Wednesday, October 26, 2011

சூட்சமம் புரிகிறதோ!


ஆரியத்தில் நஷ்டக் கணக்கு என்பது மட்டும் கிடையாது. கல்யாண வீடாக இருந்தாலும் சரி, கருமாதி வீடாக இருந்தாலும் சரி, பார்ப்பனச் சுரண்டலுக்குத் தட்டுப்பாடு என்பது மட்டும் கிடையவே கிடையாது. ஆந்திராவில் பாபட்லா என்னும் ஊரில் இருந்த நாராயணசாமி கோயில் கோபுரம் நேற்று இடிந்து விழுந்தது. இம்புட்டுதானா கடவுள் சக்தி என்று மக்கள் சிந்திப்பதற்குக்கூட இடம் கொடுக் காமல், நேரம் ஒதுக்காமல் உடனே ஓர் அறிவிப்பு!
பார்ப்பனர்கள் பரிகார பூஜைகளை செய்ய ஆரம் பித்து விட்டார்களாம். யாகங்கள் தடபுடலாம்...
பார்ப்பனச் சுரண்டல் எப்படியெல்லாம் தந்திர முறையில் ஜாம் ஜாமென்று நடக்கிறது பார்த்தீர்களா?
ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் இந்தச் சூட்சமங்கள் எல்லாம் டக்கென்று புரியும் - புரியுதோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...