Monday, July 16, 2012

தமிழா! தமிழா!!


பார்ப்பனர்கள் மாறி விட்டார்கள் என்று கூறும் "படித்த" "பட்டங் கள் பெற்ற"
நல்ல நிலையில் உள்ள தமிழர்கள் பேசுவதும் எழுதுவதும் மிகப் பெரிய துரோகமாகும்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, அனைவரும் அர்ச்ச கராக எதிர்ப்பு, தமிழுக்கு எதிர்ப்பு, தமிழினத்திற்கு எதிர்ப்பு, சமஸ்கிருத ஆதரவு, மந்திரம் எனும் தந்திரத் தால் ஏமாற்றி இறைவனின் தனி ஏஜண்டுகளாக இவர்களும், சமஸ்கிருதமுந்தான் இருக்க வேண்டும் இதெல்லாம் அவாள் எண்ணங்களும் செயல்பாடு களும். இதையும் ஆடு மாடு போல் தலையாட்டும் மேற்படித் தமிழர்கள் சொல்வதுதான் "பார்ப்பனர்கள் மாறி விட்டார்கள்" என்பது.
இன்னும் எங்கே பார்த்தாலும் ஒரு குலத்துக்கொரு நீதி தலை விரித்தாடுவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
காஞ்சி சுப்புணிக்கு ஒரு நீதி, நித்யானந்தாவிற்கு ஒரு நீதி என்று மேற்படித் தமிழர்களே ஒத்துக் கொள் கின்றீர்களே, வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா?
தமிழன் தவறு செய்தால் இமயமலை, பார்ப்பான் தவறு செய்தால் கடுகு மலை!
இது தானே இன்று உங்கள் போக்கு.இந்த மூளைச் சலவை செய்யும் தினமலரையும், தினமணி,துக்ளக் இவற்றைக் கையால் தொட உங்களுக்கு அருவருப் பில்லையே.
எலும்புத்துண்டிற்காக பார்ப்பன ஏடுகளில் எழுதும் என்னரும் " தமிழ் சொல் வீரர்களே" அதிலே தந்தை பெரியார் என்றோ, அறிஞர் அண்ணா என்றோ ஏன் கல்வி வள்ளல்  பெருந்தலைவர் காமராசர் என்றோ எழுதி வெளியிடச் சொல்லுங்கள் பார்ப்போம். ஓடி னாலும், ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்தாலும் காஞ்சி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் தானே !
பார்ப்பானையும், பார்ப்பன ஏடுகளையும் பார்த்துப் பயந்த அரசியல் தலைவர்களுக்குத் துணிவும் தெளிவும்  வேண்டாமா? அவர்களிடம் ஒட்டி உறவாடி என்ன சாதிக்கப் போகின்றீர்கள். அவர்கள் என்று  உங்களை ஆதரிக்கப் போகின்றார்கள். இந்து ராம், சிவராமன்கள் மும்மூர்த்திகளாகப் பார்ப்பன ஆதரவுதானே தரு வார்கள். பார்ப்பனப் பதிப்பகங் களின் சூழ்ச்சி இன்று எங்கும் பரவியுள்ளதே.
தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் ஒன்று சேர்ந்தால்தானே தமிழினம் முன்னேற முடியும் . இன்னும் படிக்கட்டு சாதியளவில் மேலே உள்ளவனைப் பார்த்து ஆத்திரமும் எரிச்சலும் அடையாமல்,கீழே உள்ளதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்துவதும், இழிவு செய்வதும் தமிழரின் நலனுக்கா? அழிவுக்கா?
ஜாதியற்ற இளைய தலைமுறை உருவாக அவர்களுக்குப் பிடித்த இசை, நாடகம், விளையாட்டு, சமுதாயத் தொண்டு, திருக்குறள் படித்தல் என்று ஆங்காங்கே அனைவரும் செய்திடல் வேண்டாமா? அதில்தானே இணைவார்கள்.
இன்றைய கணினி முன்னேற்றத்தில் அனைவர்க்கும் அடையாள எண் அளிக்கும் போது ஜாதி அடையாளத் தையும் சேர்த்து விடலாமே. பின்னர் அவர்கள் ஜாதிச் சான்றிதழ் அடையாளம் இல்லாமல் அவை பயன் படுத்தப்படலாமே.இது எளிதாகச் செய்யக் கூடியது தானே. ஜாதியை ஒழிக்கச் செய்து விடலாமே. படிப்பிற் கும், வேலை வாய்ப்பிற்கும் அந்த எண்ணே போதுமே.
தமிழ் வளர்ப்போர் ஆங்காங்கே திருக்குறள் சங்கங்கள் வைக்கட்டும்.
தமிழர் இனம் வளர்ப்போர் இசைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று இணைக்கட்டும்.
-இளசு .

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...