Tuesday, January 4, 2011

உலகம் வியக்க ஒரு மாநாடு!

பகுத்தறிவு இயக்கம், நாத்திக மய்யங்கள் உலகப் பரப்பில் பல நாடு களிலும் உண்டு.
அது ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்தோங்கி நிற்பது - தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில்தான்.

வெறும் வறட்டுத் தத்துவமாக, ஏடுகளில் மட்டும் மொய்த்திருக்கும் அமைப்பாக இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்த அமைப்பாக - சிறப்புக் கொண்ட இயக்கமாக இருந்து வருவதுதான் - இதன் மகத்தான வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாகும்;

வெறும் கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு என்ற அளவில் இல்லாமல், இந்த நாட்டில் பிறப்பின் அடிப்படையில் வேர்ப்பிடித்துள்ள பேதா பேதத்தைத் தாங்கி நிற்பது கடவுள்களும், மதமும், வேத சாத்திர இதிகாச, புராணக் குப்பைகளுமாகும்.

சமூகத்தின் சமத்துவத்தன்மைக் கும், சகோதரத்துவத்துக்கும் எதிராக இருக்கும் இந்த அமைப்புகளை முற்றாக நிர்மூலப்படுத்த வேண்டும் என்று தளத்தின்மீது தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் இயக்கம் கட் டப்பட்டுள்ளதாலும், பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களுக்கான தத்து வத்தைக் கொண்ட இயக்கமாக திரா விடர் கழகம் திளைத்து நிற்பதாலும்தான் இது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிண மிக்க முடிந்தது!

பன்னாட்டுப் பகுத்தறிவு மனிதநேய அமைப்புடன் (IHEU Inter national Humanist And Ethical union) திராவிடர் கழகம் இணைப்பு உறுப்பினராக இருந்து வருகிறது (1994)

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல் வேறு மாநாடுகளில் இந்த அமைப்பில் உள்ள புகழ் பெற்ற நாத்திக நன் னெறியைக் கொள்கையாகக் கொண்ட தலைவர்கள் பங்கு கொண்டதுண்டு. தமிழ்நாட்டில் மாபெரும் மக்கள் இயக்கமாக திராவிடர் கழகம் இருந்து வருவதை நேரில் கண்டு பூரித்து, மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்த துண்டு.

2006 சனவரியில், சென்னையில் சுயமரியாதை இயக்கத்தின் 80ஆம் ஆண்டு விழாவும், பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடும் நடைபெற்றன.
பன்னாட்டுப் பகுத்தறிவு - மனித நேய அமைப்பின் (IHEU) தலைவர் ராய்பிரவுன், முன்னாள் தலைவர் லெவிஃபிராகல் பாபுகோகினேனி (லண்டன்) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்; மறுநாள் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் விழாவிலும் இந்தப் பெரு மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி கொண் டனர்.
நாடு திரும்பிய நிலையில் அந்த அமைப்பின் தலைவர் ராய்பிரவுன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எழுதிய கடிதம் முக்கியமானது.

பன்னாட்டு மனிதநேய அறநெறி ஒன்றியம்,

1. கோவர் தெரு,
லண்டன், டபிள்யு.சி-1 இ 6 எச்.டி.யு.கே.,
13 ஜனவரி, 2006


டாக்டர் வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை, இந்தியா


அன்புள்ள டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு,

என்னுடன் பணியாற்றும் லெவிஃபிராகல், பாபுகோகினேனி ஆகியோருடன் நானும், சென்ற வாரம் திராவிடர் கழகத்தின் 80ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று, உங்கள் மய்யங்களை வந்து பார்த்து, உங்கள் பல வகையான திட்டங்களைக் கண்டு, முழுமை யான மகிழ்ச்சி அடைந்தோம். நிகழ்ச்சிகள் எழுச்சியூட்டும் வகையில் இருந்தன. உங்கள் வரவேற்பும், விருந்தோம்பலும் எங்களைத் திணற வைத்தன. நீங்களும், உங்களுடன் பணியாற் றுவோரும், உங்களுக்கு ஆதர வான சிறந்த அணியினரும் செய்த உதவி, காட்டிய அன்பு, நல்ல தகவல்களை நிறைய தந்த விவாதங்கள் ஆகியவற்றிற்கு நன்றி கூறுகிறோம்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பு, கிராம வளர்ச்சி, சுற்றுச்சூழல் - உயிரினச் சமநிலையைப் பேணு தல் ஆகிய இந்தியாவிற்கு மட்டு மல்லாமல், உலகின் எதிர்காலத் திற்கே மிக முக்கியமான பிரச்சி னைகளில், பெரியார் இயக்கம் வழி நடத்திச் செல்கிறது என்பது தெளி வாகிறது.

