Tuesday, May 22, 2012

உலகத் தலைவர் பெரியார் பற்றியும், தமிழர் தலைவர் பற்றியும் தினத்தந்தி தீட்டியுள்ள தலையங்கம்


இன்று காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன. இந்த தேர்வை தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். இதில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர்கள்தான் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர்கள் மாணவிகள். 100 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, இப்போது நல்ல பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. "பெண்களின் உயர்வே நாட்டின் உயர்வு'' என்று அவர் அன்று விதை விதைத்துவிட்டு சென்றார். அந்த விதை முளைத்து செடியாகி, மரமாகி, இன்று நல்ல கனிகளைத் தந்து கொண்டிருக்கிறது. அவர் விதைத்து முளைத்த செடிகளுக்கு, பல தலைவர்கள் தண்ணீர் ஊற்றினர், உரமிட்டனர் என்பதையும் யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அந்த பழத்தோட்டத்தின் காவல்காரராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அதேவழியில் பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதிலும் பரப்பும் பணியும் போற்று தற்குரியது.
தேர்வு முடிவுகள் மகிழ்ச்சியும், வருத்தமும், சலிப்பும் கலந்த கலவையாக இருக்கலாம். சிலருக்கு நினைத்த மதிப்பெண்கள் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியைக் கொடுக் கலாம். சிலருக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்று பலத்த ஏமாற்றத்தை தரலாம். ஆனால் எதையும் தாங்கும் இதயமாக, எல்லாவற்றையும் ஒன்றுபோல ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டவர்களாக, நமது மாணவச் செல்வங்கள் இருக்க வேண்டும். எந்த மதிப்பெண்கள் பிளஸ்-2 தேர்வில் எடுத்தாலும், வளமான எதிர்காலத் துக்கு வழி இருக்கிறது. உயர்ந்த மதிப்பெண் கிடைத்தால்தான், ஒளி மயமான எதிர்காலம், மற்றவர்களுக்கு இனி அவ்வளவுதான் என்று சோர்ந்து விடக்கூடது. பெற்றோர்களும், உற் றோர்களும் அவர்களை சோர்வடைய வைத்துவிடக்கூடாது. பிளஸ்-2 மார்க் என்பது, வாழ்க்கையின் முடிவல்ல. எதிர்காலத்தின் தொடக்கமேதானே தவிர, அதுவே முடிவாகிவிட முடியாது. வாழ்க்கையை ஒரு சாலையாக கருதினால், இது சாலையின் முடிவல்ல, சாலையில் ஒரு வளைவுதான். பண்டித ஜவகர்லால் நேரு சொன்னதுபோல, இன்னும் போகவேண்டிய மைல்கள் ஏராளம். இந்தப் பரந்த உலகில் என்ன படிப்பு படித்தாலும், எல்லா வாய்ப்பு களும் இருக்கின்றன. இந்த ஆண்டு அய்.ஏ.எஸ் தேர்வில், கேரளாவைச் சேர்ந்த ஆனிஸ் கண்மணி ஜாய் என்ற நர்சு சிறப்பாக தேர்வு பெற்று இருக் கிறார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இந்த நர்சம்மா, கலெக்டராக வலம் வரப்போகிறார். சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்று நினைத்து இருந்தார். பிளஸ்-2வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளர்ந்து விடவில்லை. பி.எஸ்சி. நர்சிங் படித் தார். அய்.ஏ.எஸ். ஆவேன் என்று மன உறுதியுடன் படித்தார், அந்த சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நர்சு. இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் பெருமை யான வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஆக, இன்று தேர்வு முடிவு வந்தவுடன், அனைத்து மாணவர்களும், இனி நான் என்ன ஆவேன்? என்று ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண் டும். அப்துல்கலாம் சொன்னதுபோல கனவு காணுங்கள். அந்தக் கனவை நனவாக்க ஒரு இலக்கை நிர்ண யித்துக் கொள்ளுங்கள். அதை நோக்கி வேகமாகச் செல்லுங்கள். அதற்கு எல்லா படிப்புகளும் துணை செய்யும், எந்தப் படிப்பில், சேர்ந்தாலும், இன்று முதல் அந்தப் படிப்பில் முதல் இடத்தைப் பிடிப்பேன், வெற்றி பெறுவேன், உயர்ந்து நிற்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தப் படிப்பும் சமுதாயத்தில் குறைந்தது அல்ல. ஆனிஸ் கண்மணியால் முடியும் என்றால், நிச்சயமாக என்னாலும் முடியும் என்று வைராக்கியம் கொள்ள வேண்டும். என்னால் முடியுமா? நான் அவ்வளவு உயரத்துக்கு போக முடியுமா? என்று மனதின் ஓரத்தில்கூட ஒரு கடுகளவு சந்தேகம் வந்து விடக்கூடாது. ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு அடிக்கடி ஆங்கிலத்தில் ஒரு வாசகம் கூறுவார். "வென் யூ ஆர் அப்ரெய்டு ஆப் பாலிங் டவுன், ஹவ் வில் யு கெட் அப் அண்டு வாக்''? என்பார். அதாவது கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து கொண் டிருந்தால், எப்படி எழுந்து நடக்கப் போகிறாய்? என்பதுதான். இதுதான் மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை என்கிறார், இறையன்பு. எழுந்து ஓடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்!'
(நன்றி: தினத்தந்தி 22.5.2012)'


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...