Monday, October 1, 2012

மதத்தைப் பற்றிய விபரீதம்!


மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதீகக் கொள்கையுடைய பார்ப்பனரல் லாதாரிலேயே அநேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்ப-தாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர் களும் நம்மைப் பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரச்சாரமும் செய்து வருவதனால், அவசரப்பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்-களுக்கும் கட்டுப்பட்டவர்களும் பழக்கம், பெரியோர் போன வழி என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம் மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப் படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை.
தன வைசியநாடு என்கிற நாட் டுக்கோட்-டைச் செட்டியார்கள் நாட்டில் நாம் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த காலையிலும் கூட, நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதீகச் செட்டியார் மார்களை இப்படித்தான் ஒரு பார்ப் பனன் சொல்லி ஏமாற்றிவிட்டான். அதாவது, ராமசாமி நாயக்கர் என்கின்ற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்கு கிறான். கலி அவனால்தான் வெளியா கிறது. நாத்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறு பிள்ளைகள் எல்லாம் கெட்டுப் போவார்கள். பிறகு கோயில் போய் விடும், மடம் போய் விடும், விபூதி போய்விடும் என்பதான பல விஷயங்களைச் சொல்லி ஏய்த்து விட்டான். இந்த வார்த்தைகளை நம்பி அங்குள்ள சில தனவான்கள் கூட்டம் கூட்ட இடம் கொடுக்காமலும் கூட்டம் சேர்ப்பதற்-காகச் செய்து வைத்து இருந்த சில ஆடம்பரங்களையெல்லாம் விரட்டி அடித்தும் கூட்டத்திற்கும் யாரையும் வரவொட்டாமலும் செய்துவிட்டார்கள். பிறகு நாமும் நம்முடன் கூட வந்திருந்த சில நண்பர்களும் கடைத்தெருவில் யாரையும் எதிர்பாராமல் ஒரு காப்பிக்கடையில் போட்டிருந்த பெஞ்சுப் பலகையை எடுத்து வந்து வீதியில் போட்டு அதன் பேரில் நின்று பேச ஆரம்பித்தோம்.
முதலில் தெருவில் போகிற வருகிறவர்கள் சற்று நின்று என்ன என்பதாகக் கேட்க ஆரம்பித்தார்கள். பிறகு அப்படியே உட்கார்ந்தார்கள். இரண்டொரு விஷயங்களைக் கேட்டு அவர்கள் கைத்தட்டி சிரிக்கவும், அடிக்கடி இம்மாதிரி செய்யவும், மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கனவான்கள் ஒவ்வொரு-வராய் வந்தார்கள். பிறகு பெண்களும் தாராளமாய் வந்தார்கள். கூட்டம் யாரையும் அறியாமல் தானாகவே பெரிய கூட்டமாய் விட்டது. பிறகு எங்களுக்குத் தெரியாமலே ஒருவர் விளக்குத் தருவித்துவிட்டார். இரவு ஒன்பதரை மணிவரையில் கூட் டம் நடந்தது. கூட்டம் முடிந்து நாங்கள் திரும்பி ஊருக்குப் புறப்படுகையில் ஒரு செட்டியார், பெரியவர், நல்ல வைதீகத் தோற்றத்துடன் இருந்தவர், எங்கள் மோட்டார் வண்டிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, அய்யா பெரியவரே சில பார்ப்பனர்கள் எங்களிடம் தங்களைப்-பற்றி தப்பும் தவறும் சொல்லி ஏமாற்றி-விட்டார்கள். நாங்கள் தங்களை தப்பாய் நினைத்துவிட்டோம். அதற்காக வருந்துகி-றோம், இன்று இரவு இங்கேயே இருந்து நாளைக்கு ஒரு உபந்யாசம் செய்து விட்டுப் போக வேண்டும். நானே எல்லா ஏற்பாடும் செய்கிறேன்.
இன்னும் பல பேர்கள் வந்து கேட்கவேண்டும் என்று எவ்வளவோ தூரம் வேண்டிக் கொண் டார். எங்களுக்கு மறுநாள் வேறிடம் ஏற்பாடாயிருந்ததால் அவர் விருப்பத் திற்கு இணங்க முடியாமல் போய் விட்டோம். புது வயலிலும் இம் மாதிரியாகவே செய்தார்கள். பிறகு அவர்களும் இப்படியே கூட்ட முடிவில் வந்தனோபசாரம் செய்யும்-போது எடுத்துச் சொன்னார்கள். கோட்டை-யூரிலும் இதுபோலவே நடந்தது. கடைசி யாக வாலிபர்களிட மாத்திரமல்லாமல் பெரியோர்-களிடமும் மிகவும் திருப் தியுடனே வந்து சேர்ந்தோம். எனவே விஷயங்களை பகுத்தறிய சோம்பல் பட்டுக் கொண்டு, தகுந்த அளவு மூளையைச் செலவு செய்வதில் சிக்கனம் காட்டியும், அவசரப்பட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்களே அல் லாமல் உண்மையை அறியமாட்டேன் என்கிறார்கள். இதற்காக நாம் இவர்கள் விஷயத்தில் பரிதாபப்படுவதல்லாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாததற்கு வருந்து-கிறோம்.
