Friday, September 28, 2012

வடபழனி முருகனுக்கு கோவிந்தா திருடு போன மூன்று வெள்ளிக்கட்டிகள்


சென்னை, செப்.28-  சென்னை வடபழனி முருகன் கோவிலில் லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று வெள்ளிக்கட்டிகள் திருடு போய் உள்ளன. முருகனுக்கே கோவிந்தா (பட்டை நாமம்) போட்டவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறதாம்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர். முருகபக்தரான இவர் கடந்த ஜனவரி மாதம் வடபழனி முருகன் கோவிலுக்கு 7 வெள்ளி கட்டிகளும், 100 கிலோ வெள்ளி துகள்களும், கொலுசுகளும் காணிக்கையாக வழங்கினார்.

இதனை அப்போதைய கோவில் துணை ஆணையராக பணியாற்றி வந்த காவேரி பெற்று கோவில் பெட்டகத்தில் வைத்திருந்தார்.

இவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இளம்பரிதி என்பவர் துணை ஆணையராக பதவி ஏற்றார். உடனடியாக கோவில் பெட்டகத்தில் உள்ள நகைகளை சரிபார்த்தார். அப்போது 7 வெள்ளி கட்டிகளில் 3 கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக 3 இரும்பு கட்டிகளில் வெள்ளை வர்ணம் பூசிவைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெட்டகத்தின் சாவி வைத்திருந்த 6 குருக்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக குருக்கள் கூறினர். காவல்துறையில் புகார் செய்யப்படும் என்று கூறிய உடன், ஒரு வழியாக 3 வெள்ளி கட்டிகளையும் தாங்கள் வாங்கி வைத்து விடுகிறோம் என்று குருக்கள் கூறினர். அதன்படி ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் ஒரு கிலோ 600 எடையுள்ள 3 வெள்ளி கட்டிகளை வாங்கி பெட்டகத்தில் வைத்தனர்.
கோவில் இணை-ஆணையர் திருமகளின் கவனத்திற்கு இந்த திருட்டு சம்பவம் வந்தது. அவர் காணாமல் போன வெள்ளி கட்டிக்கு பதிலாக புதிதாக வாங்கி தந்தால் அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்கவும் முடியாது. திருடியவர்கள் யார் என்று தெரியவேண்டும் என்று கூறி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து இணை-ஆணையர் திருமகள் கூறும் போது,
``இந்த திருட்டு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறேன்,'' என்றார். இந்நிலையில் வடபழனி காவல்துறை உதவி ஆணையர் சங்கரலிங்கம் வடபழனி கோவிலுக்குச் நேற்று சென்று நேரடி விசாரணை நடத்தினார். புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடவுளுக்குச் சக்தி இல்லை என்பது பல வழிகளிலும் கண்கூடத் தெரிந்தும், பாழாய்ப் போன பக்தர்கள் கல்லை நம்பி மோசம் போவது தொடர்கதையாக அல்லவா இருக்கிறது.
இப்போது புரிகிறதா, முருகனுக்கு கோவிந்தா (பட்டை நாமம்) என்பது.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...