Tuesday, May 3, 2011

பத்திரிகை


இன்று உலகப் பத்திரிகை நாள். பத்திரிகை மக்களின் கண்களுக்குக் காட்சியாகவும், கருத்துக்குத் தீனியாகவும் இருக்க வேண்டியவை.

ஆனால் நம் நாட்டுப் பத்திரிகைகள் எந்தத் தரத்தைச் சேர்ந்தவை? நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்றார் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
அதில் என்ன சந்தேகம்?

வெகு காலத்திற்கு முன்பு கூடப் போக வேண் டாம். மகர தீபம் என்பது உண்மையல்ல; செயற்கை யானதுதான்; தேவசம்  போர்டு ஏற்பாடு செய்தபடி அரசு ஊழியர்கள்தான் பொன்னம்பலமேட்டுப் பகுதியில் தீபம் ஏற்று கிறார்கள் என்று தேவசம் போர்டே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. அதே நேரத்தில் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும் கூறி இருக்கிறது.

பொதுவாக இந்த இரண்டு தகவல்களும் பல ஏடுகளில் வெளிவந்தி ருக்க, தினமலர் (26-4-2011) எப்படி தலைப்புப் போடுகிறது தெரியுமா?

இயற்கையானது மகரஜோதி

என்று தலைப்புப் போடு கிறது - சரி, போட்டுத் தொலையட்டும்.

மகரதீபம் செயற்கையா னதுதான்; மனிதர்களால் ஏற்றப்படுவதுதான்; அதற்கு தெய்வீக சந்தியி ருக்கிறது என்று தேவசம் போர்டு ஒரு போதும் சொன்னதில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதி காரப் பூர்வமாக கூறப்பட் டுள்ளதே - அது குறித்து ஒரு வரி இல்லையே ஏன்? இருட்டடிப்பு ஏன்?

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் நுண்பொருள் இப்பொழுது விளங்கி இருக்குமே!

விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டிய ஊட கங்கள் இன்னும் ராசி பலன்களை வெளியிட்டு, மக்களை மடமைக் குழியில் தள்ளி மண்போட்டு மூடு கிறதே. இதைவிட மனிதர் களுக்குச் செய்யக் கூடிய பெருங்கேடு ஒன்று இருக்க முடியுமா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஏடுகளின் நேர்த்தியும், நேர்மையும் எத்தகையது!

குடிஅரசு இதழின் பக்கங்களை 16 ஆகக் குறைக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டது. இத னால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடு வது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக, விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரி வித்தார். (பெரியார் ஈ.வெ.ரா. - ஆறு. அழகப்பன் - சாகித்திய அகாதெமி வெளியீடு, பக்கம் 60)

பத்திரிகை உலகில் இந்த நேர்மையைக் கடைப் பிடித்தவர் பெரியார் அல் லாமல் வேறு யார்? குடிஅரசு விடுதலை  புரட்சி,  பகுத்தறிவு, உண்மை இவை தந்தை பெரியார் சூட்டிய தனித் தமிழ்ப் பெயர்கள். தமி ழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று வினவும் அரைகுறைகளுக்கும் இந்தப் பெயர்களே பதில்!

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...