இம்மாதிரி கூட்டத்திற்குள் இது சமயமும் வைதீகக் கூட்டத்தில் மிகுதியும் எங்கு பார்த்தாலும் கலி வந்துவிட்டான். மதம் போச்சுது, கடவுள் போச்சுது, புரா-ணங்கள் போச்சுது, நாத்திகமாச்சுது என்-கின்ற வார்த்தைகளே அடிபடுவதாக சேதி-கள் வந்துகொண்டிருக்கின்றன. இது மாத்-திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பாரம்பரியமாக இருந்து வருவதாகத் தெரிகிறது. அதாவது, பார்ப்பனர்கள் அக்கிரமத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சொல் லட்டும், சர்க்கார் விஷயத்திலும், காங் கிரஸ் வியத்திலும் உள்ள புரட்டு களையும் சொல்லட்டும்; நமக்கு அதைப் பற்றி நல்லதுதான். ஆனால், மதத்தில் கை வைக்கவேண்டாம் என்று சொல் லுங்கள் என்கிறதாகவே பேசுகிறார்களாம். மற்றொரு கூட்டத்தினிடையிலோவென் றால், மதம், புராணம் இந்த மாதிரி புரட் டுகளைக் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால், காங்கிரசைக் கண்டித்து தேசி யத்தைக் கெடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பேசிக் கொள்ளப் படுகிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யக்கூடும்?
அவரவர்கள் சபலமும், மூடபக்தியும், சுயநலமும் நம்மீது குற்றம்கூறச் செய்கிற-தேயல்லாமல் வேறல்ல. எப்படிச் சில பேர்-வழி-கள் தங்கள் சுயநலத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் தேசத்தின் பேரால் காங்-கிரசையும், தேசியத்தையும் உண்டாக்கி உபயோகித்துக் கொண் டார்களோ அதுபோலவேதான் சிலர் சுயநலத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் கடவுள் பேரால் மதத்தையும் புராணங் களை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். மனிதனுக்கு கடவுளும், மதமும், புராணமும் எதற்காக இருக்க-வேண்டியது என்பதே நமது மக்களுக்கு ஏறக்குறைய முழுவதுமே தெரியாது என்றே சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
மனிதன் ஜீவன்களிடத்தில் கூடுமான வரை அன்பாகவும், மனித சமூகம் வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளுவதற்காகவே கடவுளை மனிதன் உணர வேண்டியவனாக இருக்கிறான். அதுபோலவே, அவ்வன்புக்கும், ஒழுக் கத்திற்கும் ஏற்ற முறைகளைக் கற்-பிக் கவே மதம் என்பதை ஏற்படுத்திக்-கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். அப்படிக்கு இருக்க, கடவுளுக்காகவும் - மதத்திற்காகவும் மனிதன் இருக்கிறான் என்பதாக மக்களுக்கு உணர்த்தப்பட்டு மக்கள் எல்லோரும் கடவுளையும், மதத்-தையும் காப்பாற்ற முயன்று விடுகிறார்கள். இதனால், கடவுளைக் காப்பாற்றுவதற்கு நாம் ஏன் கவலைப்படவேண்டும்? கட வுள் நம்மால் காப்பாற்றக் கூடியவரா யிருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை யேது என்பதாக யாராவது உணரு கிறார்களா?
மதம் என்கிற விஷயங்களும் நமக் குப் பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. மதம் என்பதை ஒழுக்கத்திற்கான கொள்கைகள் என்பதாகவே எண்ணாமல் சில சடங்குகள் என்பதாகவே கற்பிக் கப்பட்டிருக்கிறது. மதத்தில் தீவிரப் பற்றுள்ள எவனாவது, பொய் சொல்லாமலிருக்கிறானா, அக்கிரமம் செய்யாமலிருக்கிறானா என்பதைக் கவனித்தால் பெரிய பெரிய வைதீக வேஷக்-காரர்களின் யோக்கியதை எல்லாம் விளங்கி-விடும். நமக்கு நேரில் அநேக சாஸ்திரி-யார்களின் யோக்கி யதையும், பாகவதர்களின் யோக்கிய தையும், சன்னியாசிகளின் யோக்கியதை யும், தினமும் மூன்று வேளை குளித்து ஆறு வேளை கோயிலுக்குப் போய் வாரத்தில் 7 நாள் விரதமிருக்கும் பெரி-யோர்கள், ஆசாரக்காரர்கள், பக்திவான் கள் என்கிறவர்கள் யோக்கியதையும் நன்றாகத் தெரியும். கடவுள் பத்தியும், மதமும் ஏன் இவர்களை இப்படி நடத்து கிறது என்று ஒவ்வொருவரும் யோசித் துப் பார்க்க வேண்டும்.
(18.9.1927 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...