Friday, October 5, 2012

கடவுள்கள் இருக்க பயமேன்?


திக்குவாய் குறை தீர்க்கும் திருப்பந்துறை முருகப் பெருமான் - (மதுரை மணி, 10.11.2007)
கணித அறிவை மேம்படுத்த வேண்டுமா? இன்னம்பூர் இறைவனை நாடுங்கள் - (குங்குமம், 3.5.2007)
குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி இருக்கிறார் (நெல்லை)
திருமணம் கை கூட வைக்கும் திருவீழிமிழலை அழகிய மாமுலையம்மை (திருவாரூர்) - (தினத்தந்தி, இலவச இணைப்பு, 27.7.2010)
திருமணம் கை கூடும் திருநீர்மலை பெருமாள் (சென்னைக்கு தென்மேற்கே) - (ராணி, 16.5.2010)
வழக்குகளில் வெற்றி பெற கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயில் (சிவகங்கை) - (ராணி - 7.3.2010)
வீடு கட்ட உதவும் கடவுள் திருப்புகளூர் அக்னீஸ்வரர் (குங்குமம், 16.7.2009)
இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தஞ்ச புரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்)  - (தினத்தந்தி, ஆன்மீகப்பகுதி, 26.2.2010)
கல்யாணம் நடக்க வேண்டுமா? கடன் தீர வேண்டுமா? வழக்கில் வெற்றி பெற வேண்டுமா? திக்குவாய் தீர வேண்டுமா? குழந்தை பேறு வேண் டுமா? வீடு கட்ட வேண்டுமா? இவைகளுக்கெல்லாம் ஒவ்வொரு கோயிலும், அதில் குடி கொண்டிருக்கும் சாமியும் துணை இருப்பது உண்மையானால் நாட்டில் அரசாங்கமே தேவைப்படாதே!
பக்தர்கள் உண்மையில் இவற்றை நம்பினால் அரசிடம் மனு போடுவார்களா? அரசாங்கத்தின் 108 எண்ணை கூப்பிடுவார்களா?
யாரை ஏமாற்ற இந்த விளம்பரப் பட்டியல்?
மக்களுக்கு தன்னம்பிக்கையையும், செயல் திறமையையும், புத்தறிவையும் ஊட்ட வேண்டிய ஊடகங்கள் மக்களை மண் புழுவாக ஆக்க நினைக்கிறார்களே - இது நியாயமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...