Tuesday, December 18, 2012

மோடி - ஊதிப் பெருக்கும் ஊடகங்கள்


நமது ஊடகங்களின் தலையாய பணி - தகுதி அற்றவரையும் மிகுதியாகக் காட்டுவதே எடுத்துக் காட்டு பிரதமர் கனவு காணும் மோடியை இந்தியா விலேயே மிக முன்னேற்றமடைந்த மாநிலமாக குஜராத்தை உயர்த்தியவர் போன்று ஒரு மாயையை தோற்றுவித்தது தான். நம் நாடு விடுதலை அடைந்த பின்பு  வட மாநிலங்கள் வளர்ச்சி கண்டன. அவற் றில் குஜராத் மாநிலமும் ஒன்று. இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் ஊடகங்கள் ஏதோ மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் குஜராத் உலகம் வியக்கும் அளவில் அங்கு பாலும் தேனும் கரை புரண்டு ஓடுவது போல மிகைப்படுத்துகின்றன.
ஒரு மாநிலத்தின் கட்டமைப்புகள் முன்னேற்றத் துக்கு வழி வகுக்கும். போக்குவரத்துக்கேற்ற  தெருக்கள், மின்சாரம், குடிநீர் கல்வி சுகாதாரம் போன்றவை அடிப்படைத் தேவைகள் . இவைகளில் வேறு மாநிலங்கள் சிறப்பாக செய்திருந்தாலும் குஜராத் மட்டுமே சாதனை புரிந்தது போல ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. அந்த மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கான அளவுகோலையும் நாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, அச்சமற்ற நிலை, சம நிலை, மாநில வருமானம் மற்றும் முன்னேற்றம் எல்லா தரப்பினரையும் சென்றடைகின்றனவா என்பதனையும் நாம் நோக்க வேண்டும். சில புள்ளி விவரங்களை சுருக்கமாகக் காண்போம்.
திரு. அதுல் சூட் நவம்பர் 30ஆம் நாள் இந்து நாளேட்டில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அவர் துவக்கத்திலேயே சொல்வது, குஜராத் முன்னேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என்று. ஒன்றல்ல பல விடயங்களில் அதி வேக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அந்த மாநிலம் மக்களின் கல்வி சமூக சம நிலை, சுகாதாரம், நிரந்தர வாழ்வாதாரம், நீதி அமைதி போன்றவை புறந்தள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பளபளக்கும் மேல் பூச்சுக்கு அடியில் புற்று நோய் உள்ளனவோ என்று தோன்றுகிறது. குஜராத் போன்றே நல்ல  முன்னேற்றத்தை காண்பிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அரியானா. ஆனால் இந்த மாநிலங்களின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு முன்னேற்றமாகத் தெரியவில்லை. ஊடகங்களின் ஒரே குறிக்கோள் மோடியை தூக்கிப் பிடிப்பதுதான். அதுல்சூட் கூறும் விளக்கங்கள்.
1. வேலை வாய்ப்பு: மோடியின் சாதனையின் முதல் வீழ்ச்சி வேலை வாய்ப்பில் காணப்படும் தேக்க நிலை. புதிய  வேலை வாய்ப்புகள் பெருக வில்லை. ஊதிய உயர்வும் நிகழவில்லை. தொழிலாளர்கள் நிலை பரிதாபமே.
2. கிராமங்களில் நிலவும் ஏழ்மை... பட்டணங்களில் காணப்படும் பளபளப்பு கிராமங்களில் காணும் அவலங்களை மறைக்கின்றன ஜீஷீஸ்மீக்ஷீஹ் ணீனீவீபீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீவீஹ் என்கிறார்.
கிராமங்களில் நிலவும் ஏழ்மையைக் குறைப்பதில் குஜராத் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைவிட பின் தங்கியே உள்ளது. 2009-_10 இறுதியில் குஜராத் கிராமங்களில் நிலவும்  ஏழ்மை அரியானா மற்றும் தமிழ்நாட்டைவிட அதிகம். தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஏழ்மையின் ஏற்றத் தாழ்வு குறைப்பு விகிதம் மிக மெத்தனமாக உள்ளது. இன்று குஜராத் கல்வியிலும், சுகாதாரத்திலும் பின் தங்கிய பணக்கார மாநிலம். கல்வி அறிவு பெற்றோரில் அது ஐந்தாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரில் இருபத்தோராம் இடத்திலிருந்து இருபத்தாறாவது இடத்திற்கு தாவி உள்ளது.
சுகாதாரம் குழந்தை இறப்பு தடுப்பில் குஜராத் பத்தாவது இடத்தில் உள்ளது. ஊட்ட உணவு போதாமை 1998_-99இல் இருந்ததைவிட 2005-_2006 இல் அதிகரித்துள்ளது. நோயிலிருந்து தடைக் காப்பு அளிப்பதில் ஒன்பதாவது இடத்திலிருந்த குஜராத் பதினோராவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சமூக முன்னேற்றங்களுக்கான நிதி பகிர்வு குறைந்து கொண்டே வந்துள் ளது. வேறு துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதுதெளிவு.
பத்து ஆராய்ச்சியாளர்கள் இந்திய மாநிலங்களின் முன்னேற்றங்களைப் பற்றிய ஆய்வில் இது போன்ற குறியீடுகளை நாம் காண முடிகின்றது.
குஜராத்துடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிரா அரியானா மற்றும் தமிழ்நாடு சிறந்த முன்னேற்றங்களை பல்துறைகளில் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு இந்த மாநிலங்களின் முன்னேற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் அகில இந்திய மட்டில் குஜராத் மட்டுமே தலை நிமிர்ந்து உள்ளது என்ற வறட்டு வாதத்தை நமது ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இவைகளின் உள்நோக்கமே வேறுதான்.
மேனியின் வெளி பளபளப்பு புற்று நோயை மறைக்கின்றதோ!
- சி. நடராசன்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...