Friday, July 8, 2011

சமச்சீர் கல்விக்கு எதிரான அறிக்கை கொளுத்தப்பட்டது


சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழக அரசின்போக்கினைக் கண்டித்து
திராவிடர் கழக மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டம்


சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கினைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில், அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியார் சிலையருகே, திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலாளர் மு. சென்னியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில இளைஞரணி துணை செயலாளர் செ. தமிழ்சாக்ரடீசு, சென்னை மண்டல மாணவரணி அமைப்பாளர் பா. மணியம்மை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

இவ்வார்ப்பாட்டத்தில், சமச்சீர் கல்விக்கு எதிராக கல்வி வியாபாரிகள் மற்றும் பார்ப்பனர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அக்கிரகாரக் குழுவின் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தமிழர் வரலாற்றையும், திருவள்ளுவர், பெரியார், அண்ணா, டி.எம். நாயர், தியாகராயர் போன்ற தலைவர்களின்பற்றிய பாடங்களை மறைத்தும், கிழித்தும் பாடத் திட்டத்தை சீரழித்துள்ள மனுதர்ம போக்கினைக் கண்டித்து சென்னை மாவட்டத்திலுள்ள திராவிடர் கழக மாணவரணியினர் திரளாகக் கலந்துகொண்டு விண்ணதிர முழக்கமிட்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...