நமது அமைப்புகளிடையே எதிர்காலத்தில் கூட்டுறவு பற்றி, செயற்குழுவில் என்னுடன் பணி யாற்றுவோருடன், அடுத்த இரண்டு வாரங்களில் விவாதிக்க இருக் கிறேன். நான் வந்திருந்தபொழுது உங்களிடம் கூறியபடி, பல நாடு களிலும் உங்கள் பணியினை மேம்படுத்தவும், விளம்பரப்படுத்த வும் பன்னாட்டு மனிதநேய அறநெறி ஒன்றியம் (அய்.எச்.இ.யு.) உதவ முடியும் என நம்புகிறேன்.

அய்க்கிய நாடுகள் அவையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக் காக, அய்.எச்.இ.யு.வின் செயல் பாடுகள் குறித்து ஓர் உரையைத் தயாரித்தேன். மாநாட்டிற்கு எனத் தயாரித்த அந்த உரையை அங்கு நிகழ்த்த முடியவில்லை. அதை இத்துடன் அனுப்பியுள்ளேன். அதை மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழில் தாராளமாக வெளியிட லாம்; அதற்காக, கட்டாயப்படுத் துவதாகவும் எண்ண வேண்டாம்.
ஏப்ரல் மாதத்தில் அய்.எச்.இ.யு. வின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இருப்பினும் அதனுடைய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவில் தொடரும் விருப்பம் உடையேன். அவ்வகை யில் எதிர்காலக் கூட்டுறவு குறித்து, உங்களுடனும், உங்கள் அணியி னருடனும் எதிர்கால ஒத்துழைப் புக்கான சாத்தியக் கூறுகளை எதிர்நோக்கியுள்ளேன்.


மீண்டும் உங்கள் விருந்தோம் பலுக்கு நன்றி!
அன்புடன்
ராய்பிரவுன்
தலைவர், அய்.எச்.இ.யு.,


ஒரு வெளிநாட்டுத் தலைவர் மனந் திறந்த நிலையில் சிந்தனையை உலவ விட்டு நேரில் கண்டவற்றை அசை போட்டு, எடை போட்டுக் கணித்தவை தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள கடிதமாகும்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு கழகம் எந்தளவு பீடுற்றுப் பிரகா சிக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. திருச்சியில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறுஆகிய நாள்களில் நடக்க இருக் கும் உலக நாத்திகர் மாநாடு, தந்தை பெரியார் அவர்களையும், நமது கழகத் தையும் அதனை வழி நடத்தும் தலை மையின் ஆளுமையையும் உலகப் பரப் புக்குக் கொண்டு சென்று உயர்த்தக் கூடியதாகும்.

புரட்சிக் கவிஞர் கணித்த மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற கவிதை வரிகளுக்கான கண் குளிர் காட்சி இது.

தந்தை பெரியார் அவர்களை நேரில் பார்த்திராத தலைமுறையினர், தந்தை பெரியார் அவர்களின் தத்துவம், இயக்கம் எவ்வளவு பெரியது என்பதை நேரில் தெரிந்து கொள்ளக் கிடைத்த அரியதோர் வாய்ப்பு இது!

நழுவ விடலாமா?
வாரீர்! வாரீர்!! என்று திராவிடர் கழகம் அழைக் கிறது; பகுத்தறிவாளர் கழகம் அழைக் கிறது! வருக - வளமான கருத்துகளைப் பெறுக!


மின்சாரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...