Thursday, October 27, 2011

கடவுளுக்குக் குழிதோண்டும் அறிவியல் சாதனைகள்


உலகைப் படைத்தவர் கடவுள் என்ற நம்பிக்கை விஞ்ஞான உலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதற்காக  அமெரிக்க விஞ்ஞானிகள் ஜான்மாதெர் மற்றும் ஜார்ஜ் எஃப் ஸ்டூட் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1899 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட துணைக் கோளின் உதவியுடன் எடுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் இது ஏவப்பட்டது. உலகம் தோன்றிய மூன்று லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னிருந்த நிலையை ஆய்ந்தனர். ஒளியின் இடையே உள்ள சிற்றலைகளைக் கொண்டு பால் வீதியில் உள்ளவை எப்படி நெருங்கி வந்தன என்பதை ஆய்ந்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சூரியனின் சுழற்சியில் வெடித்துச் சிதறிய  துண்டம் பூமியாக உருவானது எனும் பிக்பாங் (Big Bang) கொள்கைக்கு உரம் சேர்த்துள்ளனர் என்று நோபல் பரிசளிப்புக் குழுத் தலைவர் - இயற்பியல் அறிஞர் பெர்கார்சன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பூமி கடவுளால் படைக்கப்பட்டது என்பது அடிபட்டுப் போயிற்று.
சென்னை அய்.அய்.டி.யில் உரையாற்றிய (15.9.2010) பிரபல அறிவியல் அறிஞர் லின்டர் வொன்ஸ் இந்த உலகம் இயற்கை ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒருவரால் வடிவமைக்கப் பட்டு உருவானது என்னும் கூற்றை நம்ப வேண்டாம் என்று பேசினார். அய்ரோப்பாவில் உள்ள செர்ன்-அய் அடிப்படை யாகக் கொண்ட பெரிய ஹேட்ரன் மோதல் திட்டத்தின் தலைவர் இவர்! (The Project Head of the Cern Based Large Collider).
நாம் வாழும் புவிக் கோளை உள்ளடக்கிய உலகம் கூர் அறிவாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது எனும் கோட்பாடு தவறானது என்றார். உலகைப் பற்றிய கோர்வைக் கோட் பாட்டையும் (ஸ்ட்ரிங் தியரி)  தவறானது என்று கூறினார். பூமி தன்னுள் கொண்ட பிரபஞ்சம் அல்லாமல், வேறு பலப்பல பிரபஞ்சங்கள் இருக்கின்றன என்பது நம்புதற்கு உரியதன்று. பரிசோதனை மூலம் சோதித்துப் பார்க்க இயலாத முன்கூட்டிய தகவல்களைத் தருகிற எந்த ஒரு கோட்பாடும் போலியான தாகும் என்றும் அறுதியிட்டுக் கூறினார் சென்னை அய்.அய்.டி.,யில்.
அதேபோல, பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை என்பதை பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் கூறியுள்ளார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக உயிரைப் படைத்தவர் கடவுள் அல்ல என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெ.கிரேய்க் வெண்டர் என்ற விஞ்ஞானி முற்றிலும் செயற்கையான ஓர் உயிரணுவை உண்டாக்கிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் செயற்கை மரபணு வரிசை தொழில் நுட்பத்தின்மூலம் முற்றிலும் புதிய உயிரிகளை உருவாக்கி பல நடைமுறை செயல்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார். எடுத்துக்காட்டாக தடுப்பு மருந்துகள், உயிரி எரிபொருள்கள், பிற மருந்து வகைகள் போன்றவற்றைத் தயாரிக்க புதிய மரபணு வரிசைகளைப் பயன்படுத்திட முடியும்.
உடல் என்பது மரபணுக்களால் உருவாக்கப்படுவதாகும். நமது உடலில் உள்ள நகல் மரபணுக்கள் நமது முன்னோர் களிடத்திலிருந்து தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வருகின்றன.
மரபணுக்கள் தாம் உடலின் தோற்றத்தையும், இயக்கத் தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. பெரும்பாலான மனநோய்கள், பரம்பரையாக வரும் புற்றுநோய்கள், உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், மன வளர்ச்சியின்மை, இள வயது தலைவழுக்கை உள்ளிட்ட 13 ஆயிரத்து 700 நோய்கள் மரபணுக்களால்தான் வருவதாக பிரபல மரபியல் மருத்துவர் டாக்டர் த. ஜெகதீசன் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட மரபணுவை மாற்றி அமைப்பதன்மூலம் பரம்பரை நோய்களைக் குணமாக்கலாம்; மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல்கூட வாழலாம் என்று அறிவியல் கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் பீட்டர் ஸ்மித், மனிதன் சாதாரணமாக 150 ஆண்டு காலம் வாழ்வதற்கான மாத்திரை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்டுவேர் பல்கலைக் கழகப் பேராசிரியரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகிறார்: மனிதன் வயது முதிர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது உடலில் உள்ள ஜீன்கள் குழுவே! அவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற் றுள்ளது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் எனும் தாவரத்திலும் உள்ளது. இதனை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அவற்றின் வாழ்நாள் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில்தான் மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் மாத்திரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
தந்தை பெரியார் சொன்ன கடவுளை மற - மனிதனை நினை என்னும் தத்துவம் நிரூபணம் ஆகி வருகிறது அல்லவா!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...