Wednesday, May 23, 2012

மார்க்


12ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் - வெளி வந்துள்ளன. கடந்த ஆண்டைவிட அதிக விழுக்காட்டில் இருபால் மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் ஒளிப் படங்கள் உட்பட ஊடகங் களில் வெளியாகித் தூள் கிளப்புகின்றன.
அதே நேரத்தில் அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள், தேர்வில் தோல்வி கண்டவர்கள் சோர்ந்து விழுந்துவிட வேண்டுமா?
முழங்காலை தாடை யோடு ஒட்ட வைத்து வாழ்க்கையே ஒட்டு மொத்தமாகப் போய் விட்டது என்று கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்க வேண்டுமா?
தேர்வில் தோல்வி கண்டவர்கள் மறு முறையும் எழுதலாம், வெற்றி பெறலாம் அதற் காக வாய்ப்புக் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றவர்கள் முகத்தில் விழித்திட வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
உலகில் பெரிய தலை வர்களாகப் போற்றப்படு பவர்கள், தொழிலதிபர் கள், விஞ்ஞானிகள் எல் லாம் மெத்தப் படித்த மேதைகளா? அதிக மதிப் பெண்கள் பெற்று தங்கக் கோப்பைகளை வாரிச் சென்றவர்களா?
எடுத்துக்காட்டுக்கு ஒன்றிரண்டு. தேசப் பிதா என்கிறார்களே, மகாத்மா என்றும் மதிக்கப்படுகின் றாரே - தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் என்ன தெரியுமா?
ஆங்கிலத்தில் 200-க்கு 89 கணக்கில் 175-க்கு 59, அறிவியல் பாடத் திட்டத்தில் 100-க்கு 45, புவியியலில் 75-க்கு 34, வரலாற்றில் 75-க்கு 20.
இப்படி மதிப்பெண் பெற்றதால் வாழ்க்கையில் காந்தியார் என்ன ஓரங் கட்டப்பட்டு விட்டாரா?
கணித மேதை என்று சொல்கிறார்களே கும்ப கோணம் ராமானுசம் மூன்று முறை தொடர்ந்து ஆங்கிலத் தேர்வில் தோல்வி கண்டு விட்டார் - அதனால் அவரின் கணிதத் திறன் மதிப் பற்றுப் போய் விட்டதா?
கணினித் துறையில் சாதனை படைத்த பில் கேட்ஸின் படிப்பு வெறும் ஏழாம் வகுப்புதானே!
மின் விளக்கு முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருள்களின் கண்டு பிடிப்புக்குச் சொந்தக் காரரான தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் மக்குப் பையன்தான்.
மதிப்பெண்கள் வேண் டாம் என்று சொல்ல வில்லை; அதற்காகக் குடியே மூழ்கி விட்டது என்று துவள வேண் டாமே! தற்கொலை முயற்சிகள் வேண்டாமே!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...