Friday, November 2, 2012

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பயணத்தில் ஒரு மைல் கல்!


அய்.நா. துணைப் பொதுச் செயலாளர்  யான் லியாசனோடு
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. சந்திப்பு

உங்கள் கோரிக்கை: அய்.நா. தீர்வு காணும்
அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் உறுதி

அய்.நா.  மன்ற துணைத் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் டெசோ மாநாட்டு தீர்மானம், தி.மு.க. தலைவர் கலைஞரின் கோரிக்கை மனு மற்றும் ஆவணங்களை வழங்கி விவரித்த காட்சி!

நியூயார்க், நவ.2- ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பயணத்தில் இதோ ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு - தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளு மன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் நியூயார்க் சென்று அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசனைச் சந்தித்து சென்னையில் நடத்தப் பட்ட டெசோ மாநாட்டுத் தீர் மானங்கள் மற்றும் அதன் விளக்க ங்களை எழுத்து வடிவத்திலும் குறுந்தகட்டின் வாயிலாகவும் அளித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அய்.நா. மன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து சென்னையில் நடைபெற்ற `டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை, ஜெனீவாவில் அய்க் கிய நாடுகள் மனித உரிமைக் கவுன் சிலில் வழங்கப்பட உள்ள மனுவினை தி.மு.க. பொருளாளர்  மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் அய்.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் வழங்கினர். அப்போது அய்.நா. மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன்,  மு.க. ஸ்டாலின் அவர்களி டம் ``அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கை சீற்றத்திற்கு இடையில் மிகவும் சிரமப் பட்டு என்னைச் சந்திக்க வந்திருக் கின்ற இந்த நிகழ்ச்சி ஒன்றிலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உங்கள் தலைவரும், நீங்களும் எந்த அளவிற்கு மனித நேயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன் என்றார்.

மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்  அவர்கள் அப்போது, அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர் களிடம், ``எங்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வயது இப்போது 89. இதில் 75 ஆண்டுகளாக அவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உலகெங்குமுள்ள தமிழர்களுக் காகவும், தமிழ் இன உணர்வுகள் பாதுகாக்கப்படவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

இலங்கைத் தமிழர் பிரச் சினையில் தி.மு. கழகமும், எங்கள் தலைவர் கலைஞர் அவர் களும் 1958 ஆம் ஆண்டு முதல் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். இதற்காக சிறை சென்றும் தியாகம் புரிந்து உள்ளார்.

மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட வர் எங்கள் தலைவர் கலைஞர் அவர் கள் என்றார்.

அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன்

அப்போது, அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்கள், ``இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் உங்கள் தலைவரும், நீங்களும் அய்.நா. மன்றம் என்ன செய்ய வேண்டு மென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம்

இதற்கு  மு.க.ஸ்டாலின் அவர்கள், ``இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங் களில் குடிய மர்த்தப்பட வேண்டும், கவுரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற `டெசோ மாநாட்டின் தீர்மானத்தை நடை முறைப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட் டுள்ளார்கள். அவர்கள் மேலும் துன்பத்தை அனுப வித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இலங்கை ராணுவம் தவறான முறை யில் நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
அய்.நா. துணைப் பொதுச் செய லாளர் யான் லியாசன் அவர்கள், ``நீங்கள் அளித்துள்ள இந்தத் தகவல் மிக மிக முக்கியமானது. இந்தப் பிரச்சி னையை அய்.நா. மன்றம் எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து எங்கள் (அய்.நா. மன்றம்) பொதுச் செயலா ளரின் கவனத் திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம் என்றார்.

வாக்கெடுப்பு

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள், ``இலங்கைப் போரினால் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர் கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். அவர்கள் விரும்பியபடி குடியுரிமை பெற்றுத் தர வேண்டும். அனாதைகளாக வாழ்ந்து கொண்டி ருக்கின்ற தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை யில் தமிழர் பகுதிகளில் உள்ள அந்நாட்டு ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்கள், அவர்கள் விரும்பிய அரசியல் தீர்வு ஏற்பட - அவர்கள் விருப்பப்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.

அப்போது அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி கள் இலங்கைத் தமிழர்கள்  பிரச்சி னையில் எந்த நிலையில் இருக்கிறார் கள் என்றார். ``இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் இலங்கைப் பிரச்சினை யில் அங்குள்ள தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்ப தில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் அய்.நா. மன்றம்தான் சரியான தீர்வை ஏற் படுத்த முடியும் என்று நம்புகிறார் கள், மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் நடை பெற்ற பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச் சினை என்று எடுத்துக் கொண்டு அய்.நா. மன்றம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தெரிவித்தார் மு.க. ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரித் தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க உள்ள தாக தெரிவித்தார். அதற்கு அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்கள் வாழ்த்துக் கூறினார்.

28 நிமிடங்கள்

இந்தச் சந்திப்பின்போது அய்.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களின் ஆலோசகர் விஜய நம்பியார் உடனிருந்தார்.  இந்தச் சந்திப்பு பகல் 11.15 மணி முதல் 11.43 மணி வரை 28 நிமிடங்கள் நடைபெற்றது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...