Tuesday, December 18, 2012

பெரியார் பேசுகிறார்


(வடநாட்டில் பெரியார் ஒரு சுற்றுப்பயணத் தொகுப்பு நூலில், தொகுதி_2 333_ஆம் பக்கத்தில் இருப்பது)
சும்மா நினைத்தால் மட்டும் போதாது இன்னமும் சூத்திரன் என்றால் பார்ப்பனனின் வைப் பாட்டி மகன் தாசிபுத்திரன் என்று சாஸ்திரத்தில் இந்து மத சட்டத் தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது!
எத்தனை நாளாக இந்தக் கொடுமை இருக்கிறது. இதுபற்றி மான உணர்வோட எவனும் கவலைப்படுவது இல்லையே!
இதை சகித்துக் கொண்டுதானே நாம் இருக்கிறோம். நமக்கெல்லாம் மானம் முக்கியமல்லவா? இப்படி ஓர் உணர்ச்சி வந்து நாம் ஏன் கீழ்சாதி, பிறவி இழிவு எதற்கு நமக்கு என்றெல்லாம் கேட்டால் உடனே அடுத்த ஜென்மத்தில் ஆண் டவன் மாற்றுவார், போன ஜென் மத்தில் புண்ணியம் செய்தான். அவன் பிராமணனாய்ப் பிறந்தான்.
நீ போன ஜென்மத்தில் பாவம் செய்தாய். பறையனாய் சூத்திரனாய் பிறந்தாய் என்கிறான், இது என் செயல் அல்ல
கடவுள் செயல்
பகவான் செய்தது என்கின்றான் -ஆதாரத்திற்கு மதத்தை சாஸ்தி ரத்தைக் காட்டுகிறான் கடவுள்
மறுபிறப்பு
போன ஜென்மம்
பாவம் புண்ணியம்
இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ? மாற வழி உண்டா?
இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குள் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்? கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல் லாம் அது நிறைந்து போய் இருந்தால் நம் சாதி இழிவு பிறவி பேதம் ஒழிய முடியுமோ?
அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ்சாதி ஆக்கியிருக்கிறான்?
நான் தோன்றித்தானே கடவுளைப் பழிக்க மதத்தை ஒழிக்க சாஸ்திரம் புராணக் குப்பைகளையெல்லாம் புரட்டு என்று காட்டிய பிறகு அல்லவா இன்று பல பேர் இதனை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் நெற்றியில் சாம்பலும் நாமமும் அடித்த முட்டாள்கள் 10 பேர்கள் கூட உங்களில் இல்லையே.
இது எதைக் காட்டுகிறது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...