Wednesday, November 16, 2011

தினமலர் கொழுப்பு தலையில் வழிகிறது!


தினமலர் கொழுப்பு தலையில் வழிகிறது!



திமிர் பிடித்த தின மலர் தன் பூணூலை முறுக்கி விட்டுக் கொண்டு, சிண்டை ஒரு தட்டுத் தட்டிக் கொண்டு தமிழர்கள் மீது திட்ட மிட்ட வகையில் போர் தொடுத்தே விட்டது.



நேற்றைய தினமலர் (14-11-2011 - பக்கம் 2) செந்தமிழர்கள் இன் னும் கொந்தளிக்காதது ஏன்? என்று பெயர் போடாமல் செய்திக் கட்டுரை ஒன்றை 8 பத்தி தலைப்பிட்டு வெளியிட் டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஒருவர் தமிழராம். அவ ருக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து விட்டதாம். ஒரு தமிழர், அதுவும் தாழ்த்தப்பட்ட தமிழருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப் பட்டு விட்டதே - செந் தமிழர்கள் ஏன் கொந் தளித்து எழவில்லை என்று கேவலமான வகையில் கேலி செய்கிறது இனமலர் -  இது ஒரு துக்ளக் பாணி கட்டுரை. துக்ளக்கில் புழுத்த இந்த வியாதி தின மலர், தினமணி என்று பரவிக் கொண்டிருக்கிறது.

எந்த உள்நோக்கத் தோடு இனமலர் இப்படி எழுதுகிறது என்பது எளி தாகப் புரிந்து கொள்ளப் படக் கூடியதே!

கற்பழித்த ஒருவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்ததையும், ராஜீவ் காந்தி கொலையில் சம் பந்தம் இல்லாதவர்களுக் குத் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டதையும் சம நிலையில் வைத்து கட்டுரை தீட்டும் தினமலரின் கொச் சைத் தனத்தைத் தமிழர் கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டதே!

அப்படியென்றால் கேரளாவில் தமிழர் ஒருவ ருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர் மானம் ஏன் நிறைவேற்றப் படவில்லை என்று இன மலர் எழுதுமா? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.

காரணம் தெரிந்ததே!

சங்கராச்சாரியார் சிறீரங்கம் மாமியிடம் பல மணி நேரம் அலைப்பேசி யில் பேசும், சல்லாபம், ஜொள்ளுகளைப் பற்றி ஒரு வரி எழுதுமா இந்த இன மலர் கூட்டம்? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.

காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்த காம காவிவேட்டி ஜாமீனில் இருக்கும்போதே கோயில் கும்பாபிஷேகம் செய்வது பற்றி ஒரே ஒரு வரியை எழுதச் சொல் லுங்கள் பார்க்கலாம். எழு தாது - எழுதவே எழுதாது.

காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து  பல்டி அடிக்கும் மர்மத்தைப் பற்றி, டீக்கடை பெஞ்சில் சிலாகிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். எழுதாது - எழுதவே முடியாது.

காரணம் தெரிந்ததே!

தமிழ், தமிழர் என்றால் இந்தப் பார்ப்பனக் கூட்டத் துக்கு அவ்வளவு இளக் காரம். புலியின் வாலை மிதிக்க ஆசைப்படுகிறார் கள். தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கிண்டல்.

பெங்களூரில் திருவள் ளுவர் சிலை மீது கல் லெறி யாமல் இருந்தால் சரி என்று தூண்டுதல் (துக்ளக்கில்).

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டானால் கத்தரிக் காய் விலை குறையுமா என்று கேள்வி.

தமிழர்களின் தோல் தடித்துவிட்டது என்று பார்ப்பனர்கள் நினைக் கிறார்கள் போலும்!

பார்ப்பனர்களுக்கு வெண்சாமரம் வீசிட தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் ஒரு சிலர் புறப் பட்டுவிட்டனர் என்கிற தைரியத்தில் தின மலர்கள் தினவெடுத்துக் கிளம்பிவிட்டதோ!

ஆட்சி மாற்றம் ஏற் பட்டு விட்டது என்ற நினைப்பில் அக்கிரகாரம் வீண் வம்புகளை விலைக்கு வாங்குகிறதோ!

வேண்டாம், இந்த விஷப்பரீட்சை!

ஆனானப்பட்ட ஆச்சாரியாரே துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று விரட்டப் பட்டார் என்பதை நினை வூட்டுகிறோம்.

தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டும்? உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தினமலர் எதிர் பார்க்கிறதோ?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...