Thursday, October 20, 2011

அத்வானி ஒப்புதல் வாக்குமூலம் பிஜேபியும் ஊழல் கட்சிதான்!


அத்வானி ஒப்புதல் வாக்குமூலம் பிஜேபியும் ஊழல் கட்சிதான்!


நாகபுரி, அக்.20- பி.ஜே.பி.யும் ஊழல் கட்சிதான் என்று ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

பா.ஜ.க., மூத்த  தலைவர் எல்.கே. அத் வானி ஊழலை ஒழிப்ப தாகவும்,  வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு  வர வேண் டும் என்றும் கூறி ரத யாத்திரை நடத்தி வருகிறார்.

அவர் இம்மாதம் 11ஆம் தேதியன்று பீகா ரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த ஊரான சிதாப்தியாரா வில் இந்த யாத் திரையைத் தொடங்கி னார். பீகார் முதல் அமைச்சரும், அய்க்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கொடிய சைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க., பொதுச் செய லாளர் அனந்தகுமார், செய்தித் தொடர் பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த யாத்திரை அடுத்த மாதம் 20ஆம் தேதி யன்று டில்லியில் நிறை வடைகிறது. டில்லியில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களைச் சேர்ந்த தலை வர்கள் உரையாற்று கிறார்களாம்.

நாகபுரியில் நேற்று ரத யாத்திரை நடந்தது. ரூ.500 லஞ்சம்

பொதுக் கூட்டத் தில் எல்.கே. அத்வானி பேசினார். செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மத்தியப் பிரதேசத்தில் அத்வானியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களுக்கு கவரில் வைத்து ரூ.500 கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விவ காரம் குறித்து செய்தி யாளர்கள் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்கு அத்வானி பதில் அளித் தார்.

அவர் கூறியதாவது:

பி.ஜே.பி.யின் ஊழல்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, நாங்கள் விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர் அதைப் புறக் கணித்தார். அதனால் தான் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடத் தப்படுகிறது என்பது தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கை வெளிவந்தவுடன் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று எடியூரப்பா விடம் நாங்கள் கண் டிப்புடன் கூறினோம்.

ஆனால் அவர் அதன் படி நடக்கத் தவறி விட்டார். இதனால் தான் இந்த இக்கட் டான நிலை ஏற்பட் டுள்ளது. ஊழல் பிடி யிலிருந்து பி.ஜே.பி.யும் தப்பவில்லை இதை ஒரு பாடமாக எடுத்துக்  கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ இடம் கொடுக்கக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அத் வானி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...