Thursday, March 8, 2012

ஜாதியா?


ஈரோடு மாவட்டம் சத் தியமங்களம் வட்டம், பண் ணாரி அருகில் உள்ள ராஜன் நகரில் ஜாதி வாரியாக பிரித்து 3 அங்கன்வாடி மய் யங்கள் செயல்படுகின்றன.  ராஜன் நகரில் 400 ஒக்கி லிய சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும், 400 அருந்த திய சமூகக் குடும்பமும், 150 குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும் வசித்து வருகிறார்கள்.
இங்கு வெகுநாள் களாக மூன்று அங்கன்வாடி மய்யங்கள் செயல்படுகின்றன.
அங்கன்வாடி கட்டடத்தில் ஒக்கிலிய சமூகத்தினர் குழந்தைகளும், வனக்குழு சமூதாய கட்டடத்தில் குற வர் சமூகக் குழந்தை களும், நூலகத்தின் ஒரு பகுதியில் அருந்ததிய சமூ கக் குழந்தைகளும் தனித் தனியே தங்க வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது.
ஒரே கிராமத்தில் மூன்று அங்கன்வாடி மய்யங்கள் அமைத்து, ஜாதி ரீதியாக குழந்தைகளை பிரித்திருப் பது, குழந்தைகளின் மன தில் ஜாதிய உணர்வைத் தூண்ட வழிவகுக்கிறது என்று ஈரோடு மண்டல திராவிடர் கழகச் செய லாளர் தோழர் த. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஜாதி ஒழிப்புச் சூரிய னாம் தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா இத் தகைய கொடுமை!
இதனை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளவில்லையா? அல்லது அவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவில்லையா?
1920-களிலேயே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தி லேயே இத்தகு வேறுபாடு கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு மானியங் கள் நிறுத்தப்படும்; உரிமங் கள் மறுக்கப்படும் என்ற ஒரு நிலை உருவாக்கப் பட்டுவிட்டதே!
இதில் கூறப்படும் மூன்று ஜாதியினரும், இந்து மத சாஸ்திரங்களின்படி சூத் திரர்களும், பஞ்சமர்களும் தானே! இந்த நிலையில், இவர்களுக்குள் ஏன் இந்த இடர்ப்பாடு - வேறுபாடு?
மட்டத்தில் உசத்தி யார் என்பதுதான் பிரச்சினைக் குக் காரணமா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அவர் களுக்கே உரித்தான ஏணிப் படி முறையிலான ஏற்ற தாழ்வு (ழுசயனநன ஐநேளூரயடவைல) என்ற இந்து சமூக அமைப் பின் திட்டமிட்டு உருவாக் கப்பட்ட சூழ்ச்சிகரமான ஏற்பாடுதானே இது!
தங்களைத் தலைவர் களாகத் தக்க வைத்துக் கொள்ள ஜாதி சங்கங் களை நடத்துவோர் இது பற்றிச் சிந்திக்கவேண் டாமா? முதலில் தலைவர் களுக்குத் தெளிவு பிறக்க வேண்டும். அதன் அடிப் படையில் அடித்தட்டு மக் களுக்கு அறிவு கொளுத் திட பிரச்சாரம் திட்ட முறைகளை உருவாக்க வேண்டும்.
ஈரோடு மாவட்ட திரா விடர் கழகம் இதில் உட னடியாகக் கவனம் செலுத் தும். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுவினைக் கொடுத்து உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளும்.
இதுபோல் வேறு எந்தப் பகுதிகளிலும் நடைமுறை இருக்குமானால், உடனடி யாகக் கழகத் தலைமைக் குத் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...