Friday, March 16, 2012

மரபணு மாற்றமும் - விளைவுகளும்


விஞ்ஞான வளர்ச்சி பல்வேறு தளங்களில் வியத்தகு வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றது என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு துறையிலும், ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இவையனைத்தும் மனித சமுதாயத் தின் வளர்ச்சிக்காக மட்டும் என அறுதியிட்டுச் சொல்லிவிட முடி யாது. அப்படி ஓர் புதிய தொழில் நுட்ப மலர்ச்சியை ஏற்படுத்தியது தான் மரபியல் பற்றிய ஆய்வுகளும் அதன் விளைவுகளும்.
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையாக இருப்பது மரபணுக்கள்தான். மர பணுக்கள் உயிரினங்கள் எந்தளவுக்கு வளரும் உருமாறும் என்பதை தீர்மானிக்கும். இந்த துறையில் தொடர் ஆய்வுகள் மூலம் மரபணு மாற்றம் செய்யலாம் எனவும் இதன் மூலம் மேலும் திறன் படைத்ததை உருவாக்க முடியும் எனும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். அதாவது மரபணு மாற்றம் என்பது வேறு உயிரினங்களின் மரபணுக் களை பழங்கள், காய்கறிகளில் சேர்த்து புதுவகை பழம் மற்றும் காய்கறி உருவாக்குவதுதான். அப்படி செய்யும்போது ஏற்படும் மாற்றங் களால் நமக்கு என்ன பிரச்சினைகள் என்பதை அறிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
மனித சமூகத்தின் வளர்ச்சியில் இத்துறையில் மாற்றங்கள் வேகமாக சேரும்போது லாப வெறியுடன் மட்டுமே செயல்படும் பல நிறுவ னங்களின் கண்களில் இது உறுத் தாமல் இருக்குமா? உலகம் முழுவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பால் பொருட்கள் உற்பத்தி துவங்கின.
மனிதனின் அன்றாட தேவைகளை உற்பத்தி செய்து வர்த்தகம் செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் எனும் எண்ணம் பன்னாட்டு நிறுவனங்கள் இதை செயல்படுத்துவதற்காக அதிக மூலதனத்தை இதில் கொட்டியது. அப்படி உணவு பொருட்களின் தயாரிப்பில் இறங்கிய நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் (Side effects)உடற்கூறுக்கு உண்டாக்கும் பாதிப்புகள் என அனைத்தையும் சாதுரியமாக மறைத்துள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள உணவு வகைகள் சுற்றுச் சூழலையும் பாதிக்கும்.
விதை உற்பத்தியில் பெரும் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ தாமதமாக பழுக்கும் தக்காளி வகைகளை உருவாக்கியது. இப்படி செய்வது ஏற்றுமதிக்கு இலகுவாக இருக்கும். மற்றொரு நிறுவனமான ஜெனிக்கா தண்ணீர் அதிகம் இல்லாமல் வளரும் தக்காளி வகைகளை அறிமுகப்படுத்தியது. இந்த வகை தக்காளிகள் சந்தைக்கு வரும் மனிதர்கள் பயன்படுத்தினால் குடற்பையில் ரசாயன மாற்றங்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு திறனைக் குறைத்திடும்.
மான்சாண்டோ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய வகை உணவு பொருட்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது மட்டும் அல்ல, மனிதன் உட்கொண்டால் உடம்பில் உள்ள தண்ணீர் சத்தை முழுமையாக அகற்றிடும் திறன் படைத்தது என்பது மட்டுமல்லாமல், ஏனைய சத்துக் களையும் கரைத்திடும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட உணவு நமக்கு எதற்கு என்ற கேள்வி ஊடே எழுகின்றது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள சோயா பீன்ஸ் வகை புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
சிபாகெய்கி எனும் கம்பெனி தயாரித்துள்ள உருளைகிழங்கு மற்றும் சோளப் பயிர் வகைகள் நச்சு தன்மை வாய்ந்ததாகவும் இப்பொருட் களை தொடர்ச்சியாக உட்கொள் ளும்போது நரம்புத் தளர்வு மற்றும் உணவுக் குழாயில் உள்ள மெல்லிய சுவர்களை அரித்து புற்றுநோய் மற்றும் ஒட்டு மொத்தமாக செரிமான சக்தியே குறையும். குறிப்பாக உருளைக்கிழங்கு பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய உணவு பொருள் அப்படி இருக்க கட்டுப்பாடு இல்லாமல், தங்கு தடையின்றி வர்த்தகத்துக்கு வருவதே நமக்கு ஒரு பெரிய சவாலாகும்.
