Monday, May 2, 2011

அய்.நா. அமைத்த வல்லுநர் குழு என்ன சொல்கிறது? - 2


பொறுப்பேற்பது என்ற இலங்கை அரசின் கருத்து அனைத்துலக தரத்துக்கு ஒத்தவையாக இல்லை என்ற முடிவுக்கு இக் குழு வந்துள்ளது. உரிமை மீறல்கள் பற்றிய குற்றச் சாற்றுகளுக்கு உண்மையான நோக் கத்துடன் நிவாரணம் அளிக்கவும்,  பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் கவுரவம் ஆகியவற்றைத் தங்களின் பொறுப்பேற்றுக் கொள்ளும் நடவடிக்கையின் அணுகுமுறையில் மய்யமாக வைக்கவும் அரசு முன்வராத வரையில், இலங்கை அரசு மேற் கொள்ளும் நடவடிக்கைகள் அனைத் தும் அனைத்துலக எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப இருக்கத் தவறிவிடும்.

பாடம் கற்றுக்கொண்டு பரிகாரம் தேடும் ஆணையம்
பயனுள்ள வகையில் செயல்படவில்லை


பாடம் கற்றுக்கொண்டு பரிகாரம் தேடுவதற்கான ஆணையம்   அமைக்கப்பட்டது, சிறீலங்கா வின் போராட்டம் பற்றி தேசிய அளவி லான ஒரு விவாதம், பேச்சு வார்த்தை நடத்துவதற்குக் கிடைத்த பயன் நிறைந்த ஒரு வாய்ப்பாகும்.

ஆனால், அதன் உறுப்பினர்களில் சிலர் முரண்பட்ட நோக்கங்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்த தால் ஆணையத்தின் நோக்கம் சமரசப் படுத்திக் கொள்ளப் பட்டு, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை வகித்தல் என்ற முக்கியமான அனைத்துலக தரங் களுக்கு ஏற்றவாறு இந்த ஆணையம் செயல்படவில்லை.

அனைத்துலக மனிதநேய, மனித உரிமை சட்டங்களை பெரும் அளவில் மீறியதாகக் கூறப் பட்ட குற்றச் சாற்றுகளைப் பற்றி புலன் விசாரணை செய்து கண்டு பிடிக்கவோ  அல்லது பல பத்தாண்டு காலமாக தீராமல் நீடித்துவரும் இனப் போராட் டத்தின் அடிப்படைக் காரணங்களைக் கண்டு பிடித்து பரிசீலனை செய்யவோ  இயலும் அளவுக்கு இந்த ஆணையத் தின் பணியும், அது செயல்படும் முறையும் இருக்கவில்லை. போரின் இறுதிக் கட்டத்தின் போது என்ன நடந்தது என்பதைப் பற்றி உண்மையைக் கண்டறியும் நோக்கத் துடன் இந்த ஆணையம் செயல்பட வில்லை.

போரின்போது இரு பக்கத் தினரும் நிகழ்த்திய மோசமான மனித உரிமை மீறல்ககள் பற்றி முறையாகவும், விருப்பு வெறுப்பின்றி நடு நிலையாக வும் புலன் விசாரணை செய்ய இந்த ஆணையம்  முன்வரவில்லை. பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்களுக்கும் கவுரவத்திற்கும் முழு மரியாதை அளிக்கும் அணுகுமுறை ஒன்றினை இந்த ஆணையம் மேற்கொள்ள வில்லை. தனிப்பட்ட முறையில் தங் களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலையிலும் கூட சாட்சியம் அளிக்க முன் வந்தவர்களுக்குப் போதுமான பாது காப்பை இந்த ஆணையம் வழங்கவில்லை.

மொத்தத்தில்,   பொறுப்பேற்று நிவா ரணம் அளிக்கும் நடைமுறையை அனைத் துலக தரத்திற்கு ஏற்ற வகையில் பயன் நிறைந்த வகையில் பின்பற்றாத இந்த ஆணையம் முற்றிலும் தவறாக செயல்படுவ தாகவே அமைந்துவிட்டது.

நீதித்துறையும், ராணுவ நீதிமன்றங்களும் கூட
பயனுள்ள வகையில் செயல்படவில்லை



உரிமை மீறல்களுக்குப் பொறுப் பேற்று நிவாரணம் அளிக்கும் பணியில் நீதித் துறை ஒரு முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும். என்றாலும், இலங்கை நீதித் துறையின் கடந்த கால செயல்பாடுகள், தற்போதைய கட்டமைப்பு ஆகியவற்றைப் பரி சீலனை செய்ததன் அடிப்படையில்,  தற்போது நிலவும் அரசியல் சூழ் நிலையில் அதனால் நீதி வழங்க முடியும் என்ற நம்பிக்கை இந்தக் குழுவிற்கு சிறிதும் இல்லை. அதற் கான ஆற்றல் அதனிடம் இருந்தாலும், அதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் போனதே அதன் காரண மாகும்.

