Thursday, March 8, 2012

மார்ச்சு 8


மார்ச்சு 8 உலக மகளிர் நாளாகக் கடைபிடிக்கப் படுகிறது.
உலகம் முழுமையுமே ஆண்கள் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இன்னும், அமெரிக்கா விலோ, ருசியாவிலோ, சீனாவிலோ கூட ஒரு பெண் அதிகாரப் பீடத் தின் தலைமைப் பீடத்தை எட்டிப் பிடிக்க முடிய வில்லை.
மக்கள் தொகையில் சரி பகுதி பெண்கள் என்ற கணக்கும்கூட வீழ்ச்சி அடைந்து விட்டது.
சிசு மரணம் என்று எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவில் ஆண் சிசுக்களைவிட பெண் சிசுக்களின் மரணம் 20 விழுக்காடு கூடுதலாகும்.
சட்டமன்றம், நாடாளு மன்றங்களில் பெண் களின் விழுக்காடு 10 அய்த்தாண்டுவதற்கே தடுமாடுகிறது.
1996 முதல் மகளிர் மசோதா நொண்டியடித் துக் கொண்டிருக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் என் பதில் கட்சி வேறுபாடுகள் கிடையாது - இதில் மட்டும் அப்படியொரு ஒற்றுமை!
உண்மையில் குழந் தையை ஈன்று புரந் தரு தலில் தாய்க்கு நிகராக யாரைச் சொல்ல முடியும்?
ஒரு தகவல் - இப் பொழுது நினைத்தால் கூட உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கவே செய்கின்றன.
தன் குழந்தை களுக்கு தன் ரத்தத்தை பாலாக்கிக் கொடுக் கிறவள் தாய் என்பது உலகறிந்த ஒன்று. தன் ரத்தத்தையே குழந்தை களுக்குக் கொடுத்து அவர்களைக் காத்த தாயைப் பற்றிக் கேள்விப் படுவது அதிசயம்தானே.
1989-ஆம் ஆண்டில் ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில், ஒரு தாய் தனது மூன்று வயது குழந்தையுடன் இடிபாடு களுக்கு இடையில் சிக்கி யிருந்த 8 நாள்களும், குழந்தைக்கு தனது ரத்தத்தைக் கொடுத்தே, அது பசியால் இறந்து விடாதபடி காப்பாற்றி யிருக்கிறாள். தன் விரல் களை ஊசியால் குத்திக் குத்தி, ரத்தத்தை எடுத்து குழந்தைக்கு ஊட்டி வந்திருக்கிறாள். ஒரு தாய்க்கு இணையாக உலகில் ஏதும் இல்லை என்பது இதன் மூலம் அறிய முடிகிறது அல்லவா!
உலகில் எங்கு யுத்தம் நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஈழத்திலிருந்து ஈராக்கு வரை இதுதான் நிலை. ஈராக்கில் என்ன கொடுமை என்றால் அமெரிக்காவின் குண்டு நெருப்பில் தங்கள் கண வன்களை இழந்த பெண் கள் தங்கள் குழந்தை களைக் காப்பாற்றுவதற் காக விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்பது எவ்வளவுக் கொடுமை யான தகவல்!
ஆண்டாண்டு மகளிர் நாள் வந்து செல்கிறது! ஆனாலும் தந்தை பெரி யாரின் பெண்ணியம் கூடினால் புத்துலகம் பிறக்கும்.
வெல்லட்டும்
பெரியாரியம்!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...