உலகம் முழுவதும் வாழ்நிலை மாற்றங்களால் ரத்தக் கொதிப்பு நீரிழிவு நோய் வேகமாக மக்களை பாதிக்கின்றது. இந்தியாவில் நகரங் களுக்கு ஈடாக கிராமப்புற மக் களுக்கும் இவ்வகை நோய்கள் பெரும் பிரச்சினையாக உள்ளன. இந்த பின்னணியில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வரும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிலும் குறிப் பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டு மென்பதற்காகவும், பதப்படுத்தப்பட்டு நம்மிடம் சேர்கின்றது. நாமும் அதன் வெளித்தோற்றத்தைப் பார்த்து வாங்குவது வழக்கமாகி விட்டது. அப்படி வாங்குவது என்பது நோயை இலவசமாக பெறுவது என அர்த்தமாகும். உணவிலும் சைவ வகைகளில் மட்டும்தான் பிரச் சினையா என்றால் அதுவும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள மக்கள் உண்ணும் அசைவ உணவு வகை களிலும் மேற்சொல்லப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. பல கட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இறைச்சி வகைகள் சந்தைக்கு வரத் தொடங்கி விட்டன. அதிக எடை யோடும் உருவில் பெரியதாகவும் உள்ள மீன், மாடு, ஆடு, கோழி ஆகியவை நமது தேவைக்காக வந்துள்ளன. ஆனாலும் இவை அனைத்தும் உட்கொள்ளும் போது புதுவகையான அமிலங்கள் நமது உடலில் சுரந்து அதன் மூலமாக தேவையற்ற உடல்பகுதிகளுக்கு பயணித்து அசாதாரண மாற்றங் களை உருவாக்கும். உடலில் இப்படி மாற்றங்கள் ஏற்படும் நிலையில் இயற்கையாகவே நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு உதவிடும் சில வகை புரோட்டீன்கள் அத் தனையும் கெட்டுப் போகும் அபாயம் உள்ளது. இதே போல் பால் மற்றும் அதன் உப பொருட்களிலும் மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் வியாபார உரிமை வழங்கப்பட்டுள் ளது. அடிப்படையாக பால் அளித்திடும் கறவை மாடுகளிடமே மரபியல் மாற்றம் செய்யப்படுகின்றது. அதிகமாக பால் கிடைக்க வேண்டுமன்பதற்காகவும் நீண்ட நாட்களுக்கு இவ்வகை மாடுகள் வாழ்வதற்கும் மேற்கூறப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட மாடுகள் கொடுக்கும் பாலில் இதன் தாக்கங்கள் கண்டிப்பாக இருக்கும். இவ்வகை மாடுகளிடமிருந்து எடுக்கப்படும் பால் நீண்ட நேரம் கெடாமல் இருப் பதற்காகவும் கூடுதலாக ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த பாலை தொடர்ச்சியாக உட்கொள்ளும் அனைவருக்கும் கழிவு வெளியேற்றும் திறன் வெகு வாக குறைகின்றது. மேலும் சிறுநீரக கோளாறுகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் அனை வருக்கும் ஒவ்வாமை நோய் வரும் என சமீபத்தில் ஆய்வுகள் தெரி விக்கின்றன.
கடல் சார்ந்த உணவு வகையான மீனிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிக எடை மற்றும் கூடுதல் சுவைக்காக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. இவை களை சாப்பிட்டால் என்ன  பக்க விளைவுகள் வரும் என்பதை பற்றிய முழு விபரங்கள் நமக்கு இல்லை என்றாலும் கண்டிப்பாக உடற்கூறில் தேவையற்ற கொழுப்பை கூடுதலாக் கும் என்பது மட்டும் உறுதி.
உலகம் முழுவதும் இப்படிப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட பொருட் களை வித்தியாசப்படுத்தி காட்டிட எந்தவிதமான பிரத்தியேக நடவ டிக்கையும் இல்லை. மரபணு மாற்றம் என்பது விஞ்ஞான உலகின் வியத்தகு சாதனைகளில் ஒன்று. ஆனால் அது மனித சமூகத்தின் நன்மைக்கா, அல்லது தீமைக்கா என்பதை எதிர்கால உலகம் தீர்மானிக்கும்.
லாபம் மட்டுமே குறிக்கோளாக மட்டும் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை முயற்சியை தடுத்திட இது குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அறிவியலை ஆக் கத்திற்காக பயன்படுத்திட தொடர் குரல் கொடுப்போம்.
(நன்றி: இளைஞர் முழக்கம் மார்ச் 2012)

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...