குறிப்பாக, அதிகப்படியான அதிகாரங்கள் அதிபரிடம் குவிக்கப் பட்டுள்ளதால்,  அண்மைக் காலமாக அட்டார்னி ஜெனரல் பதவியின் சுதந்திரம் பலவீனப்படுத்தப்பட்டு விட்டது. மேலும்,  மனித உரிமைகளுக்கான உத்திரவாதம் அளிப்பதை நிலைநாட்டும்போது,  அலு வலர்கள் செய்த தவறுகளை சரிசெய்ய இயன்ற ஒரு நீதித்துறை நடைமுறை செயல் படுவதற்கு, நெருக்கடி நிலை சட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும், அத்துடன்  தற்போதுள்ள தீவிர வாத தடுப்புச் சட்டத்தின்  நிலையும் சேர்ந்து முக்கியமான தடைகளாக விளங்குகின்றன.

அது போன்றே, போரின் இறுதிக் கட்டத்தின் போது நடைபெற்ற உரிமை மீறல் மற்றும் இதர குற்றச்சாற்றுகள் நம்பத்தக்கவை என்று அடையாளம் கண்ட போதும், ராணுவ நீதிமன்றங்கள்  பயன் நிறைந்த,   பொறுப்பேற்று நிவாரணம் அளிக் கும் ஒரு நடைமுறையைப்  பின்பற்ற வில்லை.

எண்ணற்ற மனித உரிமை மீறல் பிரச்சினைகளை விசாரிக்க கடந்த முப்பதாண்டு காலத்தில் விசாரணை ஆணையங்கள் பல நியமிக்கப்பட்டுள்ளன. முக்கியமான உண்மைகளைக் கண்டறியும் நோக்கத்தை அவற்றில் சில எட்டியுள்ளன என்றாலும், மொத்தத்தில் அவ்வாறு அடையாளம் காணப்பட்ட உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்குவதில் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட இந்த விசாரணை ஆணையங் கள் தவறி விட்டன.

பல ஆணையங்கள் தங்களின் விசாரணை அறிக்கைகளைக் கூட தயாரித்து அளிக்கவில்லை. அப் படியே அறிக்கைகளை அளித்த வழக்கு களிலும், ஆணையத்தின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

சிறீலங்காவின் மனித உரிமை ஆணை யமும் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்ற இயலும்.  என்றாலும், காணாமல் போன குடிமக்களைப் பற்றிய வழக்கு களைக் கண்காணிப்பதிலும்,  காவலில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நலனைப் பேணுவதிலும் இந்த ஆணையத்துக்கு அரசியல் உறுதிப்பாடும், நிதிஆதாரங் களும் உள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு நம்பி எதிர்பார்க்கிறது. ஆனால் அது முடியுமா என்பதில் இந்த குழு இன்னமும் சந்தேகம் கொண்டதாகவே உள்ளது.

உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று
நிவாரணம்  வழங்குவதில் உள்ள இதர தடைகள்


நாட்டில் நீடித்த அமைதி நிலவுவதற்கு இடையூறு விளைவிக்கும், உரிமை மீறல் களுக்கு உண்மையாகப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கும் முயற்சிகளை முறியடிக்கும், தீர்க்கப்படாத சமகாலப் பிரச்சினைகள் பல இலங்கையில் உள்ளன என இந்தக் குழு காண் கிறது. அத்தகைய பிரச்சினைகளில் முக்கியமானவை வருமாறு:

1) அரசியல் அங்கீகாரத்திற்கும், சுயஆட்சி உரிமைக்குமான தமிழர் களின் விருப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும், இலங்கை அரசு பின்பற்றிய ராணுவ நடவடிக்கையின் காரணமாக பெருமளவு மனித உயிர் இழப்பு ஏற்பட்டதை  அரசு மறுப்பதும்.

2) இந்தப் போராட்டத்திற்கு மய்ய மாக விளங்கிய உண்மையான அல்லது கற்பனை செய்து கொள்ளப்பட்ட, இனத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார களங்களில் ஒதுக்கிவைப்பது என்ற தற்போது பின்பற்றப் படும் கொள்கைகள்.

3) நெருக்கடி நிலை சட்டங்கள் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் மட்டுமல்லாமல் போர்க்கால நடவடிக்கை களையும் தொடர்வது, பழைய போராட்ட பகுதிகளைத் தொடர்ந்து ராணுவப் பகுதிகளாக அறி வித்து, துணை ராணுவப் படையை நிலை கொள்ளச் செய்து பயன்படுத்தி வருவது ஆகியவை அனைத்தும் அச்சமும் வன்முறையையும் நிறைந்த ஒரு சூழலைத் தொடரச் செய்வது.

4) ஜனநாயக ஆட்சிக் கொள் கைக்கு மாறாக, ஊடகங்களின் மீது கட்டுப்பாடுகளை விதித்தல், மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத் துதல்.

5) பல பத்தாண்டு காலமாக விடு தலைப்புலிகளுக்கு முக்கியமான தார்மீக மற்றும் பொருளளவிலான ஆதரவை அளித்து வந்த தமிழ் மக்களின் பங்கு. வன்னியில் நடந்த மனிதநேயமற்ற பேரழிவுக்கு விடுதலைப்புலிகளுக்கும் பங்குண்டு என்பதை அவர்களில் சிலர் ஒப்புக் கொள்ள மறுப்பது நீடித்த அமைதிக் கும், உரிமை மீறல்களுக்குப் பொறுப் பேற்று நிவாரணம் வழங்குவதில் மேலும் ஒரு தடையை ஏற்படுத்தி வருகிறது.
(தொடரும்)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...