Monday, September 17, 2012

தினமலரின் குறும்பு


தி.க. தலைவர் வீரமணி: என்றைக்கு நரசிம்மராவ் பிரதமராகி, நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆலோசனைப்படி, நிதித் துறை கொள்கை வகுக்கப்பட்டதோ, அன்றே உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்ற ஒட்டகம், இந்திய கூடா ரத்தில் நுழைந்தது. அதன் மூலம், புறத்தோற்றத் துக்கு இந்தியா வளர்வதைப் போலத் தெரிந்தாலும், நேரு அமல்படுத்திய சமதர்மக் கொள்கைகள், மெல்ல மெல்ல விடை பெறத் துவங்கின.
டவுட் தனபாலு: உங்க அரசியல் குரு கருணா நிதி, 1996ல் இருந்து மத்திய அரசு, முக்கிய கூட்டாளியா இருக்காரு... இந்த, 16 வருஷ கால கட்டத்துல, சமதர்மக் கொள்கைகள் மெல்ல மெல்ல விடைபெற்றதைத் தடுக்க, அவர் என்ன நடவடிக்கை எடுத்தாருங்கிறது தான் என்னோட, டவுட்!'
- தினமலர், 16.9.2012
கொஞ்ச நாளாக நம் பக்கம் திரும்பாமல் இருந்த தினமலர் சாரை விறுவிறுத்து நம் பக்கம் திரும்பியிருக்கிறது.
உலக மயம், தாராளமயம், தனியார் மயம் திரிசூலங்களைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருவதுதான் திராவிடர் கழகம்; திராவிடர் கழகத்துக்கு அரசியல் குரு என்று யாரும் கிடையாது. திராவிடர் கழகத்துக்கு ஒரே குரு தந்தை பெரியார்தான்! திராவிடர் கழகம் அரசியல் கட்சியும் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாமல் பத்திரிகை நடத்திக்கொண்டு இருக்கிறார்களே... ஹி.... ஹி....
ஆமாம் அவர்கள் குரு சங்கராச்சாரியார் கதை சந்தி சிரிக்கிறதே! இதைப்பற்றியும் கொஞ்சம் சிலாகிக்கலாமா?


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...