Tuesday, June 5, 2012

அய்யா சொன்னதும் - கலைஞர் சொல்வதும்!


கவிஞர் கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்
இனி கண்ணீர்த் துளிகள் தங்களின் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்காக என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்குச் சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாரும் எதிரிகளல்லர்
(விடுதலை 1.1.1962) என்றார் இனவுரிமைக் காவலராம் தந்தை பெரியார்.
தி.மு.க.வை ஒரு கட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த ராஜாஜி அவர்கள் 1967 தேர்தலில் ஆதரித்திருந் தாலும், பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், பார்ப்பனர்கள் உண்மையான திராவிட இயக்க அரசியல் கட்சியான தி.மு.க.வின் மீது நல்லெண்ணம் கொண்டவர் களல்லர்.
1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில், திரா விடர் இயக்கத்தின் ஆரிய எதிர்ப்புக் கொள்கையைத் துடைத்து எறிந்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.
தி.மு.க. பெரியார் என்ற பழம் பெருங்காயம் இருந்த பாண்டம்; அதனைத் துடைத்தெறிந்து விட்டேன் என்றார் ஆச்சாரியார்.
ஆனாலும் என்ன நடந்தது? ஆட்சி ஏற்ற அண்ணா, அய்யா பெரியாரை நோக்கித்தான் விரைந்தார்.
எங்களின் தேனிலவு முறிந்துவிட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு, அண்ணாவின் குறுகிய கால ஆட்சியின் செயல்பாடுகள் - திராவிடர் இனவுணர்வின் பாங்கில் பூத்துக் குலுங்கி விட்டன.
அடுத்த தேர்தலிலேயே ஆச்சாரியார் தம் அரசியல் எதிரியான காமராசர் அவர்களை இணைத்துக் கொண்டு தி.மு.க.வை எதிர்த்து, அதிலும் தோல்வி கண்டார்.
அந்த 1971 பொதுத் தேர்தல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் அடிப்படையில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாகவே மிகவும் வெளிப்படை யாகவே நடைபெற்றது.
அந்தத் தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு அபார வெற்றியைத் தந்தது - தமிழ் மண் தந்தை பெரியாரின் ஆரிய எதிர்ப்புத் திராவிட மண் என்பதை மற்றொரு முறை உலக அரங்கிற்கு மணி அடித்து அறிவித்து விட்டது. இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது என்று முதல் அமைச்சர் அண்ணா சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தினார். இது சூத்திரர் களால், சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு என்று முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கம்பீரமாக அறிவித்ததும் எந்த அடிப்படையில் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தந்தை பெரியார் 1962-இல் கூறிய கருத்தின் அருமையும் அவசியமும் அப்பட்டமாக விளங்கும்.
கடந்தமுறை ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முத்திரை பொறித்த சில திட்டங்கள் கவனத்துக்கு உரியவை.
1. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று இரண்டாவது முறையாக அதே கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானம்!
2. கோயில்களில் தமிழிலும் அர்ச் சனை என்பதில் உள்ள உம் என்பது (உம்மை இழிவுச் சிறப்பு) தூக்கி எறியப்பட்டது.
3. தீட்சதர்களின் ஆதிக்கத்தில் பன்னூறு ஆண்டுகாலம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிதம்பரம் நட ராசன் கோயிலை அரசின் அதிகாரத் துக்குள் கொண்டு வந்தது.
4. வள்ளலார் உருவாக்கிய கொள் கைக்கு முரணாக வடலூர் சத்திய ஞானசபையில் உருவ வழிபாட்டு முறை களைத் திணித்து ஆட்டம் போட்டு வந்த ஆரியப் பார்ப்பனரை வெளியேற்றியது.
5) தமிழ் செம்மொழி என்பதை அங்கீகரிக்கச் செய்தது. 6)  சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்தது.
7) நீண்டகாலத்திற்குப் பிறகு, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கச் செய்தது.
8) நுழைவுத் தேர்வை ஒழித்தது - இவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் திராவிடர் இயக்கச் சார்பானவை - பார்ப்பனர் எதிர்ப்பை அடிப்படையில் கருவாகக் கொண்டவை.
இதனை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் (நம், மக்களுக்குத் தான் இதில் தடுமாற்றம்!)
சில பூணூல்கள் சேர்ந்து திமுக ஆட்சியை ஒழித்து விட்டனர் என்று கலைஞர் அவர்களே வெளிப்படையாகவே கூறும் நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பார்ப்பன ஊடகங்கள் கலைஞர் அவர்களையும், தி.மு.க.வையும் கொச்சைப் படுத்துவதற்கு அளவு இல்லாமல் போய் விட்டது.
ஒவ்வொருவார துக்ளக் இதழைப் புரட்டினாலும் அன்றாடம் வெளிவரும் தினமணி தினமலர்கள்மீது கண் ணோட்டம்  செலுத்தினாலும் ஆரியப் பார்ப்பனர்களின்  அளவிறந்த கொட் டத்தை அறிந்து கொள்ளலாம்.
மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்.  மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடையாது என்று அவர் எழுதினார்; திராவிடர் தோழர்களே ஞான சூரியனைப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பதெல்லாம் இதற்கான அத் தாட்சிகள்! பரம்பரைப் போர் என்றும் தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பட்டவர்த்தனமாகவும் அறிவித்தாரே - எதிர்கொள்வோம் என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பதிலடி கொடுக்கவில்லையா?
இப்பொழுது 1962 இல் தந்தை பெரியார் அவர்கள் கணித்ததை தொலை நோக்காகக் கூறியதை ஒரு முறை அசை போட்டுப் பார்க்கலாம்.
இவ்வளவுக்கும் 1962-ஆம் ஆண்டு என்பது திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லாத ஒரு கால கட்டம்! அந்த நிலையிலேயே தி.மு.க. எதிர்காலத்தில் பார்ப்பனர் எதிர்ப்பைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கூறினார்.
அதற்காகத் தன்னை தி.மு.க. அணுகும் என்றும், அதற்கு நான் உதவக் கூடும் என்றும்  தந்தை பெரியார்கூறியது - இதோ நம் கண்முன் நடந்து கொண்டிருக்கும் பிரத்தியட்ச சாட்சிகள்.
இதனை ஒவ்வொரு உண்மையான திராவிடர் இயக்கத் தொண்டரும் உணரும் வகையில் செயல்பட வேண்டும். திராவிடர் இயக்க அடிப்படைச் சித்தாந் தம் ஊட்டப்பட வேண்டும்.
மானமிகு கலைஞர் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் இயக்கம் புது உத்வேகத்தோடு தோள் தூக்கி போர்க் குணத்தோடு நடைபோட உறுதி மேற்கொள்ள வேண்டும். எதிரிகள் தயாராகி விட்டார்கள்!
தயாராக வேண்டியது நாம்தான்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...