயில்களில் தாராளமாக அர்ச்சகராகலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொடுப்பார்களா?
5) இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை விலக்கிக் கொள்வார்களா?
6) சங்கர மடங்களில் இந்து மதத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சாரியாக வருவதற்குத் தடையில்லை என்று அறிவிப் பார்களா?
7) இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வேறுபாடுகளை வெளிப்படுத்தும் எந்தவித மதச் சின்னங்களையும் அணியப் போவதில்லை, குறிப்பாகப் பூணூல், நெற்றியில் தீட்டப்படும் அடையாளங்கள் இவற்றைக் கைவிடுவது என்று முடிவு எடுத்துச் சொல்லுவார்களா?
8) இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்று அறிவித்துள்ளதால், அந்தச் சேவை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிப்பார்களா?
9) சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதி என்று கருதப் படும். மக்கள் மத்தியிலே வீடுகட்டிக் கொடுப் பார்களா?
இவற்றை எல்லாம் செய்யாமல் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்பது ஊரை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஏற்கெனவே இந்து மதம் கடைப்பிடித்து வரும், துவேஷங்களை, ஜாதி வேற்றுமைகளை, தீண்டாமை என்னும் தீய நோயை மேலும் நீரூற்றி, எரு போட்டு வளர்ப்பதற்கான ஏற்பாடுதான் இது என்பது வெளிப்படை.
இந்து மதத்தின்மீது கடுமையான விமர் சனங்கள் இருப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இது போன்றகள் காட்சி என்னும் ஜிகினா வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதைப் பார்ப்பனரல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...