Sunday, July 1, 2012

ஆண்டாள் என்பாள் இருந்தாளா?


திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பாடப் புத்தகத்தில் ஆழ்வார்களுள் ஒருவ ராகிய ஆண்டாள் அம்மையாரைப் பற்றித் தவறான செய்திகள் இடம் பெற்றுவிட்டதாம், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக சிலர் குதிக்க ஆரம் பித்துள்ளனர். பார்ப்பன ஊடகங் களும் உசுப்பி விடும் வேலையில்  வேகமாக இறங்கியுள்ளன.
என்ன அப்படி ஆண்டாளைப் பற்றி அசிங்கமாக எழுதப்பட் டுள்ளது!
ஆண்டாள் - பெரியாழ்வாருக் குத் திருட்டுத்தனமாகப் பிறந்தவள் என்றும், வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்டாள்மீது மோகம் கொண்டதாகவும் எழுதப்பட்டுள் ளது என்பதுதான் பிரச்சினைக்குக் காரணமாம்.
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், புராணம் என்பது வேறு, வரலாறு என்பது வேறு; இரண்டும் ஒன்றல்ல! ஏதோ வரலாற்றைத் திரித்து எழுதி விட்டதாக தையத்தக்கா என்று குதிக்கிறார்களே - ஆண்டாள் கதை என்ன வரலாறா?
ஆண்டாளைப் பற்றி அவதூறாக ஆபாசமாக குறிப்பிட்டதாக ஆர்ப் பாட்டம் செய்கிறார்களே! இந்த ஆண்டாள் எழுதாத ஆபாசமா?
பக்தையாக இருப்பவர்களுக்குக் கடவுள் தந்தையாகக் கருதப்படுவது தான் உலக வழக்கு - ஒரு வகையில் ஒழுக்கமும்கூட!
ஆனால் ஆண்டாள் என்ன பாடுகிறாள்? அந்தக் கடவுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள அடங்கா ஆசைப்படுகிறாளே! கடவு ளோடு புணர வேண்டும் என்று வெறி பிடித்துத் துடியாய்த் துடிக் கிறாளே!
ஆண்டாளைப் பற்றி அவதூறா? பொறுக்க மாட்டோம் என்று பொங்கி எழுகிறார்களே, ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே! இந்த அசிங்கத் துக்குத்தான் வக்காலத்தா?
இந்த ஆண்டாளைப் பற்றி சாட்சாத் வைணவ மெய்யன்பரான  சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி)  என்ன  கூறுகிறார்?
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண்டாள் பாடிய தாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ் வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங் களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரி வேதி என்னும் ஆங்கில மாத இதழில் (1946) செப்டம்பர் இதழில்) ராஜாஜி எழுதியுள்ளாரே - இதற்கு என்ன பதில்?
இல்லாத ஒரு கற்பனைப் பாத்திரத்தைப் பற்றி.. ஏன் அலறல்  - கூக்குரல்!
ஆண்டாளின் திருப்பாவையில் ஆயர் குலப் பெண்களை அடிமுட் டாள்கள் என்று சொல்லியிருக் கிறாரே - ஆயர் குலப் பெண்கள் கிளர்ந் தெழுந்து திருப்பாவையைக் கொளுத்தும் போராட்டத்தில் இறங் கினால் என்ன செய்வார்களாம்?
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை
சிறுபேர் அழைத்தளவும் சீறீ அருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
இப்பாடலில் இரண்டாவது வரியில் காணப்படுவது என்ன? அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம் என்று கூறப்படுகிறதே.
இதற்கு என்ன பதில்?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...