Friday, October 5, 2012

கலைஞர் போட்ட கறுப்புச் சட்டை! பூணூல்களின் புழுக்கம்!




இன்றைய தினமணி ஏட்டில் 9ஆம் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்துள்ள படத்தைப் போட்டு, அவரது அறிக்கைக்கு இனி என்றும் கறுப்புச் சட்டைதான் அணிவேன் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதே பக்கத்தின் முன் பத்தியில் கறுப்புச் சட்டை - பாசிசத்தின் அடையாளம்? என்று விஷமமாகப் போட்டு முறுக்கு மீசைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்துள்ளார் ஆரிய வைத்தியநாத அய்யர்!
பூணூல் கூட்டத்தின் புதிய கொலம்பஸ், கறுப்புச் சட்டை என்றால் அது பாசிசத்தின் அடையாளம் என்று முசோலினியைத் தேடி இத்தாலிக்கு ஓடியுள்ளார்!
மற்ற வகையில் இத்தாலி என்றால் கடுமையாக விமர்சிக்கும் இவர்கள், இதற்கு மட்டும் இத் தாலியை நாடி ஓடி அந்த சரித்திரத்தைக் காட்டுகிறார்கள்!
அவர்களைக் கேட்கிறோம். திராவிடர் கழகத்தவரும் கலைஞ ரும், தி.மு.க.வினரும் கறுப்புச் சட்டை அணிந்தால் அவர்களை; பாசிஸ்டுகள் என்று வர்ணிக்கும் வர்ணாசிரம வாரிசுகளே,
மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களில் - உயர் நீதி மன்றம், உச்சநீதிமன்றம் வரையில் - வாதாடும் வக்கீல்களும், தீர்ப்பு எழுதிடும் நீதிபதிகளான நியாய வான்களும் கறுப்புடை அணிந்து அமர்ந்து விசாரணை செய்கின் றனரே - அவர்கள் எல்லாம் பாசிஸ்டுகளா?
மீசையும் தலையும்  வெளுத்தா லும் அது வெள்ளையாகத் தெரியக் கூடாது என்பதற்காக கறுப்பு டையை அடித்து, மீசை முறுக்கி விட்டுக் கொள்ளும் மனிதர்கள் எல்லாம் கூட பாசிஸ்டுகள் தானா?
வைத்தியநாத அய்யர்கள் தூக்கிப் பிடிக்கும் கீதையும், மனு தர்மமும் போதிக்கும் வன்முறையை மீறிய பாசிஸ்ட் ஏடுகள்,  உடினந -கள் உலகில் உண்டா?
ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட நிலையில் அதன் கொடி, ஜெர்மனி நாட்டின் ஹிட்லரின் சுவஸ்திக் சின்னம் நாசிசம் அல்லவா?   அவரின் கூட்டாளிதான் முஸோ லினி  என்பது வசதியாக மறந்து விட்டதா?
இத்தாலி வரலாற்றை, இரண் டாம் உலகப் போரில் இத்தாலியின் ஆட்சி பற்றி ஆராய்ந்து எழுதும் வைத்திய நாதர்கள் கொஞ்சம்  ஹிட்லரையும் ஜெர்மனியையும் கூட சிந்தித்து,
ஆர்.எஸ்.எஸ்.  கொடிய ஆரியத் தின் சின்னமாக சுவஸ்திக்கைத் தேர்வு செய்த கதை மறந்து விட்டதா? (பிறகு மாற்றியது வேறு விஷயம்).
யாருக்கு பாசிசம், நாசிசம் - அதிக உறவு -பூணூலிசத்துடன் தானே! இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ஹிட்லர் வெற்றி பெறுவான் என்று எதிர்பார்த்து ஜெர்மன் மொழியை விழுந்து விழுந்து படித்த பார்ப்பனர்களா இசங்களைப் பேசுவது?
பூணூல் என்பது சமதர்ம - சமத்துவ - சமாதான -சாட்சாத் சகோதரத்துவ  - மனிதநேயத்தின் மறு பதிப்போ! ஹி... ஹி... இந்தப் பிறவிப் பூணூல் பாசிசத்தை ஒழிப்பதற்குத் தான் இந்தக் கருப்புச் சட்டை என்பதை மறவாதீர்!
கண்ணாடி வீட்டிலிருப்பவர்கள் கற்கோட்டையை நோக்கி கல் வீசலாமா?
- ஊசி மிளகாய் -

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...