Tuesday, January 4, 2011

திராவிடர் கழகத்தின் தனித்தன்மை என்ன?

நாத்திகக் கொள்கையை மக்கள் இயக்கமாக நடத்தி வருவது திராவிடர் கழகம் மட்டுமே. தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு இருக்கும் தந்தை பெரியார் சிலைப் பீடங்களில் கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனை உலகில் வேறு எங்கும் பார்க்கவே முடியாது. கம்யூனிஸ்ட் நாடுகளிலும் காணவே முடியாது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளி வந்தது. அதில் காஞ்சிபுரத்தைப்பற்றி எழுதியிருந்தார் கட்டுரையாளர்.

காஞ்சி சங்கர மடத்தின் முன் பெரியார் சிலை இருக்கிறது. அதில் கடவுள் மறுப்பு வாசகமும் உள்ளது. இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
காலையில் சங்கராச்சாரியார் எழுந்தால் பெரியார் முகத்தில்தான் முழிக்க வேண்டும்.

திராவிடர் கழகம் வெறும் கடவுள் மறுப்பை மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை; சமுதாயத்தோடு இணைந்த பல பிரச்சினைகளை அதனையொட்டி செய்கிறது. கடவுளின் பெயரைச் சொல்லித்தான் ஜாதியைக் காப்பாற்றுகின்றனர்.

கடவுள் மறுப்பு என்பது ஜாதி ஒழிப்பு என்ற கொள்கையை கொண்டதாகவே இருக்கிறது.

மும்பையில் 1999இல் உலக மனிதநேய பகுத்தறிவு அமைப்பின் ((IHEU) சார்பில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகம் மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டு சென்று நிறைவேற்றும்படிச் செய்தது.

ஜாதி ஒழிப்பு - அதன் விளைவான தீண்டாமை ஒழிப்பு என்பதை இந்த அமைப்பின் கொள்கையாக ஏற்கும்படிச் செய்தது.

ஜாதி ஒழிப்பு என்பது மனித உரிமை, மனிதநேயக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாகும்.


(செய்தியாளர்கள் கூட்டத்தில்
தமிழர் தலைவர் கி.வீரமணி)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...