Tuesday, March 13, 2012

இலங்கைக்கு எதிராக தமிழக எம்.பி,.க்கள் ஒருமித்த குரலால் நாடாளுமன்றம் நிலைகுலைந்தது!


புதுடில்லி, மார்ச் 13- ஜெனீவாவில் நடைபெறும் அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்;பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் மக்களவை முடக்கப்பட்டது. இருப்பினும் மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டது.

மக்களவை இன்றுகாலை கூடியதும் தமிழக எம்;பிக்கள் இது தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

அய்க்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என்றார்.

ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த விளக்கத்தை தமிழக எம்பிக்கள் நிராகரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழக எம்பிக்களின் முழக்கங்களுக்கு மத்தியிலும் மக்களவை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இவ்விவகாரத்தை இன்று எழுப்பினார். அ தி.மு.க.வின் மைத்ரேயனும் தமிழக மக்களின் கருத்தை வெளிப்படுத்தி பேசியதுடன் அவையில் அமர்ந்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் அப்போதும் பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாகவே இருந்தார். திமுகவின் எம்பியான திருச்சி சிவாவும் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தினார். மன்மோகன்சிங் வாயைத் திறந்து, அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூற திமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துப் பார்த்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இதேபோல் பாரதிய ஜனதா கட்சி  தலைவர் வெங்கய்யா நாயுடுவும், இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசு வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறி தமிழக எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர் பவன்குமார் பன்சால், ஜெனீவா தீர்மானத்தில் என்ன கூறபட்டுள்ளது என்று தெரியவில்லை. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதை நிராகரித்த தமிழக எம்பிக்கள், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி தொடர்ந்து குரல் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...