Saturday, October 29, 2011

சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்


சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்


இசுலாமிய தீவிரவாதம் இந்தியப் பாதுகாப்பிற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.

2012--_க்குப்பின் பாகிஸ்தானைத் தலிபான் கைப்பற்றும்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும். இசுலாமிய தீவிரவாதத் தின் இலக்கு அடுத்த இந்து இந்தியா வாகத் தான் இருக்கும்.

இசுலாமிய வெறியர்கள் இந்தியா வில் தங்கள் பணி இன்னும் நிறைவுற வில்லை என்றே நம்புகின்றனர். இசுலாமியர் வென்றெடுத்த நாடுகளில் எல்லாம் 100 சதவிகிதம் பேர் இசுலாமியராக மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் சூழ்ச்சி இந்தியாவில் மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. இன்னும் இந்தியர்களில் 75 சதவிகிதம் இந்துக் களாக இருப்பதில் இசுலாமிய மத வெறியர்களுக்கு உடன்பாடில்லை. இந்த நிலைக்கு இந்துக்களே காரணம்.

இந்துக்களில் சரிபாதி பேர் தம் சாதிய வேறுபாடுகளை மறந்து இந்துக்களாக வாக்களித்தால், இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் ஒரு தூய்மையான இந்துக்கட்சி ஆட்சிக் கட்டிலேறும்.

தீவிரவாதிகளின் தாக்குதலை, தனி மனிதர் மீதான தனித்தாக்குதலாகக் கருதாமல் ஒரு இந்துவின்மீது, இந்துமதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருத வேண்டும்.

இந்நாட்டில் வாழும் இசுலாமி யர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இசு லாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.

இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.

இந்தியர்களிடம் இந்தத் தேசியப் பண்பை உருவாக்க வேண்டும். மன்மோகன்சிங் தனி மனிதர் என்ற அளவில் நல்ல பண்புடையவராக இருக்கலாம்; ஆனால் அரைகுறை கல்வி அறிவைப் பெற்ற சோனியா காந்தியின் சீடனாக இவர் செயற் படுவதற்கு காரணம் மன்மோகனிடம் தேசியப் பண்பு இல்லாமைதான்.

தீவிரவாதிகள் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளுக்கும் இணங்கக் கூடாது. திருப்பியடிப்பதுதான், இந்துக் களின் கொள்கையாக இருக்க வேண்டும். இசுலாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள கீழ்க்கண்ட யுக்திகளைக் கையாள வேண்டும்.

அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக் கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.

ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.

இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க; வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குக. இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந் துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.

ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க: இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது. சாதி பிறப்பினடிப்படையில் அல்ல; ஒழுக்கத்தின் அடிப்படையில் எனப் பிரகடனப்படுத்துக. இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துவாக மாறத் தடையில்லை.

உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல். இந்தியாவில் எழுந்துள்ள இசுலாமிய தீவிரவாதத்தை மேற்கண்ட யுக்திகளால் அய்ந்து வருடத்திற்குள் தடுத்துவிட முடியும்.

இந்தியாவில் வாழும் இந்துக்கள் 50 சதவிகிதம் பேர், இந்து வாக்காளர்களாக மாறினால் போதும். இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கலாம்.

இந்தியாவில் அவ்வப்போது நிகழ்த் தப்பெறும் தீவிரவாதச் செயல்களுக்கு இசுலாமியரே காரணம் என்றும், இப்போதும் இன்னும் தொடரப் போவதாகவும் இசுலாமிய மத வெறியர்களின் பணி இந்தியர்கள் அனைவரையும் இசுலாமியர்களாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறாநிலையில், இன்னும் 75 சதவிகித பேர் இந்துக்களாக இருப்பது இசுலாமியர்களின் பணி முடியவில்லை என்பதைக் காட்டுவதாகவும் சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா? விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?

சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத் துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை. நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன. மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. குடிமைச் சமூக அமைப்புகளுக்கு சுப்பிரமணியன் சாமியின் பேச்சின் சாரம் சென்றடைய வில்லையோ என்று எண்ணுமளவிற்கு மவுனம் சாதிக்கின்றன. ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போராட்டப் பேரலையில் சுப்ரமணியன் சாமியின் பகைப்பேச்சுகள் மூழ்கி விட்டனவோ? இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை. தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thoughtஎன்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், இவர்கள் இந்தியாவில் வாழலாம்; எப்படி? எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம். கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது.

மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி? அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிர மணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?

பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார்.

மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா? சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?

மும்பையில் சூலை 13, 2011 அன்று நடந்த குண்டு வெடிப்புக்கு எதிர் வினையாற்றியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இக்குண்டு வெடிப்புகள் இந்துக்களிடம் ஏற்பட வேண்டிய எதிர் வினைகளைச் சுட்டிக் காட்டுகிறார். இக்குண்டு வெடிப்புகள், இசுலாமிய தீவிரவாத யுக்தியின் ஒரு பகுதியே என்று கூறி, தீவிரவாதம் என்றாலே இசுலாமிய தீவிரவாதமாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார். அய்தராபாத் மசூதி குண்டு வெடிப் பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும், காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வரு கையில், இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது?

- தேவா
(ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை
How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)
நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...