Saturday, December 31, 2011

வீராப்பு!


வலிமை உள்ள லோக் பால் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வீரவசனம் பேசினார் அன்னா ஹசாரே! டில்லி யில் உண்ணாவிரதம் இருந் தார் - கொஞ்சம் சூடு பிடித்தது.

ஓகோ மக்கள் ஆதரவு பெருகி வழிந்தோடுகிறது என்கிற தன் முனைப்பில் சும்மா சண்டமாருதம் புரிந்தார்.

மும்பையிலும் மூன்று நாள் உண்ணாவிரதம் என்று வீராப்புப் பேசினார். என்ன நடந்தது? இரண்டு நாள்கூட தாக்குப் பிடிக்க வில்லை. கடை விரித்தேன் கொள் வாரில்லை மூட் டைக் கட்டினேன் என்று பட்டினிப் போராட்டத்தை நேற்றே முடித்துக் கொண் டார்.

மும்பை உண்ணா விரதத்தின்போது மக்கள் கூட்டம் காணப்படவில்லை. வெறிச் சோடிக் கிடந்தது என்று, இதுவரை அவரைத் தூக்கிப் பிடித்த ஊடகங்கள் கூட கை விரித்து விட்டன.

வேறு வழியின்றி பட்டினிப் போராட்டத்தைக் கைவிட்டார். சனவரி முதல் தேதியிலிருந்து சிறை நிரப்பும் போராட்டம் என்று தோள் தட்டினாரே - அதை யும் நடத்தப் போவதில்லை யாம்! சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற கதை தான்.

தொடக்கத்திலேயே மத்திய அரசு கண்டு கொள் ளாமல் இருந்தால் இவர் ஆட்டம்  முதல் காட்சி யிலேயே மூடு விழாவைக் கண்டு கொண்டு இருக் கும்.

5 மத்திய அமைச்சர்கள் ஓடோடிச் சென்று வரவேற் றதும் கனம் மண்டையில் ஏறி விட்டது, அவ்வளவு தான், நாடே தன் கைக்குள் என்று சலாம் வரிசை ஆட ஆரம்பித்து விட்டார்.

ஊடகங்களின் விளம் பர வெளிச்சத்தால் பாமர மக்களும் விட்டில் பூச்சி களாக ஈர்க்கப்பட்டனர். எவ்வளவு நாள்களுக்குத் தான் தாக்குப் பிடிக்க முடியும்?

தூக்கி விடுகிற பூனையா எலியைப் பிடிக்கும்? எலியைக் கண்டவுடன் பாய் வதுதானே உண்மையான பூனைக்கு அடையாளம்?

கடைசிக் கடைசியாக லோக்பால் மசோதாவுக்கு அடுத்த கட்டமாக ஊழல் ஒழிப்பு விசாரணைக் குழு வுக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் தொடர்பான மசோதாவுக்கு பிஜேபி ஆதரவளிக்கவில்லை என்றவுடன், ஆசாமி ரொம்பவும் சோர்ந்துதான் போய் விட்டார்.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? ஹசாரேயை வளர விட்டால் பிரதமர் பதவி என்கிற கனவும் களவு போய் விடுமே என்ற அச்சம்கூட பா.ஜ.க. தலைவர்களுக்கு இருக்க லாமோ என்னவோ! தம்மை விஞ்சாமல் கைக்குள் அடக்கமாக இருக்கும் வரைக்கும் சரிதான்; விஞ்சி விட்டால் ஹசாரேவுக்கு ஏற்பட்டுள்ள கதிதான்!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...