Sunday, October 30, 2011

பூமி மாறி மாறி ஆளப்படுவது - ஏன்?


பூமி மாறி மாறி ஆளப்படுவது - ஏன்?


நாட்டை மன்னர்கள் மாறி மாறி ஆள்கிறார் களே, ஏன் தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு சங் கதியை இப்பொழுதா வது தெரிந்து கொள் ளுங்கள்.
அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில் (அய்ப்பசி 14 - அக்டோபர் 31) தெரிந்து கொள்ள வேண்டாமா?
நவராத்திரி முடிந் தது, தீபாவளியும் கழிந் தது அடுத்து சுரண் டலுக்கு வழி தேட வேண்டாமா?
வந்துவிட்டது - ஆம், வந்து விட்டது கந்தசஷ்டி! கந்தன், சுப்பிரமணியன், முருகன், ஆறுமுகன் எல் லாம் ஒரு பொருள் பன் மொழிகள்!
ராமநவமி, கிருஷ் ணன் அஷ்டமி, விநாய கர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி - அற்றவன் கடவுள் பிறப்பு, இறப்பு என்று சொல்லிக் கொள் வார்கள்; ஆனால் கடவுள்களின் பெரிய ஜாபிதா அதற்குப் பிறந்த நாள்கள் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.
வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?
சிவனை வேண்டினர் - கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண் டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் நடந்ததாம்.
இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறை யிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.
அதன் விளைவு வீரியம்  ஆறாகப் பெருக்கெடுத்த தாம். தேவர்கள் கைகளில் ஏந்தி குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீ புரத்தில் உள்ள கரகரீஸ் வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.
மீதி வீரியத்தை கங்கை யில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற் றாம்.
ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப் பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன் றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் (தலைகள்) கைகள் பன்னிரெண்டாக வும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத் தின் கதையாம்.
இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரி யம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலி ருந்து பிறந்ததால் ஸ்கந் தன் - கந்தன் என்று பெய ராம்.
இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படு கிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண் டாட வேண்டும்.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங் குன்றம், திருச்சீரலை வாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை ஆகிய இடங் களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை பக்தர்களிடமிருந்து!
அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான் - தனக் குரிய வீரியத்தைப் பூமி தேவி தாங்கியதால் பார் வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.
உன்னை மாறி மாறி அரசர்கள் ஆளக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்!
கடவுளைக் கற்பித் தவன் முட்டாள், பரப் பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப் புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...