Monday, March 5, 2012

திராவிடர் இயக்கம் (2) திராவிடர் இயக்கம் (2)


பார்ப்பனர்களும், அவர்களின் தொங்கு சதைகளும், தங்களிடத்தில் உள்ள ஊடகங்களின் வலிமையினால், திராவிடர்கள் என்று சொல்லுவதே உண்மையல்ல. அது ஒரு மாயை ஆங்கிலேயர் களால், கிறிஸ்துவர்களால் கட்டி விடப்பட்ட பொய்ச் சரக்கு என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
திராவிடர்கள் என்பது போலியானது என்றால் ஆரியர்கள் என்பவர்கள் யார்?
ஆர்.எஸ்.எஸ். குருநாதராகிய கோல்வால்கர், தான் எழுதிய க்ஷரஉ டிக கூடிரபாவள எனும் நூலில் என்ன கூறுகிறார்?
நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம்; நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று குறிப்பிட்டுள்ளாரே - இதற்கு என்ன பதில்?
விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவராக இருந்த அசோக் சிங்கால் என்பவர் சென்னையிலேயே பேசவில்லையா?
கடவுள் தந்த சனாதன தருமமே இந்துக்களின் அரசியல் சட்டம். ஆரியர்களே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று பேசினாரே (சென்னை 26.9.1993).
இவர்களுக்குத் தேவைப்பட்டால், ஆரியர்கள்  என்று தங்களைப் பெருமிதமாகக் கூறிக் கொள்வார்கள்.
அதே நேரத்தில் வரலாற்றின் அடிப்படையில் நம்மை நாம் திராவிடர்கள் என்றால் திரிபுவாதம் என்று திசை திரும்புவார்கள்.
காரணம் - திராவிடர்கள் என்று வருகிறபோது ஆரியர்களுக்கு எதிரானவர்கள்! ஆரிய கலாச் சாரத்துக்கு எதிரானது திராவிடர் கலாச்சாரம் என்ற உணர்வு பீறிட்டுக் கிளம்பி விடுமே என்ற ஆத்திரம் தான்.
அந்த எதிர்ப்புணர்வு தானே தமிழ்நாட்டில் ஆரியப் பார்ப்பனர்களின் ஆணவத்தையும், ஆதிக் கத்தையும் ஒடுக்கியது.
பார்ப்பன எதிர்ப்புணர்வு தான் என்னைப் பகுத்தறிவுவாதியாக ஆக்கியது என்று தந்தை பெரியார் கூறியுள்ளது இந்த இடத்தில் நோக்கத் தக்கது (விடுதலை 5.3.1969)
ஆரியர் - திராவிடர் கலப்பு ஏற்பட்டுவிட்டது; இப்பொழுது இந்தப் பிரச்சினை தேவையா என்று மேதாவித் தனமாக சிலர் பேசுவதுண்டு.
நடைமுறையை நோக்கும் பொழுது பார்ப் பனர்கள் நம்மோடு இணைந்த இனமாக இல்லையே!
அவர்கள் உயர் ஜாதிக்காரர்கள் என்பதைவிட நம்மை சூத்திரர்கள் என்று இறுக்கி வைப்பதில் தானே கவனம் செலுத்துகிறார்கள்.
ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் என்று சொல்லி பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே இதன் பொருள் என்ன?
இன்றைக்கும் தங்கள் தாய்மொழியென சமஸ் கிருதத்தைக் கருதுகிறார்களே தவிர, தமிழை ஏற்றுக் கொள்வதில்லையே!
தமிழ் செம்மொழியென்றால் கேலி செய் கிறார்களே? தமிழிலே தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
கோவில்களில் வழிபாட்டு மொழியென்றாலும் சரி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தாலும் சரி, அவற்றை மூடத்தனமாக எதிர்ப்பதோடு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்குகிறார்களே இவ்வளவையும் நடைமுறையில் செய்து கொண்டே, இப்பொழு தெல்லாம் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை எங்கே இருக்கிறது என்று கேட் கிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்களையும், அவர்களால் திணிக்கப்பட்ட பார்ப்பனீயத்தையும் கடுமையாக எதிர்த்ததால் தானே இன்றைய தினம் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் பார்ப்பனர் அல்லாத மக்கள் உரிமையையும், எழுச்சியையும் பெற்றனர்.
இன்னும், பிராமணர் சங்கம் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தான் பார்ப்பனர்களைப்பற்றிப் பேசுவது குற்றம் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். எச்சரிக்கை!


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...