Thursday, March 8, 2012

தமிழகத்தில் பெண் கல்வி


1866ஆம் ஆண்டில்தான் பெண் கல்வி குறித்த சிந்தனையானது ஆங்கிலேயரது தீவிரமான கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
1865-லிருந்து 1870ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வியினைக் கற்ற பெண்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
ஆண்டுகள் பள்ளிக்கூடங்களில் இசுலாமியப் பெண்களின் பெண்களின் எண்ணிக்கை எண்ணிக்கை
1865-66        4,111        5
1866-67        4,638        8
1868-69        8,099        3
1869-70        9,421        7
1872-73இல் அரசாங்கம் இசுலாமிய இனத்தவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டது. இதனால் இவ்வாண்டில் ஆளுநராக இருந்த ஈ.பி.பவல் என்பவர் இசுலாமியப் பெண்களின் திறமையையும், அறிவாற்றலையும் உயர்த்துதல் பற்றி உயர்குடி முகமதியர்களிடம் கலந்து ஆலோசித்தார். இதன் பின்னர், இசுலாமியப் பெண் கல்வி வளர்ச்சிக்கெனக் குறிப்பிடத்தக்க நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகள் பெரும்பான்மை கிறித்துவ சமயப் பரப்பாளர்களால் நடத்தப்பட்டதால் அவற்றில் இசுலாமியப் பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே கல்வி பயின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் சென்ற ஆண்டுகளை விடவும் இவ்வெண்ணிக்கை கூடுதலாக இருந்ததை அறிய முடிகிறது.
ஆண்டுகள்        சமயப்பரப்பு        அரசுப் பள்ளிகளில் பள்ளிகளிலும்        இசுலாமியப் பெண்களின் அறநிலையங்களிலும் எண்ணிக்கை பயின்ற இசுலாமியப் பெண்களின் எண்ணிக்கை
1871-72            7            5
1872-73            -            58
1873-74            67          238
1874-75            9            615
1871ஆம் ஆண்டு பொதுவாகப் பெண்கல்வி வளர்ச்சிக்கு ஆங்கில அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை நல்கியது. இருப்பினும், 1871ஆம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 620 பெண் மக்கள் தொகைக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே படித்தவராக இருந்தார். இவ்வாண்டில் உள்ளூரில் பயிலும் பெண்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகையானது தொடக்கப் பள்ளிகளில் பயில்பவரில் பதினாரு பேருக்கு நடுவிலே பள்ளிகளில் பயில்பவரில் முதல் நான்கு பேருக்கும் உயர்கல்விக்கு 75 விழுக்காடும் வழங்க ஆணையிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அவர்களுக்கு ஊதிய உதவித்தொகை வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
ஆனால், எந்தப் பள்ளிக்கும் ஊதிய உதவித் தொகை வழங்கப்படவும் இல்லை. இது தொடங்கப்படவும் இல்லை என்பதை அறிய முடிகிறது. மேலும் மூன்று மாதத்திற்கான சராசரி வருகைப் பதிவேடு இருபது மாணவிகளைக் கூட கொண்டதாக அமையவில்லை. இதற்கேற்றாற் போல், மொத்த ஊதியத்துடன் ஒரு பாதியைக் கூட கொண்டதாக அவ்வுதவித்தொகை அமையவில்லை.
ஆசிரியைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வரையறைகளைக் கொண்டு பயிற்சி பெற்ற சான்றிதழ்களை அல்லது சாதாரணச் சான்றிதழ்களை வைத்திருந்த ஆசிரியைகளுக்கு ஊதிய உதவித் தொகை வழங்கப்பட்டது. சான்றிதழ் பெறாத ஆசிரியைகளுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த ஊதியத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கும் மிகாமல் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இவர்களின் கல்வித் தகுதி நடுநிலை அல்லது உயர்நிலை அல்லது உயர் தொடக்க நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
பல்வேறு கல்வி நிலையங்களில் பயின்ற பெண்களின் எண்ணிக்கை:
1870ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8010 பெண்கள் கல்வி பயின்றனர். இவற்றில் சென்னையில் 3440 பெண்களும், திருநெல்வேலியில் 2317 பெண்களும், தஞ்சாவூரில் 689 பெண்களும் பயின்றனர். எல்லா மாவட்டங்களை விடவும், சென்னையில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் கல்வி பயின்றது தெரிய வருகிறது.
1865ஆம் ஆண்டில் இருந்து 1871ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வியில் பெண்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர் என்பதைப் பின்வரும் அட்டவணையால் அறிய முடிகிறது.
ஆண்டுகள்        பள்ளிக்கூடங்களில் பெண்களின்  எண்ணிக்கை
1865-66        4,111 1866-67        4,638 1868-69        8,099 1869-70        9,421
1870-71        10,185
1870ஆம் ஆண்டு சென்னையில் அரசுப் பள்ளிகளில் கீழ்நிலை தொடக்கக் கல்வியில் ஒரு பெண் கூட படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தனியார் மற்றும் மேற்பார்வைக் குழுக்களால் நடத்தப்பட்ட பள்ளிகளிலும் பெண்கள் கல்வி பயிலவில்லை. ஆனால், அரசு மானியம் பெற்று நாற்பத்தைந்து தனியார் பள்ளிகள் இயங்கின. இப்பள்ளிகளில் ஆயிரத்து அறுநூற்று முப்பத்து இரண்டு பெண்கள் கல்வி கற்றனர். இப்பள்ளிகள் உள்ளூர் நிதியும், அரசு நிதியும் பெற்று இயங்கின.
கிறித்துவ சமயப் பரப்பாளர்களின் பங்கு
கிறித்துவ சமயப் பரப்பாளர்கள் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதை அவர்களது செயல்பாடுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
தொடக்க காலத்தில் ஆங்கில வாணிகக் குழுவினர் இந்தியாவுக்கு வந்ததும் நாட்டுக் கல்வி முறை நடப்பிலிருப்பதை கண்ணுற்றனர். அவற்றில் அவர்கள் தலையிடவோ அல்லது அவற்றை வளர்க்கவோ முற்படவில்லை. மேலும், கலங்கிய அரசியல் குட்டையில் அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளும் எண்ணம் படைத்த அவர்கள் நாட்டு மக்களின் நலன்களில் கருத்தைச் செலுத்தாமல் போர், முற்றுகை, சூழ்ச்சி ஆகியவற்றிலேயே கருத்தாய் இருந்தனர். இதனால் இந்து, இசுலாமியக் கல்வி முறைகளைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தனர். கிறித்துவ சமயப் பரப்பாளர்களே. இவர்களது உள்நோக்கம் சமய மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டமைந்ததெனினும் இதற்குக் கல்வியமைப்பைச் சிறந்த ஊடகமாகப் பயன்படுத்தியதில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் பெரிதும் பயனடைந்தனர் எனலாம். ஆங்கிலேயர் ஆட்சியில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை சாசனம் புதுப்பிக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில்  1698ஆம் ஆண்டு சாசனம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அதில் சமயப் பரப்பாளர்கள் இந்தியாவிற்கு வந்து சமயப்பணி புரிவதற்கும் கல்வி பணி புரிவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப் பட்டிருந்தன.இதற்காகும் செலவுகளை வணிகக் குழு நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் 1698இல் டேனிய சமயப் பரப்பாளர்கள் தரங்கம்பாடி வந்திருந்தனர். இவர்கள் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர்.
(தமிழகத்தில் பெண் கல்வி, - முனைவர் க.கண்மணி பிரியா)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...